11/23/2009

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA): ஊதடா சங்கு!

ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

சாதி இனமத பேதம் இல்லாம
நாமெல்லாந் தமிழராய்க் கூடி
பஞ்சு போல ஒற்றி ஒற்றி
நட்பாலே துயர் துடைப்போமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

நெகிழ்ந்து நெகிழ்ந்து நெக்குருகி
உறவுகளைக் கண்டு நாங்கள்
இலக்கியம் காணுவோம், கூடவே
பள்ளும்பாடி பாணர் ஆகிடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

நிலாச்சோறும் ஊட்டுவோம், நின்று
எங்கள் கிராமியத்தை நெனைச்சிடுவோம்
நேசங்கள் கண்டு நாங்க மகிழ்ந்திடுவோம்
உறவுகளைக் கண்டு நெகிழ்ந்திடுமே நம்நெஞ்சம்
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

உழுது பயிரிடாம உணவுகள் கிடைச்சிடுமா?
உழைப்புகளைப்பு இன்றி வந்திடுமா குதூகலம்??
அன்னைத் தமிழ்மனம் குளிர கண்விழித்துக்
காரியமா ற்றிடுவோமே பெருமைசீர் மக்காள்!
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!



மக்களே, வணக்கம்! என்னதான் வனத்துல போய் மேய்ஞ்சாலும், கடைசில இனத்தோடதான வந்து, அடைஞ்சி ஆகணும்? எனக்கு என்னோட கனடிய அனுபவம்தான் நினைவுக்கு வருது. பன்னாட்டு கலை, இலக்கிய, கலாசாரத்தை ஆதரிச்சு அனுபவிக்கிறதுல கனடாவை மிஞ்சுவதற்கு யாரும் கிடையாது. அதுவும், டொரோண்டோ மாநகர், சொல்லிக்கவே வேண்டாம்.

இப்ப, அமெரிக்காவிலயும் அதே மனப்பாங்கு ஓங்கி வருது. என்ன காரணம்? அவரவர்கள், அவரவர் பின்புலத்தோட இயங்கும் போது வெளிப்படும் திறமையும், சமூக அக்கறையும் அந்நாட்டை மேம்படுத்துகிறது. மாற்றங்கள் கூடிய தரவுகள், பலதரப்பட்ட இரசனையை நுகர்வோருக்கு அளிக்க வல்லது. கூடவே, புரிந்துணர்வின் மூலமாக சமூகச் சீர்கேடுகள் குறைகிறது.

அப்படி, பின்புலத்தோடு ஒட்டி வாழாத பட்சத்தில் என்ன நடக்கும்? எதோ ஒரு கட்டத்தில் தனிமையின் தாக்கம், கூடவே மனவழுத்தம் போன்றவை ஓங்கி, உரசல்களும் உளைச்சல்களும் ஓங்கும். ஒவ்வாமை தலை தூக்கும். இதெல்லாம் இப்ப அனைவருக்கும் கண்கூடாகத் தெரிகிற விசயம். இதை மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அரசாளும் வல்லுனர்களுக்கு உண்மை தெரியாமலில்லை. எனவேதான் பன்னாட்டுக் கலை, இலக்கியம் மற்றும் கலாசார விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க விழைகிறார்கள்.

இந்தப் புரிந்துணர்வோடு, நமது தமிழ்ச் சங்கப் பேரவையைக் கண்ணுறுவோம். கலை, இலக்கியம், கலாசாரம், மொழி மற்றும் பண்பாடு முதலானவற்றைச் சமச்சீரோடு முன் வைத்தே செயல்படுகிறது நமது பேரவை. சென்ற ஆண்டு நிகழ்வே அதற்கு சான்று. பேரவையின் வலைதளம் மற்றும் எமது வலைப்பூ ஆகிவற்றில் நீங்கள் இப்போதும் அந்த நிகழ்ச்சியின் காணொளியைக் கண்ணுற்று அதனைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழனாக, தமிழ்ப் பேரவைக்குப் பங்களிப்புச் செய்வது நம் கடமை; உரிமையும் கூட. ஒருவர் முன்வந்து பங்களிப்புச் செய்யும் போது யாரும் அதைத் தடுத்துவிட முடியாது. ஆனால், நாம் முன்வருகிறோமா என்பதுதான், நம்மை நாமே வினவிக் கொள்ள வேண்டிய வினா. அதைவிடுத்து, நிகழ்ச்சிகள் நடைபெறும் போது மட்டுமே விமர்சனம் செய்வோர் சிலர் இருப்பார்கள்; இருக்கட்டும், தவறில்லை!

பங்களிப்புச் செய்து, பின் உடனிருந்து கண்டபின் விமர்சனம் செய்தால், விமர்சனமும் மெருகேறும்; தமிழன் என்ற வகையிலே கடமையைச் செய்தது போலவும் ஆகுமன்றோ? எனவேதான், இந்த ஊதடா சங்கு! வீழ்ச்சிக்கு ஊதுகிற சங்கு அல்ல இது, எழுச்சிக்கு ஊதப்படுகிற சங்கு மக்களே, எழுச்சிக்கு ஊதப்படுகிற சங்கு!!

ஆம், வருகிற 2010ம் ஆண்டின் தமிழ்விழா எழுச்சிக்கான சங்கு ஊதப்படும் நாள் டிச-12. அந்நிகழ்வின் போது கலைவாணர் N.S.கிருஷ்ணன் ஐயா அவர்களின் புதல்வர் நல்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு நகைச்சுவையின் நினைவோடையை நமக்கெல்லாம் பாய்ச்ச இருக்கிறார். கலந்து கொள்வோம், இனிமை பெறுவோம், எழுச்சியைப் பெருக்குவோம்!!


December 12 th, 2009
4.30 p.m
Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

Admission: Free for donors, $ 20 per head for non-donors*

RSVP: by Dec 5th 2009, by email [N Kuppuraj, nkuppuraj@gmail.com]

தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்!
தமிழன் இதயம் செழுமையின் பிறப்பிடம்!!

18 comments:

ஆ.ஞானசேகரன் said...

//ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!//

ஊதிட்டேன்! ஊதிட்டேன்....

ராஜ நடராஜன் said...

பழமையண்ணா!எப்படியிருக்கீங்க?

தமிழ்ச் சங்கப் பேரவைக்கு வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்/ உண்மையும் அது தான். வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

//சாதி இனமத பேதம் இல்லாம
நாமெல்லாந் தமிழராய்க் கூடி
பஞ்சு போல ஒற்றி ஒற்றி
நட்பாலே துயர் துடைப்போமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

//

இதுமட்டும் உண்மையிலேயே நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!!!!
ஹூம்ம்ம்ம் :((

***********

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

//

சவுத் இண்டியனா?? அப்ப வைன் அண்டு டைன்க்கு பதிலா கள்ளும்,கொறிக்கவும்னு மாத்திடுங்க

இஃகிஃகிஃகி

Unknown said...

அன்புள்ள பழமை,

தமிழ் வளர்ச்சிக்கும், பேரவை வளர்ச்சிக்கும்
உமது பங்கும், பாங்கும், அழகே, அழகு!

ஊதுங்கள் சங்கை! முழக்குங்கள் முரசத்தை!

நன்றி
முத்துவேல் செல்லையா

பழமைபேசி said...

@@ ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்!

vasu balaji said...

நீங்க கலந்துகிட்டு இங்க பகிர்ந்தாதான் உண்டு. விழா சிறப்புற வாழ்த்துகள்.

அப்பாவி முரு said...

//வானம்பாடிகள் said...
நீங்க கலந்துகிட்டு இங்க பகிர்ந்தாதான் உண்டு. விழா சிறப்புற வாழ்த்துகள்.//

அடுத்தமுறை பாலா நைனாவை விழாக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

பிரபாகர் said...

ரொம்ப நல்லா இருக்குமுங்க. முடிச்சிட்டு அதப் பத்தி எழுதுங்க. ஆவலா இருக்கோம்!

பிரபாகர்.

தாராபுரத்தான் said...

நாமும் வரணும்ேபால இருக்குது தம்பி,,,,

cheena (சீனா) said...

பஙகளிப்பு அவசியம் தேவைதான் பழமைபேசி - ஆனாலும் கண்டு களித்து ஆர்வத்துடன் பாராட்டி மகிழும் நற்குணம் படைத்தவர்களும் உண்டல்லவா - எல்லோராலும் பங்களிக்க இயலாதல்லவா - வந்திருந்து கண்டு களிப்பவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பங்கேற்பார்கள்

நல்வாழ்த்துகள் பழமை பேசி

Senthil Kumar Vasudevan said...

ஊதிடுவோம்ணா.. :)

விழா சிறப்புற வாழ்த்துக்கள்..

naanjil said...

தம்பி உங்க பாடல் அருமை.

2009 தமிழ்ச் சங்கப் பேரவையில் உங்கள் சேவை போற்றதற்குரியது.

2010 விழா பற்றிய உங்கள் பாட்டும் எழுத்து எங்களுக்கு ஊக்கமூட்டுகிறது.

நன்றி உரித்தாகுக.
அன்புடன்
அண்ணன் நாஞ்சில் பீற்றர்

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
நீங்க கலந்துகிட்டு இங்க பகிர்ந்தாதான் உண்டு. விழா சிறப்புற வாழ்த்துகள்.//

நானும் இதையே சொல்லிக்கிறேன்.

மணிப்பயல் said...

மாவீரர் தின வாழ்த்துக்கள்!

அது சரி(18185106603874041862) said...

விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

-/சுடலை மாடன்/- said...

பழமைபேசி,

பலர் கூடி இழுக்க வேண்டிய பேரவைத் தேருக்கு உங்கள் கைகளை வழங்கியிருக்கிறீர்கள்.
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

ஆரூரன் விசுவநாதன் said...

முதலில் தலைப்பைப் படித்தவுடன் நாட்டு வழக்கில் தவறாக புரிந்து கொண்டேன்.

"எங்கள் பகைவர் எங்கோ பறந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு" என்ற வரிகளை நினைவு படுத்தும் விதமாக தோன்றியது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்