6/08/2008

வாழ்த்து எழுதுவது ஏன்?

எங்க பண்பாட்டுக் குழுவில, அடிக்கடி பிறந்த நாள் விழா வரும்.நாங்களும் மகிழ்வா கொண்டாடுவோம். அதுக்கு வாழ்த்து எழுதறத வழக்கமா ஆக்கி கிட்டேன். (பிறந்த நாள், பிறந்தது எப்படினு வர்ற வாரங்களில் பதியனும். சரி, விசயத்துக்கு வருவோம்) பிறந்த நாள் வாழ்த்து எழுதறதுல தமிழ் வார்த்தைகளை நினைவுல வெச்சுக்க முடியுது. வாழ்த்துன மாதிரியும் ஆகுது. ஆனாலும், அதுல குழுமத்துக்கு ஏதாவது கூற்று(fact), இல்லைனா, பண்பாடு சம்பந்தமா ஏதாவது விசயத்த சொல்லுறதயும் வழக்கமா ஆக்கிகிட்டேன். எருமைக்கு புல் புடிங்கின மாதிரியும் ஆச்சு, காடு சுத்தமான மாதிரியும் ஆச்சு பாருங்க. அந்த வரிசைல, இது கடந்த காலங்கல்ள எழுதினதில் ஒண்ணு.


(கையூக்கிய(mouse) வச்சி வாழ்த்து அட்டை மேல ஒரு கிள் கிள்ளி, பெரிய அளவு அட்டையை பாருங்க).

No comments: