3/02/2009

எச்சரிக்கை: நெகிழ்மனம் உடையோர், இது கண்டு மனம் கோண வேண்டாம்!


மூலம்: மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றது! 65க்கு அருகண்மையில் உள்ள சிறு சதுரவடிவத்தைச் சொடுக்கி, பெரிதாகப் பார்க்கவும்.

எளிமை, சிக்கனம், மனிதநேயம் போற்றுவோம்!!!

26 comments:

பழமைபேசி said...

இந்த பதிவுக்கு ஆட்சேபனை இருந்தா, அன்பா சொல்லுங்க! நீக்கி விடுறேன்!!

குடுகுடுப்பை said...

முதலாளித்துவம் மக்களுக்கு வேலை கொடுத்து சொறு போடும் என்பது தவறோ?

உணவுப்பஞ்சத்தை எவனும் தீர்க்கப்போறதில்லை

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
முதலாளித்துவம் மக்களுக்கு வேலை கொடுத்து சொறு போடும் என்பது தவறோ?
//
இதுக்கெல்லாம் விடை தெரியுற‌ நமக்குக் காணாதுங்க அண்ணே!

//உணவுப்பஞ்சத்தை எவனும் தீர்க்கப்போறதில்லை
//
ஆனா, நாம, தனிமனித வாழ்க்கையில‌ வீணாவுறதைக் குறைக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுறீக??

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
முதலாளித்துவம் மக்களுக்கு வேலை கொடுத்து சொறு போடும் என்பது தவறோ?
//
இதுக்கெல்லாம் விடை தெரிய, நமக்குக் காணாதுங்க அண்ணே!

இராகவன் நைஜிரியா said...

நீங்க குறிப்பிட்ட அந்த படத்தை எடுத்த புகைப்படக்காரர், அந்த புகைப் படம் எடுத்த சில மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார்.

// ஆனா, நாம, தனிமனித வாழ்க்கையில‌ வீணாவுறதைக் குறைக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுறீக?? //

நிச்சயமாக. தனிமனித வாழ்க்கையில் வீணாவதை குறைக்க நிறைய வாய்ப்புகள்.

உதாரணத்திற்கு... நம் நாட்டில் திருமண விருந்தின் போது நமக்கு தேவையானதைக் கேட்டு வாங்கி சாப்பிடுவது மிக நல்லது என் அபிப்ராயம்.

மதுரையில் ஒரு திருமணத்திற்கு சென்று இருந்தேன், ஒரு சாம்பார், ரசம், இரண்டு பொறியல், பாயசம், அப்பளம், ஒரு இனிப்பு அவ்வளவுதான். மிக நன்றாக இருந்தது. எதையும் வீணாக்கவில்லை என்ற திருப்தி எனக்கு இருந்தது.

சென்னையில் ஒரு கல்யாணத்தில் 20 வகைகள். எதை சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று புரியாமல், நிறைய பேர் வீணடித்தனர். அது மாதிரி இல்லாமல் அந்த செலவை குறைக்கலாம் இல்லையா.

பெரிய பின்னூட்டம். மன்னிக்கவும். நண்பரே.

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said... //

இராகவன் ஐயா, நன்றிங்க! நான் அந்தக் கோணத்துல இந்த கோப்பை பதிவிட்டேன்.... பொதுவுடமை, முதலாளித்துவம் இதெல்லாம், இந்த கிராமத்தானுக்கு என்ன தெரியுங் கழுதை? அமெரிக்காவுல இருக்கன்னுதான் பேரு, மண்டையில இருக்குறதெல்லாம் நெம்பப் பழசு...இஃகிஃகி!!

பழமைபேசி said...

//சென்னையில் ஒரு கல்யாணத்தில் 20 வகைகள். எதை சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று புரியாமல், நிறைய பேர் வீணடித்தனர். அது மாதிரி இல்லாமல் அந்த செலவை குறைக்கலாம் இல்லையா.
//

ஆமுங்க, இங்க SAMS, COSTCOன்னு ரெண்டு மூனு இருக்கு.... அங்கிருந்து வாங்கிட்டு வர வேண்டியது... தூக்கிக் குப்பையில கொட்ட வேண்டியது....

தங்கமணிகெல்லாஞ் சேந்து, எங்க குழுமத்துல இப்ப ஒரு முடிவுக்கு வந்து இருக்காங்க... இஃகிஃகி!!

பழமைபேசி said...

ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
என்றாயு மேழிர‌ண்டா மென்.

இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க‌ தொழில‌திப‌ரை ம‌ண‌ந்த‌ ந‌டிகையின் கதை?? நாளைக்கி வ‌ர்ற‌ ப‌ள்ளைய‌ம் பாருங்க‌....

எம்.எம்.அப்துல்லா said...

எம்.எம்.அப்துல்லா said...
அந்த முதல் படம் வீடு இல்லண்ணே, ஹோட்டல்தான். அபுதாபியில் இருக்கு, எமிரேட்ஸ் பேலஸ்னு பேரு. நிறைய இடத்துல தங்கத்துலேயே இழைச்சு இருக்காங்க. நா அத சுத்திப் பார்க்க போனப்ப கால் வைக்கவே கூசியது எனக்கு.

வேத்தியன் said...

வந்தேன்...
இருங்க பாத்துட்டு வரேன்...

வேத்தியன் said...

நண்பரே...
பதிவு மனசை தொட்டுருச்சுங்க...
அதிகமான இடங்கள்ல எனக்கே வெட்கமா இருக்கு நாம தினமும் செய்யுறத நினைச்சு...
இனிமே கிடைக்குறத வச்சு சந்தோஷப்பட்டுக்கணும்...
என்னைத் திருத்திக் கொள்ள தந்த வாய்ப்புக்கு நன்றி நண்பரே...

Poornima Saravana kumar said...

பழமை உண்மையாவே நல்ல பதிவு இது.. இதை பார்த்தாவது பலரும் திருந்தினால் பரவாயில்லை. ஒரு வாய் உணவிர்க்காக அவர்கள் படும் பாடு மிகக் கொடுமையானது. எனக்கு சின்ன வயசுல இருந்தே என் அம்மா உண்ணும் உணவை மட்டும் வீணாக்காமல் சப்பிடப் பழக்கப் படுத்தி இருக்காங்க. பள்ளியில் என் தோழிகள் பலரும் மதிய உணவை கீழே கொட்டுவதை வேண்டாம்னு நான் சொல்லி ஒருத்தர் கூட ஒரு முறை கூட கேட்டதில்லை.. அவர்கள் இன்றாவது திருந்தியிருப்பார்களா??????

கோவி.கண்ணன் said...

இந்த படங்களைப் பார்த்தால் குழம்பில் உப்பு குறைவாக இருக்கிறது என்று தட்டோடு தூக்கி எறிபவர்களையெல்லாம் கட்டி வச்சு உறிக்கனும் போல் இருக்கு !

Suresh said...

வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு,
நானும் ஒரு பதிவு போடு உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)

உண்மைத்தமிழன் said...

தாங்க முடியல சாமி..

என்ன உலகமோ இது..!?

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
அந்த முதல் படம் வீடு இல்லண்ணே, ஹோட்டல்தான். அபுதாபியில் இருக்கு, எமிரேட்ஸ் பேலஸ்னு பேரு. நிறைய இடத்துல தங்கத்துலேயே இழைச்சு இருக்காங்க. நா அத சுத்திப் பார்க்க போனப்ப கால் வைக்கவே கூசியது எனக்கு.//

அண்ணே, வணக்கம்! தகவலுக்கு நன்றி!!

மின்னஞ்சல்ல வந்த கோப்புல, ஒரு தனிப்பட்ட நபரோடதுன்னு, பெயர் குறிப்பிட்டு இருந்துச்சு....நல்ல வேளை...அதை நீக்கிட்டு இதை வலையேத்தினேன்...

ராஜ நடராஜன் said...

வாழ்க்கையின் ஆடம்பரங்களும் கோரங்களும் யோசிக்க தோன்றுகிறது.ஆப்பிரிக்க படங்களின் கோரங்கள் முன்பே பார்வைக்கு பட்டவைதான்.இருந்தும் மீண்டும் மனம் கனத்துப் போகிறது.

சமீபத்தில் எங்கேயோ கேட்டது.புத்தன்,இயேசு,காந்திக்குப் பிறகு ஏன் இன்னொரு மாமனிதன் பிறக்கவில்லை?

Anonymous said...

அண்ணே "http://btemplates.com/" என்ற இந்த சுட்டியை சொடுக்குங்கள்...உங்களுக்கு தேவையான வலைப் பட்டையை தேர்ந்தெடுங்கள்...
மிகவும் சுலபமாக உங்கள் வலைப் பக்கத்தை மாற்றிவிடலாம்.

வேத்தியன் said...

50வது பதிவு போட்டிருக்கேன்...
வந்து பார்க்கவும்...

சின்னப் பையன் said...

தாங்க முடியல சாமி..

அது சரி(18185106603874041862) said...
This comment has been removed by the author.
அது சரி(18185106603874041862) said...

என்ன சொல்றதுன்னு தெரியலை...இப்பக் கூட ஒரு பில்லியன் செலவுல அம்பானி மும்பைல வீடு கட்றாராமே? அவங்கல்லாம் இது மாதிரி எதையுமே பார்க்க மாட்டாங்களா?

தேவன் மாயம் said...

மின்னஞ்சல்ல வந்த கோப்புல, ஒரு தனிப்பட்ட நபரோடதுன்னு, பெயர் குறிப்பிட்டு இருந்துச்சு....நல்ல வேளை...அதை நீக்கிட்டு இதை வலையேத்தினேன்...///

நல்ல அருமையான பதிவுங்க!
நம்ம ஊரிலேயே நிறைய பேர் குளிக்க, மிச்சம் எல்லாம் மினரல் தண்ணிங்க!!

தேவன் மாயம் said...

இருக்குற சோத்தை பகிறவும்
இருக்குற தண்ணிய பகிறவும்
எப்ப நாம் கத்துக்கப்போறோம்?

தேவன் மாயம் said...

வருடா வருடம் ஐரோப்பாவில் கடலில் கொட்டும் பால் எத்தனையோ ஆயிரம் லிட்டர்களாம்?

பட்டாம்பூச்சி said...

மனதை என்னவோ செய்கிறது.

ஒரு வேளை உணவுக்கு இவ்வளவு கஷ்டங்கள் படும் மனிதர்கள் வாழும் உலகத்தில் அடுத்த வேளை உணவை பற்றி கவலைப்பட வேண்டிய நிலையில் இல்லாதவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்.அதை புரிந்து கொள்ளாமல் சொத்து,காசு,பணம் என்று வாழும்வரை போடும் ஆட்டம் இருக்கிறதே...அப்பப்பா.