எங்கு நோக்கிடினும் எளிதாய்ச் சொற்கள் பரிவர்த்தனை. அன்பும் பண்பும் மனிதநேயமும் மலினப்பட்டுப் போனதில், இன்றைய நாளில் மலிவாய்க் கிடைப்பவை துரோகி, கயவன், கபடன், எதிரி, சோரன், மாயன், வக்கிரன், வஞ்சகன், வேடதாரி என்று எத்துனை எத்துனை சொற்கள் கொண்டு பட்டங்கள் சூடுவதும், எள்ளி நகையாடுவதும்? அவற்றுகெல்லாம் உண்டான பொருளறிய எவர் தலைப்பட்டார்? ஆயினும், புழங்குவதற்கு ஏது தயக்கம்?! தமிழாட்சி, தூற்றுவதில் கோலோச்சும் காலமன்றோ?!
வாய்ச்சாடலில் ஒருவர் அறைகிறார், பஞ்சமாபாதகன், இனத்தைக் கெடுக்க வந்த கயவன் என்றெல்லாம்.... உமது தூற்றலில் எதிரி குளிர் காய்கிறானே? அதை நினைந்து, நமக்கு ஆவதென்ன அன்பர்காள்? வாருங்கள் பஞ்சமா பாதகத்தின் பொருளறிவோம்!
வரும் மாசுகள் கொண்டவன் பஞ்சமாபாதகன் என்றறிவார்: கொலை, காமம், களவு, பொய், குருநிந்தை. வடவர் கூற்றுப்படி, அகங்காரம், உலோபம் (ஈயாமை), காமம், பகை, போசனவேட்கை, சினம், சோம்பல் உடையோர் நவகயவன் ஆவர்.
குண்டக்கமண்டக்க செயலாற்றுபவர் என்கிறார் ஒருவர். அதற்கும் ஆயிரமாயிரம் கரங்களின் பின்னொலியில் ஆமோதகம். பொருளறியாமல், தலைவனின் உச்ச குரலுக்கு மயங்கும் தகைமை உடைத்தெறிந்து, குடிகளுக்கென பிறப்பவர் இனி உண்டோ? காலமே விடை தருக! சரி, அது என்ன குண்டக்கமண்டக்க?
குண்டக்க என்றால், சாய்ந்தும், வளைந்தும், நெளிந்தும் ஒரு சீரில்லாமல் இருக்கும், கிடக்கும் எதுவும். மண்டக்கம் என்றால், ஆழ்நீர்நிலையில் இருப்பவரைக் கட்டி இழுக்கும் கயிறு. இழுபடுதல் ஆனபின்னர், சுருட்டிச் சீர்பட எடுத்து வைக்காமல் எறிந்து கிடப்பது குண்டக்கமண்டக்கம். தெளிவில்லாமல், அங்குமிங்குமாய் தான்தோன்றியாய் இருப்பவன் குண்டக்கமண்டக்கன். எந்தத் தலைவரும் குண்டக்கமண்டக்க செயலாற்றும்படியாய் இல்லை, ஆனால் அவர்கள் பின்னால் செல்லும் அபிமானிகள்?!
4/30/2009
4/29/2009
360 பாகையில்!
வணக்கம் அன்பர்காள்! வாழ்க்கையில் பணிச்சுமை கூடுவதும் குறைவதும் இயல்புதானே? அதற்காக சளைத்து விட முடியுமா என்ன?!
யோகாசனப் பயிற்சியில் அந்த 95 வயதுப் பெரியவர் வெகு சிரத்தையாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அந்த வழியாக சென்ற ஒரு இளைஞன்,
“தாத்தா, எதுக்கு இந்த வயசுல முடிஞ்சும் முடியாம இதெல்லாம் செய்துட்டு இருக்கீங்க?”
“எனக்காகதாம்ப்பா செய்துட்டு இருக்கேன்!”
“?!?!”
அதே போல, நேற்றைக்கு இங்கு Buffalo, NYல் அலுவலகத்தில் இருக்கும்போது, சக அமெரிக்க நண்பரான Don Russell, வேறொரு இந்திய நண்பரைப் பார்த்து,
“Hey Sunil, in which room are we suppossed to meet?"
"One thousand thirty five!"
"wwwwwhat?"
"One Thousand... Thirty Five!"
உரத்த குரலில் "wwwwhat??"
எனக்கா சிரிப்புத்தாங்க முடியவில்லை, அதே வேளையில் இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த Mike Tirone என்பவர் சொல்கிறார்,
“See Don, this is Globalization age, we should think in 360 degrees man.... he means Ten Thirty Five, you know?!"
பின் உரையாடல் இது குறித்துத் தொடரவே, இறுதியில் “Knowledge doesn't matter anymore, it is just that one should have ability to think in 360 degrees and adopt to the circumstance!" என்ற கருத்தோடு நிறைவுற்றது.
அபிமானத் தலைவன் சொல்வது வேதவாக்கு, பிடித்த எழுத்தாளர் எழுதுவதே எழுத்து என்று இருந்தால், "நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?" என்று எனக்குள் யோசிக்க முயலுகிறேன்....
யோகாசனப் பயிற்சியில் அந்த 95 வயதுப் பெரியவர் வெகு சிரத்தையாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அந்த வழியாக சென்ற ஒரு இளைஞன்,
“தாத்தா, எதுக்கு இந்த வயசுல முடிஞ்சும் முடியாம இதெல்லாம் செய்துட்டு இருக்கீங்க?”
“எனக்காகதாம்ப்பா செய்துட்டு இருக்கேன்!”
“?!?!”
அதே போல, நேற்றைக்கு இங்கு Buffalo, NYல் அலுவலகத்தில் இருக்கும்போது, சக அமெரிக்க நண்பரான Don Russell, வேறொரு இந்திய நண்பரைப் பார்த்து,
“Hey Sunil, in which room are we suppossed to meet?"
"One thousand thirty five!"
"wwwwwhat?"
"One Thousand... Thirty Five!"
உரத்த குரலில் "wwwwhat??"
எனக்கா சிரிப்புத்தாங்க முடியவில்லை, அதே வேளையில் இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த Mike Tirone என்பவர் சொல்கிறார்,
“See Don, this is Globalization age, we should think in 360 degrees man.... he means Ten Thirty Five, you know?!"
பின் உரையாடல் இது குறித்துத் தொடரவே, இறுதியில் “Knowledge doesn't matter anymore, it is just that one should have ability to think in 360 degrees and adopt to the circumstance!" என்ற கருத்தோடு நிறைவுற்றது.
அபிமானத் தலைவன் சொல்வது வேதவாக்கு, பிடித்த எழுத்தாளர் எழுதுவதே எழுத்து என்று இருந்தால், "நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?" என்று எனக்குள் யோசிக்க முயலுகிறேன்....
4/28/2009
4/26/2009
இப்ப போகுறயே சோரம்?!
பழசை நல்லா மறந்துடுவான் - புது
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!
சேத்துகிறது நல்லா, உப்பு புளி காரம்
இப்ப போகுறயே சோரம்?!
பாங்கா நாலும்பேசி உசுப்புவான் - அந்த
உசுப்பலுக்கு நல்லா கையுந்தட்டுவான்!
சேத்துகிறது நல்லா, உப்பு புளி காரம்
இப்ப போகுறயே சோரம்?!
இப்ப போகுறயே சோரம்?!
பேச்சுல சுதி ஏறஏற, இவனுக்கு
மழுங்கித்தான போகுது மதி?!
எதிரியின்னும் சொல்லுறான், துரோகிக்கு
எதிரி மேலுன்னும் சொல்லுறான்! ரெண்டுல
ஒன்னுக்கு சரணாகதியின்னும் சொல்லுறான்! ரெண்டுல
ஒன்னுக்கு சரணாகதியின்னும் சொல்லுறான்!!
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்
இப்ப போகுறது சோரம்!
பழச நல்லா மறந்துருவான் - புது
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்
இப்ப போகுறது சோரம்!
பழச நல்லா மறந்துருவான் - புது
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!!
தப்புத்தாளத்துக்கு உணர்ச்சிவசப்படுறியே இப்போ,
ஞாயத்துக்கு அறிவுவசப்படுவது எப்போ??
அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?! தமிழா நீ
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?!
தப்புத்தாளத்துக்கு உணர்ச்சிவசப்படுறியே இப்போ,
ஞாயத்துக்கு அறிவுவசப்படுவது எப்போ??
அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?! தமிழா நீ
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?!
4/25/2009
உணர்வுகள் வாங்கப்படும்!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
இருக்குற நாப்பதும் போகட்டும்,
நரித்தனம் நசியட்டும், போங்காட்டம்
புரிஞ்சு போச்சு, முகமூடி கிழிஞ்சு போச்சு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
கூட்டத்தோட ஒத்துவாழு,
காட்டமான பேச்சைக்கேளு,
தோட்டத்தம்மா நீயும் ஒப்புக்கழு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
இனத்தைக் காவுகுடு
உணர்ச்சியக் கிள்ளியுடு
ஏழையக் குழப்பியுடு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
எட்டணவும் நாலணாவும் மறஞ்சி போச்சு!
பத்துரூவா நாணயமும் வீதிக்கு, வந்தாச்சு!!
நாட்டுமதிப்பு பாதாளம் பாஞ்சுபோச்சு!!!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
இல்லே சொன்னவங்க இருக்கு சொல்றாங்க,
இருக்கு சொன்னவங்க இல்லே சொல்றாங்க,
குரல்கூடுன பக்கம் போறன்நாங்க!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
சிந்திக்க நேரமில்ல, பாக்க பொழுதுமில்ல,
இதுல நல்லவன் யாரு, கெட்டவன் யாரு
யோசிக்க என்ன கெடக்கு?!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
சேதி சொல்லுறான், நல்ல சேதி சொல்லுறான்!
அக்கம்பக்கம் நல்லாப் பாத்துதான சொல்லுறான்?!
நம்மசாதி ரொம்ப ஒசந்ததுன்னு நல்லா சொல்லுறான்!!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
குட்டையில மீனைப் புடி!
அது குழம்புனமீனா இருந்தா என்ன?!
இல்ல, நாறுனமீனாதான் இருந்தா இப்பென்ன?!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
கட்சி ஏது? கொளுகை ஏது??
இதுல நாட்டுக்கு ஒசத்திஏது? ஆக
நீயும், பைசாவுக்கு பசப்பிப் பாரு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
மாத்திப் போடேய்!!
இருக்குற நாப்பதும் போகட்டும்,
நரித்தனம் நசியட்டும், போங்காட்டம்
புரிஞ்சு போச்சு, முகமூடி கிழிஞ்சு போச்சு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
கூட்டத்தோட ஒத்துவாழு,
காட்டமான பேச்சைக்கேளு,
தோட்டத்தம்மா நீயும் ஒப்புக்கழு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
இனத்தைக் காவுகுடு
உணர்ச்சியக் கிள்ளியுடு
ஏழையக் குழப்பியுடு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
எட்டணவும் நாலணாவும் மறஞ்சி போச்சு!
பத்துரூவா நாணயமும் வீதிக்கு, வந்தாச்சு!!
நாட்டுமதிப்பு பாதாளம் பாஞ்சுபோச்சு!!!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
இல்லே சொன்னவங்க இருக்கு சொல்றாங்க,
இருக்கு சொன்னவங்க இல்லே சொல்றாங்க,
குரல்கூடுன பக்கம் போறன்நாங்க!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
சிந்திக்க நேரமில்ல, பாக்க பொழுதுமில்ல,
இதுல நல்லவன் யாரு, கெட்டவன் யாரு
யோசிக்க என்ன கெடக்கு?!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
சேதி சொல்லுறான், நல்ல சேதி சொல்லுறான்!
அக்கம்பக்கம் நல்லாப் பாத்துதான சொல்லுறான்?!
நம்மசாதி ரொம்ப ஒசந்ததுன்னு நல்லா சொல்லுறான்!!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
குட்டையில மீனைப் புடி!
அது குழம்புனமீனா இருந்தா என்ன?!
இல்ல, நாறுனமீனாதான் இருந்தா இப்பென்ன?!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
கட்சி ஏது? கொளுகை ஏது??
இதுல நாட்டுக்கு ஒசத்திஏது? ஆக
நீயும், பைசாவுக்கு பசப்பிப் பாரு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
உணர்வுகள் வாங்கப்படும்;
நியாயங்கள் வேரறுக்கப்படும்!!
4/24/2009
காலச்சுவடுகள்!
நாள்முழுதும் வெயில் உமிழ்ந்து, சுடராய்ச்சுட்ட பரிதி மறைந்திருக்க, நிலவின் மங்கிய பாலொளி புவியெங்கும் படர்ந்திருக்க, விண்மீன்கள் ககனமார்க்கத்தில் மின்மினியாய்ச் சிறகடிக்க, முன்செல்லும் அன்னையவளைப் பின்தொடர்ந்து, தன் வீட்டை அடைகிறான் பாலகன் பழமைபேசி.
குறியாப்புக்கு அரிசி கொடுக்கும் விதமாய்த் தாயானவள் வீட்டினுள் செல்ல, குறியாப்பு வாங்க வந்த தோழனுடன் சில மணித்துளிகள் கழித்தவனாய் பழமைபேசி!
முன்வாசலில் வெண்குழல் விளக்கின் மெல்லிய வெள்ளொளி வீச, நேற்று பூத்த சாமந்திப் பூக்களைக் காணுகிறான் பழமைபேசி. அவைகளை எண்ணிச் சில மலர்கள் கூடியிருக்க்க் கண்டு,
“தேவண்ணா, இன்னிக்கு இனியுமு நெறைய இருக்குது பாருங்கோ!”
“பழமை பாத்துறா, இந்த மாதர பத்தைகளுக்குள்ள எல்லாம் பூச்சி புழுவுக இருக்குமடா!”
“அப்படியாங், வாங்க அப்ப போயிருலாம்!”
அரிசி வாங்க வந்த தேவராசு அரிசியோடு இடத்தை விட்டு அகலவும், அருகண்மை வீட்டுக் குடியானவளான செங்கமலம் தன் மூன்று வயது பாலகனுடன் வாசலுக்குள் நுழைகிறாள். மாலை நேரம் எந்த வீட்டுக்குச் சென்றாலும், எதையாவது கொடுத்துப் பின் அளவளாவிவிட்டு வருதல் எனும் வழக்கம் முறிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைத்தவளாய், வீட்டுப் புறக்கொல்லையில் விளைந்த காய்கறிகளுடன் வந்து இருக்கிறாள் செங்கமலம்.
“சரோசினி அக்கா, எங்க காட்டுக்குப் போயிட்டீங்களாக்கூ? ஊடு பூட்டியே கெடந்துச்சூ!”
“நான் இன்னைக்கு மலைச் சந்தைக்குப் போயிட்டு சாயந்தரம் போலத்தேன் வந்தேன்!”
“அப்பிடீங்களா, சித்த சொல்லியிருந்தா நானுமு தங்கவேலனை அவிங்க அப்பத்தாகிட்ட உட்டுப்போட்டு, கூடா வந்துருப்பம் பாருங்க?!”
“அவிங்க அப்பன், திடீல்ன்னு ஆடு வாங்கப் போகோணும், நீயுமு, கூட வரணோமுன்னு கையோட கூட்டிட்டிப் போனதுல, போட்ட்து போட்டபடி போட்டுட்டுப் போயிட்டன்ஞ் செங்கமலம்!”
“ச்சேரி செரிங்கோ!”
”செரீ, நின்னுட்டே பேசிட்டு இருக்காட்டீ என்னோ? இப்படிக் குக்கு, நான் வாறன்!” என்று சொல்லிவிட்டு உள்ளே போன பழமையின் தாயானவள் வெங்காயம் கிட்த்திய முறத்தோடு வந்து வாசலில் அமர, இருவருமாய்ப் பழமைபேச ஆரம்பித்து விட்டார்கள்.
தாயானவள் பேச்சு பேச்சாய் இருக்க, ஆடுகளை அடைத்து விட்டு வரும் தகப்பனுக்குச் சூடாய்ச் சமைத்து வைக்கும் பொருட்டு, வெங்காயத்தில் இருந்து தோல் உரிக்கும் லாவகத்தைப் பார்த்து இரசித்தவனாய் பழமைபேசியும் அருகில். தன் அன்னையின் மடியில் உட்கார்ந்து கொண்டு, அன்னையின் மடியில் இருந்து பெயர மாட்டேன் என்கிற பாங்கில் தங்கவேலன்.
நத்தக்காடையூர் பொடாரப்பன் கோயிலில் மொட்டை அடிப்பதற்க்காய் வளர்ந்திருந்த நீண்ட முடியுடனும், கன்னக் குழியழகோடும் இருந்த தங்கவேலனைச் சடையப்ப வள்ளல் என்றே பழமைபேசி விளிப்பான். அவனது நிலையிலிருந்து, அவனை மாற்றித் தன் வழிக்குக் கொண்டுவரும் பொருட்டு, வீட்டினுள் சென்று, தனது அமுச்சி ஊரான லெட்சுமாபுரம் திருவிழாவின் போது வாங்கிய மொசப்பந்தை எடுத்து வந்தான் பழமைபேசி.
தங்கவேலன் கவனத்தை ஈர்க்கும்படியாய், அந்த மொசப்பந்தினை இங்குமங்கும் உருட்ட, ஃகிஃகி என்று பகர்ந்தவனாய் மெள்ள மெள்ள மனம் மாறி, முதலில் எழுந்து நின்றான் மழலைச் சிறுவன் தங்கவேலன். வேண்டுமென்றே, பந்தைத் தவறவிட்டவனாய், தங்கவேலன் நிற்க்குமிடத்துப் பந்தை நழுவவிட்டான் பழமை.
‘அஃபிச்சீ’ என்று சிருங்காரித்து, பின் புளகாங்கிதம் பெருக்கிடப் பந்தைப் பிடித்து, பின்னர் அந்த பிஞ்சுக்கையால் உதறினான் தங்கவேலன். வெகுபெரியவன் போன்றதொரு தோரணையோடு புன்முறுவலிட்டுக் கொண்டான், வெற்றி பெற்ற உவகையுடன் பாலகன் பழமைபேசி.
வாசலின் ஒரு கோடியில் நின்று கொண்டு தங்கவேலனை நோக்கிப் பந்தை இவன் உருட்ட, அவன் அதை திருப்பி இவனை நோக்கி உருட்ட, கள்ளங்கபடமில்லாச் சிரிப்புடன் இருவரும் மரத்தடியில் ஓடியாடும் அணிற்ப் பிள்ளைகளாய். போகிற போக்கில் பழமைபேசி உற்சாகம் உற்றவனாய்ப் பாட, அவன் சொல்லுவதை தங்கவேலனும் மழலையில் பின்குரலிட்டுக் கொண்டான்.
“பந்தாடம்மா பந்தாடு!’
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு!
“அக்கம்பக்கம் பாத்து பந்தாடு!”
“அக்குபக்கு வாத்து ஃபண்டாடு!”
“பந்தாடம்மா பந்தாடு!”
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு”
“குதிச்சுக் குதிச்சுப் பந்தாடு”
“குய்ச்சு குய்ச்சுப் பண்டாடு”
இப்படியாக இருவரும் சிறிது நேரம் வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். களைப்பு தலைகாட்டியதும், இருவரும் திரும்ப வந்து த்த்தம் அன்னையர் மடியில் தஞ்சம் புகுந்தார்கள். பழமைபேசி தனது அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது.
தொப்புள்க் கொடி அறுபடும் போது, முதல் பிரிவு! வீட்டைச் சுற்றி வலம் வரும் குழந்தை, முழுநேரப் பள்ளிக்குச் செல்லும் அந்த முதல்நாள் இரண்டாம் பிரிவு! பதின்ம வயதில், படிப்பு, வேலை இப்படியாக ஏதோவொன்றிற்கு மாற்று இருப்பிடம் நாடிச் செல்லும் நாள் மூன்றாவது பிரிவு! இந்த மானுடம்பு மண்ணுக்கு இரையாகும் நாளோ, இறுதிப் பிரிவாகிறது!
இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.
குறியாப்புக்கு அரிசி கொடுக்கும் விதமாய்த் தாயானவள் வீட்டினுள் செல்ல, குறியாப்பு வாங்க வந்த தோழனுடன் சில மணித்துளிகள் கழித்தவனாய் பழமைபேசி!
முன்வாசலில் வெண்குழல் விளக்கின் மெல்லிய வெள்ளொளி வீச, நேற்று பூத்த சாமந்திப் பூக்களைக் காணுகிறான் பழமைபேசி. அவைகளை எண்ணிச் சில மலர்கள் கூடியிருக்க்க் கண்டு,
“தேவண்ணா, இன்னிக்கு இனியுமு நெறைய இருக்குது பாருங்கோ!”
“பழமை பாத்துறா, இந்த மாதர பத்தைகளுக்குள்ள எல்லாம் பூச்சி புழுவுக இருக்குமடா!”
“அப்படியாங், வாங்க அப்ப போயிருலாம்!”
அரிசி வாங்க வந்த தேவராசு அரிசியோடு இடத்தை விட்டு அகலவும், அருகண்மை வீட்டுக் குடியானவளான செங்கமலம் தன் மூன்று வயது பாலகனுடன் வாசலுக்குள் நுழைகிறாள். மாலை நேரம் எந்த வீட்டுக்குச் சென்றாலும், எதையாவது கொடுத்துப் பின் அளவளாவிவிட்டு வருதல் எனும் வழக்கம் முறிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைத்தவளாய், வீட்டுப் புறக்கொல்லையில் விளைந்த காய்கறிகளுடன் வந்து இருக்கிறாள் செங்கமலம்.
“சரோசினி அக்கா, எங்க காட்டுக்குப் போயிட்டீங்களாக்கூ? ஊடு பூட்டியே கெடந்துச்சூ!”
“நான் இன்னைக்கு மலைச் சந்தைக்குப் போயிட்டு சாயந்தரம் போலத்தேன் வந்தேன்!”
“அப்பிடீங்களா, சித்த சொல்லியிருந்தா நானுமு தங்கவேலனை அவிங்க அப்பத்தாகிட்ட உட்டுப்போட்டு, கூடா வந்துருப்பம் பாருங்க?!”
“அவிங்க அப்பன், திடீல்ன்னு ஆடு வாங்கப் போகோணும், நீயுமு, கூட வரணோமுன்னு கையோட கூட்டிட்டிப் போனதுல, போட்ட்து போட்டபடி போட்டுட்டுப் போயிட்டன்ஞ் செங்கமலம்!”
“ச்சேரி செரிங்கோ!”
”செரீ, நின்னுட்டே பேசிட்டு இருக்காட்டீ என்னோ? இப்படிக் குக்கு, நான் வாறன்!” என்று சொல்லிவிட்டு உள்ளே போன பழமையின் தாயானவள் வெங்காயம் கிட்த்திய முறத்தோடு வந்து வாசலில் அமர, இருவருமாய்ப் பழமைபேச ஆரம்பித்து விட்டார்கள்.
தாயானவள் பேச்சு பேச்சாய் இருக்க, ஆடுகளை அடைத்து விட்டு வரும் தகப்பனுக்குச் சூடாய்ச் சமைத்து வைக்கும் பொருட்டு, வெங்காயத்தில் இருந்து தோல் உரிக்கும் லாவகத்தைப் பார்த்து இரசித்தவனாய் பழமைபேசியும் அருகில். தன் அன்னையின் மடியில் உட்கார்ந்து கொண்டு, அன்னையின் மடியில் இருந்து பெயர மாட்டேன் என்கிற பாங்கில் தங்கவேலன்.
நத்தக்காடையூர் பொடாரப்பன் கோயிலில் மொட்டை அடிப்பதற்க்காய் வளர்ந்திருந்த நீண்ட முடியுடனும், கன்னக் குழியழகோடும் இருந்த தங்கவேலனைச் சடையப்ப வள்ளல் என்றே பழமைபேசி விளிப்பான். அவனது நிலையிலிருந்து, அவனை மாற்றித் தன் வழிக்குக் கொண்டுவரும் பொருட்டு, வீட்டினுள் சென்று, தனது அமுச்சி ஊரான லெட்சுமாபுரம் திருவிழாவின் போது வாங்கிய மொசப்பந்தை எடுத்து வந்தான் பழமைபேசி.
தங்கவேலன் கவனத்தை ஈர்க்கும்படியாய், அந்த மொசப்பந்தினை இங்குமங்கும் உருட்ட, ஃகிஃகி என்று பகர்ந்தவனாய் மெள்ள மெள்ள மனம் மாறி, முதலில் எழுந்து நின்றான் மழலைச் சிறுவன் தங்கவேலன். வேண்டுமென்றே, பந்தைத் தவறவிட்டவனாய், தங்கவேலன் நிற்க்குமிடத்துப் பந்தை நழுவவிட்டான் பழமை.
‘அஃபிச்சீ’ என்று சிருங்காரித்து, பின் புளகாங்கிதம் பெருக்கிடப் பந்தைப் பிடித்து, பின்னர் அந்த பிஞ்சுக்கையால் உதறினான் தங்கவேலன். வெகுபெரியவன் போன்றதொரு தோரணையோடு புன்முறுவலிட்டுக் கொண்டான், வெற்றி பெற்ற உவகையுடன் பாலகன் பழமைபேசி.
வாசலின் ஒரு கோடியில் நின்று கொண்டு தங்கவேலனை நோக்கிப் பந்தை இவன் உருட்ட, அவன் அதை திருப்பி இவனை நோக்கி உருட்ட, கள்ளங்கபடமில்லாச் சிரிப்புடன் இருவரும் மரத்தடியில் ஓடியாடும் அணிற்ப் பிள்ளைகளாய். போகிற போக்கில் பழமைபேசி உற்சாகம் உற்றவனாய்ப் பாட, அவன் சொல்லுவதை தங்கவேலனும் மழலையில் பின்குரலிட்டுக் கொண்டான்.
“பந்தாடம்மா பந்தாடு!’
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு!
“அக்கம்பக்கம் பாத்து பந்தாடு!”
“அக்குபக்கு வாத்து ஃபண்டாடு!”
“பந்தாடம்மா பந்தாடு!”
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு”
“குதிச்சுக் குதிச்சுப் பந்தாடு”
“குய்ச்சு குய்ச்சுப் பண்டாடு”
இப்படியாக இருவரும் சிறிது நேரம் வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். களைப்பு தலைகாட்டியதும், இருவரும் திரும்ப வந்து த்த்தம் அன்னையர் மடியில் தஞ்சம் புகுந்தார்கள். பழமைபேசி தனது அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது.
தொப்புள்க் கொடி அறுபடும் போது, முதல் பிரிவு! வீட்டைச் சுற்றி வலம் வரும் குழந்தை, முழுநேரப் பள்ளிக்குச் செல்லும் அந்த முதல்நாள் இரண்டாம் பிரிவு! பதின்ம வயதில், படிப்பு, வேலை இப்படியாக ஏதோவொன்றிற்கு மாற்று இருப்பிடம் நாடிச் செல்லும் நாள் மூன்றாவது பிரிவு! இந்த மானுடம்பு மண்ணுக்கு இரையாகும் நாளோ, இறுதிப் பிரிவாகிறது!
இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.
4/23/2009
அமெரிக்காவின், ’அலேக்’ அண்டவெளி ஓடம்!
(மூலம்: மின்னஞ்சல்)
இப்ப, ஊர்வழில ’அலேக்கா’த் தூக்கிட்டான்றாங்க. அலாக்காத் தூக்கிட்டுப் போயிடுச்சுங்றாங்க. அங்கவாரு, அலாக்காப் போவுது பாருங்கறாங்க... அதென்ன இந்த அலேக்கா? இஃகிஃகி!
’அலேக்கா’ ’அலேகம்’ன்னு சொல்லிச் சொல்றதுக்கு, இலகுவாக காற்றில் பறக்கவல்ல பனை இலை, இலகுவாக மேலோங்குகிற மணற்துகள் இப்படியானதுங்களாம். அதுல இருந்து, இலகுவா மேல போற எல்லாத்துக்கும் வந்தது அலேக், அலாக் அப்படீங்ற வழக்கு. இஃகிஃகி!!
Subscribe to:
Posts (Atom)