அப்பாடா... தீவாளிடா!!
இலட்சுமிநாய்க்கன் பாளையம் விடுதியில் தங்கியிருந்து படிக்கிறேன். தீபாவளிக்கு முந்தினநாளே விடுதி மூடப்படுகிறது. பக்கத்து கிராமத்து நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு அழைக்கிறார்கள். நானும் போய்த் தங்கிவிட்டு, கடைசியாக வேலப்பநாய்க்கன் பாளையம் உறவினர் இரங்கநாதன் அவர்களது தோட்டத்துக்குப் போய்ச் சேருகிறேன். மழை பெய்யத் துவங்குகிறது. மழைக்கு இதமாக இராகிவடை, ஆமைவடை, மெதுவடை என மூன்றுவிதமான வடைகளும் சூடாக சுட்டுக் கொடுக்கப்படுகின்றன. குதூகலமாகத் தின்று கொண்டே மாலை முழுதும் கரைந்து போகிறது. எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றம். எவ்விதமான போன் வசதியுமிராத காலகட்டமது. அழவில்லை. அவ்வளவுதான். மனம்முழுமைக்கும் அழுகை அணைகட்டி நிற்கிறது. இராத்திரி எட்டுமணி சியாம் வண்டிக்குப் போயிர்லாம்டா என்கின்றனர் அண்ணன் இரங்கநாதனும் புருசோத்தமனும். அதேபோல மழையோடு மழையாகக் கொங்காடிகள் போட்டுக் கொண்டு அக்கநாய்க்கன் பாளையம் பிரிவில் இரவு எட்டுமணிக்கு நிற்கிறோம். நிற்கிறோம். கோயமுத்தூரிலிருந்து கிராமத்து சாலைகளில் தவழ்ந்து வருகிறது சியாம். மழையோடு மழையாகக் கரைந்து போகிறது நான் அழுத கண்ணீரெல்லாம்.
வண்டிக்குள் ஏறி, நான் போட்டிருந்த உடுப்புகளை எல்லாம் அவிழ்த்து பெட்டியிலிருந்த அழுக்கு உடைகளுக்குள் புகுந்து கொள்கிறேன். இருந்தும் குளிர் கொல்கிறது. வண்டி ஓட்டுநர் செய்யக்கூடாத சாகசமெல்லாம் செய்து ஒருவழியாக திருப்பூர் - பொள்ளாச்சி சாலையை வந்தடைகிறது வண்டி. ஓரமாக நிறுத்திவிட்டு பீடி ஒன்றைப் புகைக்க விடுகிறார். மழையும் ஓரளவுக்கு நின்று விட்டிருந்தது.
“அண்ணா, மணி என்னாசுங்ணா?”
“ஒம்பதே முக்கால் தம்பி”.
மீண்டும் அழத் துவங்குகிறேன். வண்டிக்குள் எண்ணி ஏழு அல்லது எட்டுப் பயணிகள்தாம். அதில் ஒருவர் வருகிறார். “கண்ணு, நீங்க எந்த ஊருக்குப் போகோணும்?”,
“சலவநாய்க்கன் பட்டிப் புதூருங்க”.
“வெசனப்படாதீங்க. மழ நின்றுச்சு பாருங். போய்ச் சேந்துரும் வண்டி”.
நிமிர்ந்து உட்காருகிறேன். வண்டி செஞ்சேரிமலைச் சாலையில் வேகமெடுக்கிறது. மகிழ்ச்சி கரை புரள்கிறது. சற்றே உறக்கமும் கண்களை அணைக்கிறது.
“நிறுத்துங், நிறுத்துங்... வண்டி தெக்கமின்னாப் போகாது. பச்சாக்கவுண்டம் பாளையத்து தரைப்பாலம் முறிஞ்சி போச்சி”
நான் செத்தே போனேன். என்னையும் கடந்து அழுகை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நாங்க நடந்தே போய்க்கிறமுங்க. எல்லாரும் இறங்கிப் போய்விட்டார்கள். எஞ்சியிருப்பது, ஓட்டுநர், நடத்துநர், நான்.
“செரிங்ணே, நாம நெகமம் போயி, வீதம்பட்டி வழியாப் போயி, பிரசிடெண்ட் நாய்க்கர் தோட்டத்துல வண்டியப் போட்டுர்லா. ஆனா, இந்தப் பையனை என்ன பண்றதுன்னுதா தெரீல”, நடத்துநர் ஓட்டுநரிடம் சொல்கிறார்.
விடிந்தால் தீபாவளி. ஒரு சீட்டில் குறுகிப்படுத்துக் கொண்டேன். அழுகையில் என்னையுமறியாது நான் உறங்கிப் போனேன்.எதொவொரு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறும் போது செரியான குலுக்கல். குலுக்கலில் நோக்காட்டில் எழுந்து உட்காருகிறேன்.
“வண்டிய நிப்பாட்டுங்க. ஆரோ, கைய கைய ஆட்டுறாங்க”
“எங்க தம்பு இந்த வண்டியில ஏறுச்சுங்ளா தம்பீ?”
வேலூர், வீதம்பட்டி, வாகைத்தொழுவு, சலவநாய்க்கன்பட்டி எல்லாமும் அதிர்ந்தெழுகிறது. பொட்டியாவது கிட்டியாவது. ஒரே பாய்ச்சலில் பாய்கிறேன். நாடி நரம்புகள் எல்லாமும் ஒருசேரப் புடைத்தெழுந்து பேரோசை ஆர்ப்பரிக்கிறது. ”அப்பா!”
மகனைத் தேடி நள்ளிரவில் சைக்கிள் எடுத்துக் கொண்டு மழையோடு மழையாக வந்திருக்கிறார்.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், போட்டாரே பார்க்கலாம் வெடிகளை. ‘பட பட படார்”.
அப்பாடா... தீவாளிடா!!
10/18/2017
10/14/2017
அறம்சார் அமைப்பும் ஓட்டும்
1. சாலையில் பயணிக்கும் போது, போக்குவரத்து மின்விளக்கில் மஞ்சள் வண்ண விளக்கு ஒளிர்கிறது. நாம் என்ன செய்கிறோம்? இயன்றவரையிலும் வேகமாக ஓட்டிக் கடந்து விட முயல்கிறோம். அது தவறு. இயன்றவரை நிற்கப் பார்க்க வேண்டும். இயலாதநிலையில், கடந்து விட வேண்டும். Try to stop, not try to go. அது போல, எந்தவொரு அறம்சார்ந்த மக்களாட்சி அமைப்பிலும் தேர்தல் நடத்த முயலவேண்டும். போட்டியாளர்கள் கிடைக்கவில்லையாயின், தேர்தலின்றி அதன் போக்கில் அது போய்விட்டுப் போகட்டும்.
2. தேர்தல் இடம்பெற்றால், பிணக்குகள் வரும். பகைமை வளரும். இப்படியெல்லாம் அஞ்சிக் கொண்டிருப்பது அல்லது எண்ணுவது, சமூகம் இன்னமும் மேம்படவில்லை என்பதற்கு ஒப்பானது. பத்தாம்பசலித்தனமானது.
3. முறைப்படி தேர்தல் இடம்பெற வேண்டும். கண்ணியமாகவும் நேர்மையாகவும் திறந்தமனத்தோடு விமர்சனங்களையும் முன்வைத்தே செயற்பட வேண்டும். அதே நேரத்தில் அநாகரிகம், தனிமனித வசையாடல் தவிர்க்கப்படல் வேண்டும்.
4. நிர்வாகமுடிவுகளில், சாதி சமயம் இனம் வயது பாலினம் முதனாவற்றின் அடிப்படையில் பாகுபாடு, பேதம் பார்ப்பது அறவே கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்திநரை அழைப்பதில் எப்படி இவற்றை முன்னிறுத்தக் கூடாதோ, அதே பாங்கினை அழைக்காமற்தவிர்ப்பதிலும் கடைபிடிக்க வேண்டும்.
5. எத்தகைய அமைப்பானாலும், அதனதன் நிர்வாகக்குழுவில் இடம் பெற, கலை, இலக்கியம், விளையாட்டு, நுட்பம், தொழில்சார் நுண்ணறிவு, மக்கள்தொடர்புத் திறம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். வெறுமனே உணர்வாளர்கள், பற்றுக்கொண்டோரென இருந்து அமைப்பின் நோக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது. அமெரிக்காவில், கல்லூரியில் இடம்பெற, நிர்வாகத்தில் இடம் பெற இவற்றைத்தான் எடை போடுகிறார்கள்.
6. குறியீடுகள், கருத்தியல்களால் ஆனது உலகு. ஆகவே பன்முகத்தன்மை இல்லாவிடில் அமைப்போ, வணிகமோ, அரசியலோ, அது எதுவோ, விளங்கவே விளங்காது அல்லது முழுமைப்பயனை எட்டவே முடியாது. தற்காலிகக் கானல்நீராய் இருக்கலாம். ஆனால் மேம்பாட்டை ஒருபோதும் ஈட்டாது. எடுத்துக்காட்டாக, மோகன்தாசு கரம்சந்த் காந்தி, அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, லெனின், ஆபிரகாம் லிங்கன், கென்னடி, பாரதி, ஈ.வே.ரா, வள்ளலார், பாரதிதாசன் முதலானோர் கருத்தியலின் குறியீடுகளேவொழிய, தனிமனிதர்கள் அல்ல. அந்தந்தக் கருத்தியற் கோட்பாடுகளில் இருக்கும் நல்லனவற்றை ஈர்த்துச் செல்லவே அக்குறியீடுகள். மாறாக, அந்தந்த தனிமனிதர்களின் வாழ்வில் இடம்பெற்ற வேண்டாதனவற்றை அமைப்பின் நிர்வாகத்தில் புகுத்திச் செயற்படுவது பன்முகத்தன்மைக்கு எதிரானது.
7. நிர்வாகக்குழுவில் இடம் பெறுபவர்கள், நாட்டமுள்ளவர்கள், அவரவராகவே குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் பணிகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவேண்டும். அல்லாவிடில், அவர், அவருடைய தனிமனிதநலன், குடும்பநலனுக்கு எதிரானவராகவே கருதப்பட வேண்டும். அமைப்பின் உறுப்பினர்களும், அத்தகையோரை மட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இது அறம்சார் மக்களாட்சி அமைப்பு அல்லது நிறுவனம். வணிகநிறுவனமோ அல்லது தொழில்நிறுவனமோ அன்று.
8. அமைப்புகளின் செயற்பாடுகளை திறந்த புத்தகமாக, மக்கள் நிர்வாகச் சபைகளின் ஓட்டெடுப்பு விபரங்களைப் பொதுவில் வைப்பதைப் போல, கூட்ட முடிவுகள், தீர்மான ஓட்டெடுப்பு முடிவுகளை மக்களின் பார்வைக்கு பொதுவில் வைக்கப்பட தேர்தலில் இடம்பெறும் போட்டியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்பு, திரைமறைவு ஊழல்களை வெகுவாக ஒழித்துக் குறைவான உழைப்பில் நிறைவான பயனை ஈட்ட வழிவகுக்கும்.
9. பல்லினமக்கள், பன்முகத்தன்மையென்பது உலகமயமாக்கல், பொருளாதாரமயமக்கல் உலகத்தின் அச்சாணியாக நிலைபெற்றுவிட்டது. Globalization is irreversible. ஆகவே, தனித்துவம் போற்றிக் கொண்டே, அடுத்த வீட்டு, அடுத்த நாட்டு, அடுத்த அமைப்பு, அடுத்த நிறுவனம் போன்றவற்றோடு இயைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படித்தான் பண்டங்களும் பொருட்களும் தொண்டுப்பணிகளும் நடந்தேறிவருகின்றன. ஒரு கூரைக்குக் கீழேயே எல்லாமும் இடம்பெற வேண்டுமென்பது வழக்கொழிந்து போனவொன்றாகும். எனவே, அடுத்த அமைப்பிலிருந்து வல்லுநர்கள் பேசவேண்டும். ஓர் அமைப்பு இன்னோர் அமைப்புடன் இயந்து செயற்பட வேண்டும். Office bearers should be able to work across the aisle. குண்டுச்சட்டியிலிருந்து கொண்டால், இழப்பு குறுக்கில் இருப்பவருக்கே!
10. அறம்சார் தொண்டு நிறுவனம், மக்கள்சார் கலை இலக்கிய அமைப்பு, மக்களின் உரிமை மேம்பாட்டு இயக்கம் போன்ற அமைப்புகளின் உயிர்நாடியே, அந்தந்த மண்ணின் மையநீரோட்டத்தில் மேம்படுவதுதான். எனவே, மையநீரோட்டத்துடன் ஒன்றிச் செயற்படும் போட்டியாளர்களே தேவை. தனித்துவமும் மரபும் போற்றப்பட வேண்டியவொன்று. அதே வேளையில், தனித்துவவெறியும் தூய்மைவாதமுமென இருந்துவிட்டால் பின்னடைவுதான். ஆகவே, இவ்விரண்டுக்குமான பொருளுணர்ந்து செயற்படும் நிர்வாகிகள் காலத்தின் தேவை.
இஃகிஃகி, தேர்தல் களம் காணுகிற, காணப்போகிற எல்லா அமைப்பினருக்கும் பாராட்டுகள்! முடிந்து முடிந்து பூமிக்கடியில் புதைத்து வைத்துக் கொள்கிற அமைப்பினரும் விழிப்புணர்வு கொண்டெழ வாழ்த்துகள்!!
-பழமைபேசி.
2. தேர்தல் இடம்பெற்றால், பிணக்குகள் வரும். பகைமை வளரும். இப்படியெல்லாம் அஞ்சிக் கொண்டிருப்பது அல்லது எண்ணுவது, சமூகம் இன்னமும் மேம்படவில்லை என்பதற்கு ஒப்பானது. பத்தாம்பசலித்தனமானது.
3. முறைப்படி தேர்தல் இடம்பெற வேண்டும். கண்ணியமாகவும் நேர்மையாகவும் திறந்தமனத்தோடு விமர்சனங்களையும் முன்வைத்தே செயற்பட வேண்டும். அதே நேரத்தில் அநாகரிகம், தனிமனித வசையாடல் தவிர்க்கப்படல் வேண்டும்.
4. நிர்வாகமுடிவுகளில், சாதி சமயம் இனம் வயது பாலினம் முதனாவற்றின் அடிப்படையில் பாகுபாடு, பேதம் பார்ப்பது அறவே கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்திநரை அழைப்பதில் எப்படி இவற்றை முன்னிறுத்தக் கூடாதோ, அதே பாங்கினை அழைக்காமற்தவிர்ப்பதிலும் கடைபிடிக்க வேண்டும்.
5. எத்தகைய அமைப்பானாலும், அதனதன் நிர்வாகக்குழுவில் இடம் பெற, கலை, இலக்கியம், விளையாட்டு, நுட்பம், தொழில்சார் நுண்ணறிவு, மக்கள்தொடர்புத் திறம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். வெறுமனே உணர்வாளர்கள், பற்றுக்கொண்டோரென இருந்து அமைப்பின் நோக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது. அமெரிக்காவில், கல்லூரியில் இடம்பெற, நிர்வாகத்தில் இடம் பெற இவற்றைத்தான் எடை போடுகிறார்கள்.
6. குறியீடுகள், கருத்தியல்களால் ஆனது உலகு. ஆகவே பன்முகத்தன்மை இல்லாவிடில் அமைப்போ, வணிகமோ, அரசியலோ, அது எதுவோ, விளங்கவே விளங்காது அல்லது முழுமைப்பயனை எட்டவே முடியாது. தற்காலிகக் கானல்நீராய் இருக்கலாம். ஆனால் மேம்பாட்டை ஒருபோதும் ஈட்டாது. எடுத்துக்காட்டாக, மோகன்தாசு கரம்சந்த் காந்தி, அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, லெனின், ஆபிரகாம் லிங்கன், கென்னடி, பாரதி, ஈ.வே.ரா, வள்ளலார், பாரதிதாசன் முதலானோர் கருத்தியலின் குறியீடுகளேவொழிய, தனிமனிதர்கள் அல்ல. அந்தந்தக் கருத்தியற் கோட்பாடுகளில் இருக்கும் நல்லனவற்றை ஈர்த்துச் செல்லவே அக்குறியீடுகள். மாறாக, அந்தந்த தனிமனிதர்களின் வாழ்வில் இடம்பெற்ற வேண்டாதனவற்றை அமைப்பின் நிர்வாகத்தில் புகுத்திச் செயற்படுவது பன்முகத்தன்மைக்கு எதிரானது.
7. நிர்வாகக்குழுவில் இடம் பெறுபவர்கள், நாட்டமுள்ளவர்கள், அவரவராகவே குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் பணிகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவேண்டும். அல்லாவிடில், அவர், அவருடைய தனிமனிதநலன், குடும்பநலனுக்கு எதிரானவராகவே கருதப்பட வேண்டும். அமைப்பின் உறுப்பினர்களும், அத்தகையோரை மட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இது அறம்சார் மக்களாட்சி அமைப்பு அல்லது நிறுவனம். வணிகநிறுவனமோ அல்லது தொழில்நிறுவனமோ அன்று.
8. அமைப்புகளின் செயற்பாடுகளை திறந்த புத்தகமாக, மக்கள் நிர்வாகச் சபைகளின் ஓட்டெடுப்பு விபரங்களைப் பொதுவில் வைப்பதைப் போல, கூட்ட முடிவுகள், தீர்மான ஓட்டெடுப்பு முடிவுகளை மக்களின் பார்வைக்கு பொதுவில் வைக்கப்பட தேர்தலில் இடம்பெறும் போட்டியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்பு, திரைமறைவு ஊழல்களை வெகுவாக ஒழித்துக் குறைவான உழைப்பில் நிறைவான பயனை ஈட்ட வழிவகுக்கும்.
9. பல்லினமக்கள், பன்முகத்தன்மையென்பது உலகமயமாக்கல், பொருளாதாரமயமக்கல் உலகத்தின் அச்சாணியாக நிலைபெற்றுவிட்டது. Globalization is irreversible. ஆகவே, தனித்துவம் போற்றிக் கொண்டே, அடுத்த வீட்டு, அடுத்த நாட்டு, அடுத்த அமைப்பு, அடுத்த நிறுவனம் போன்றவற்றோடு இயைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படித்தான் பண்டங்களும் பொருட்களும் தொண்டுப்பணிகளும் நடந்தேறிவருகின்றன. ஒரு கூரைக்குக் கீழேயே எல்லாமும் இடம்பெற வேண்டுமென்பது வழக்கொழிந்து போனவொன்றாகும். எனவே, அடுத்த அமைப்பிலிருந்து வல்லுநர்கள் பேசவேண்டும். ஓர் அமைப்பு இன்னோர் அமைப்புடன் இயந்து செயற்பட வேண்டும். Office bearers should be able to work across the aisle. குண்டுச்சட்டியிலிருந்து கொண்டால், இழப்பு குறுக்கில் இருப்பவருக்கே!
10. அறம்சார் தொண்டு நிறுவனம், மக்கள்சார் கலை இலக்கிய அமைப்பு, மக்களின் உரிமை மேம்பாட்டு இயக்கம் போன்ற அமைப்புகளின் உயிர்நாடியே, அந்தந்த மண்ணின் மையநீரோட்டத்தில் மேம்படுவதுதான். எனவே, மையநீரோட்டத்துடன் ஒன்றிச் செயற்படும் போட்டியாளர்களே தேவை. தனித்துவமும் மரபும் போற்றப்பட வேண்டியவொன்று. அதே வேளையில், தனித்துவவெறியும் தூய்மைவாதமுமென இருந்துவிட்டால் பின்னடைவுதான். ஆகவே, இவ்விரண்டுக்குமான பொருளுணர்ந்து செயற்படும் நிர்வாகிகள் காலத்தின் தேவை.
இஃகிஃகி, தேர்தல் களம் காணுகிற, காணப்போகிற எல்லா அமைப்பினருக்கும் பாராட்டுகள்! முடிந்து முடிந்து பூமிக்கடியில் புதைத்து வைத்துக் கொள்கிற அமைப்பினரும் விழிப்புணர்வு கொண்டெழ வாழ்த்துகள்!!
-பழமைபேசி.
10/13/2017
மாடர்ன் மருத்துவம் vs மரபு மருத்துவம்
மாடர்ன் மருத்துவம்
மரபு மருத்துவம்
போலி மருத்துவம்
தம்பொறுப்பு
இவற்றுக்கிடையே சிண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆகையால் நம் புரிதலையும் உளமாரச் சொல்லிக் கொள்வோம். பின்னூட்டங்களைப் பொறுத்து புரிதலைச் சரி செய்தும் கொள்வோம். இஃகிஃகி!
1. அறிவியல், இன்று ஒன்றைச் சொல்லும். புது அறிதல்களுக்கொப்ப இன்று சொல்வதை நாளையே அது மறுக்கக் கூடும். அதுதான் புத்தாக்க அறிவியல். தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கொப்ப அது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். முறைசார் அறிஞர்களை நம்பித்தான் சமூகம் இயங்கியாக வேண்டும். ஆகவே, புதுமை அறிவியல்தான் முதன்மை. (எடுத்துக்காட்டு: நுண்ணோக்கியில் குருதியின் அணுக்களை ஆய்ந்து நோய்க்கூறுகள் கண்டறிவது)
2. மரபு மருத்துவமும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதாலும், உரிய பதிவுகள், முறையான நிறுவுசான்றுப் பதிவுகள் இல்லாததாலும் சிதைவுக்கு ஆட்படுகிறது. ஆனால், முற்றிலும் ஒதுக்கிவிட, நிராகரிக்கத் தேவையில்லை. துய்ப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, அனுபவத்தின் அடிப்படையில் தன்னாய்ந்து ஏற்றுக் கொள்ளலாம். எடுத்ததற்கெல்லாம் வேதிப்பொருட்களை உண்ணாமல், மரபு மருத்துவத்தை நாடலாம். நுண்ணுயிர், தொற்றுநோய், நச்சுயிர்களைக் களைய வேதிமருத்துவத்தை நாடுவதும், சத்துக்குறைபாடுகளுக்கு மரபுமருத்துவம் நாடுவதும் ஒருவரது தெரிவாக இருக்கும் போது நாம் அதை எள்ளி நகையாடத் தேவையில்லை (எடுத்துக்காட்டு: கொட்டம்சுக்காதி தைலம், காஞ்சித்தழை, சாணிப்பூட்டாந்தழை)
3. போலி மருத்துவம். மிடீல உவர் ஆனர். போகிற போக்கில் தன் விருப்பு வெறுப்புகட்கொப்ப, அறமற்றுத் தன்முனைப்பும் தன்னலமும் கொண்டு, பேச்சு, எழுத்துத் திற்மையால் நீக்கமற நிறைந்திருக்கும் பேரறிஞர்களை, வணிக நிறுவனங்கள் வார்த்தெடுக்கின்றன. தன்னறிவுப் போதாமை கொண்டவர்கள் போற்றி வழிபடுகின்றனர். சட்டங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு இத்தகைய போக்கினை மட்டுப்படுத்தலாம்; ஆனால் முற்றிலும் களையவே முடியாது. மாறாக, சமூகம் அறிவுப்புலத்தில் இயங்கித் தன்னறிவுக்கு வசப்படுதலே பின்னடைவினை இல்லாமற் செய்யும்.
4. தம்பொறுப்பு. அய்யன் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே எல்லாமும் சொல்லிப் போய்விட்டார். அவற்றை உணர்ந்து இருத்தலே பெரும்பயனை ஈட்டும். https://youtu.be/dPDyXlkf3zo
(இதையெல்லாம் பேசி, ஒரு விவாதப் பொருளாக்க வேண்டி இருக்கு. சை... where is the common sense heading?)
மரபு மருத்துவம்
போலி மருத்துவம்
தம்பொறுப்பு
இவற்றுக்கிடையே சிண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆகையால் நம் புரிதலையும் உளமாரச் சொல்லிக் கொள்வோம். பின்னூட்டங்களைப் பொறுத்து புரிதலைச் சரி செய்தும் கொள்வோம். இஃகிஃகி!
1. அறிவியல், இன்று ஒன்றைச் சொல்லும். புது அறிதல்களுக்கொப்ப இன்று சொல்வதை நாளையே அது மறுக்கக் கூடும். அதுதான் புத்தாக்க அறிவியல். தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கொப்ப அது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். முறைசார் அறிஞர்களை நம்பித்தான் சமூகம் இயங்கியாக வேண்டும். ஆகவே, புதுமை அறிவியல்தான் முதன்மை. (எடுத்துக்காட்டு: நுண்ணோக்கியில் குருதியின் அணுக்களை ஆய்ந்து நோய்க்கூறுகள் கண்டறிவது)
2. மரபு மருத்துவமும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதாலும், உரிய பதிவுகள், முறையான நிறுவுசான்றுப் பதிவுகள் இல்லாததாலும் சிதைவுக்கு ஆட்படுகிறது. ஆனால், முற்றிலும் ஒதுக்கிவிட, நிராகரிக்கத் தேவையில்லை. துய்ப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, அனுபவத்தின் அடிப்படையில் தன்னாய்ந்து ஏற்றுக் கொள்ளலாம். எடுத்ததற்கெல்லாம் வேதிப்பொருட்களை உண்ணாமல், மரபு மருத்துவத்தை நாடலாம். நுண்ணுயிர், தொற்றுநோய், நச்சுயிர்களைக் களைய வேதிமருத்துவத்தை நாடுவதும், சத்துக்குறைபாடுகளுக்கு மரபுமருத்துவம் நாடுவதும் ஒருவரது தெரிவாக இருக்கும் போது நாம் அதை எள்ளி நகையாடத் தேவையில்லை (எடுத்துக்காட்டு: கொட்டம்சுக்காதி தைலம், காஞ்சித்தழை, சாணிப்பூட்டாந்தழை)
3. போலி மருத்துவம். மிடீல உவர் ஆனர். போகிற போக்கில் தன் விருப்பு வெறுப்புகட்கொப்ப, அறமற்றுத் தன்முனைப்பும் தன்னலமும் கொண்டு, பேச்சு, எழுத்துத் திற்மையால் நீக்கமற நிறைந்திருக்கும் பேரறிஞர்களை, வணிக நிறுவனங்கள் வார்த்தெடுக்கின்றன. தன்னறிவுப் போதாமை கொண்டவர்கள் போற்றி வழிபடுகின்றனர். சட்டங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு இத்தகைய போக்கினை மட்டுப்படுத்தலாம்; ஆனால் முற்றிலும் களையவே முடியாது. மாறாக, சமூகம் அறிவுப்புலத்தில் இயங்கித் தன்னறிவுக்கு வசப்படுதலே பின்னடைவினை இல்லாமற் செய்யும்.
4. தம்பொறுப்பு. அய்யன் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே எல்லாமும் சொல்லிப் போய்விட்டார். அவற்றை உணர்ந்து இருத்தலே பெரும்பயனை ஈட்டும். https://youtu.be/dPDyXlkf3zo
(இதையெல்லாம் பேசி, ஒரு விவாதப் பொருளாக்க வேண்டி இருக்கு. சை... where is the common sense heading?)
10/10/2017
Terrapin Point (ஆமைமுனை)
நயாகரா ஆற்றின் மேல்நுனிக்கு அருகில் நின்று, பெருங்கொள்ளளவு கொண்ட ஆற்றுப்பாய்ச்சல் அருவியாய் வீழ்வதைக் காணலாம். காண வருபவர்களுள் எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக ஆசியர்கள். ஊர்தித் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போதே குதூகலத்துடனும் அலைபேசியுடனுமாக ஆர்ப்பட்டமாய்ப் புறப்பட்டு வருகிறார்கள். எங்கும் பேச்சொலிதான். உள்ளம் பொங்கத் தற்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். புறப்பட்டு அடுத்த இடத்துக்குச் செல்ல விரைகிறார்கள். இருக்கும் எல்லா இடங்களையும் பார்த்துவிட வேண்டுமென்கிற வேட்கை.
ஏற்கனவே பலமுறை சென்று வந்த இடம். எனினும் அமெரிக்கக் கரையில் இருந்து காண்பது இதுவே முதன்முறை. ஆனால், நம்மவர்களின் ஆர்ப்பாட்டம் என்னில் குறுக்கிட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு வெள்ளைக்காரக் குடும்பம்; இரு பிள்ளைகளோடு. மறுகோடியில், கூட்டத்தினின்று விலகி நின்று கொண்டனர். வானத்தைப் பார்க்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கைக் காட்சிகளில் தொலைந்து போகிறார்கள். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. எப்போதாவது ஒருவரின் கண்கள் மற்றவரின் கண்களைப் பார்க்கின்றன. கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். கணவன் மனைவியும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நெடுநேரம் தியான மனநிலையில் இருந்து காலத்தை நையப்புசிக்கின்றனர். ஒரு பொழுதின் போது, அவர்களுக்கே தெரியாமல், எட்டுக் கண்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருகின்றன. காலத்தின் சாட்சியாய், இடத்தின் சாட்சியாய் ஒரு படம் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர். நிதானத்தை அளவிடும் பொருட்டுத்தான், குறுக்கே செல்கிறேன். நயாகராச்சாரலின் மென்மையைத் தோற்கடிக்கின்றன அவர்களின் புன்முறுச்சிந்தல்! அல்ல, பண்பாட்டுப் புன்னகை!!
ஏற்கனவே பலமுறை சென்று வந்த இடம். எனினும் அமெரிக்கக் கரையில் இருந்து காண்பது இதுவே முதன்முறை. ஆனால், நம்மவர்களின் ஆர்ப்பாட்டம் என்னில் குறுக்கிட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு வெள்ளைக்காரக் குடும்பம்; இரு பிள்ளைகளோடு. மறுகோடியில், கூட்டத்தினின்று விலகி நின்று கொண்டனர். வானத்தைப் பார்க்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கைக் காட்சிகளில் தொலைந்து போகிறார்கள். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. எப்போதாவது ஒருவரின் கண்கள் மற்றவரின் கண்களைப் பார்க்கின்றன. கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். கணவன் மனைவியும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நெடுநேரம் தியான மனநிலையில் இருந்து காலத்தை நையப்புசிக்கின்றனர். ஒரு பொழுதின் போது, அவர்களுக்கே தெரியாமல், எட்டுக் கண்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருகின்றன. காலத்தின் சாட்சியாய், இடத்தின் சாட்சியாய் ஒரு படம் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர். நிதானத்தை அளவிடும் பொருட்டுத்தான், குறுக்கே செல்கிறேன். நயாகராச்சாரலின் மென்மையைத் தோற்கடிக்கின்றன அவர்களின் புன்முறுச்சிந்தல்! அல்ல, பண்பாட்டுப் புன்னகை!!
10/08/2017
8/02/2017
"செவ்வந்தி” நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த ருசிகரம்!!
"செவ்வந்தி” நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த ருசிகரம். முன்னதாக நூலைப் பற்றிப் பேசும் போது, ஒருவர் (அந்த ஒருவர் யார் என்பதைப் பிறகு பார்ப்போம்) இந்த நூலில் பதினாறு கதைகள் இருக்கின்றன. பொதுவாக ஐந்தின் அடுக்குகளாக 10, 15, 20 என்ற எண்ணிக்கைகள் கதைகள் இருக்கும். ஆனால், இதில் 16 இருக்கின்றன. ஏனென்று தெரியவில்லை எனச் சொல்லிவிட்டு, அதற்குரிய விளக்கத்தை நூலாசிரியர் குறிப்பிடுவாரென எதிர்பார்க்கிறேனென்று பேசினார்.
கடைசியாக எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்த போது, அரங்கத்தை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதைக் காட்டிலும், தேனீ, பெங்களூர், ஈரோடு, பவானி போன்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் ஊர் திரும்ப நேரமாகிவிட்டதே, இன்னும் இரவு உணவு உண்ண வேண்டியிருக்கிறதேயெனப் பல சிந்தனைகள் மனத்துக்குள் ஓடிக் கொண்டிருந்தமையால் சுருக்கமாகப் பேசி அமர்ந்து விட்டேன்.
விழாவுக்கு வந்திருந்தவர்களுள் பலர்,, நூலை முழுமையாக வாசித்து விட்டு, “Is there a link between the 16 stories i mean the concept; I tried analyzing but didn't get picture”, மூளையைக் கசக்கோகசக்கென்று கசக்கிக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. இஃகி, அவர்களுக்குரிய விடை இதுதான்!!
நம்ம ஊர்ல கிலோகிராம் மாதிரி அமெரிக்காவுல பவுண்டு. ஒரு பவுண்டுக்கு பதினாறு அவுன்சு. அது போல இந்த ஒரு புத்தகத்துக்கு 16 கதைகள் இருக்கட்டும்னு போட்டது குத்தமா?
அந்தக் காலத்துல ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள் இருந்தன. அதைப் போல ஒரு தொகுப்புக்கு பதினாறு கதைகள் இருக்கட்டும்னு போட்டது குத்தமா?
மூத்த புள்ள பிறந்த நாள் பதினாறு. செரி, பதினாறு கதைக இருந்துட்டுப் போகட்டும்னு போட்டது குத்தமா??
சுவீட் டென், சுவீட் பிஃப்ட்டீன், சுவீட் டுவெண்ட்டின்னு சொல்லிச் சொல்றது இல்ல. சுவீட் சிக்சுடீன்னுதா சொல்லிச் சொல்றம். அப்படி சுவீட் சிக்சுடீன் இருந்திட்டுப் போகட்டும்னு போட்டது தப்பா??
பதினாறுங்றது முழுமையின் குறியீடாக ஒலகம் முழுமைக்கும் கடைபிடிக்கப்பட்டு வருது. அப்படி முழுமையாக இருக்கட்டுமேன்னு பதினாறு கதைகள் செவ்வந்தியில இடம் பெறுவது குத்தமா??
இஃகிஃகி, பதினாறினைப் போற்றுவோம்! பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோம்!! கொளுத்திப் போட்ட எழுத்தாளர் மாப்பு ஈரோடு கதிர் அவர்கட்கு நன்றி!!
நூல்களைப் பெற அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு - 9894717185
நூலாசிரியரிடம் பெற: pazamaipesi@gmail.com
இணையத்தில் பெற: https://www.udumalai.com/sevvandhi-pazhamaipesi.htm
கடைசியாக எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்த போது, அரங்கத்தை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதைக் காட்டிலும், தேனீ, பெங்களூர், ஈரோடு, பவானி போன்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் ஊர் திரும்ப நேரமாகிவிட்டதே, இன்னும் இரவு உணவு உண்ண வேண்டியிருக்கிறதேயெனப் பல சிந்தனைகள் மனத்துக்குள் ஓடிக் கொண்டிருந்தமையால் சுருக்கமாகப் பேசி அமர்ந்து விட்டேன்.
விழாவுக்கு வந்திருந்தவர்களுள் பலர்,, நூலை முழுமையாக வாசித்து விட்டு, “Is there a link between the 16 stories i mean the concept; I tried analyzing but didn't get picture”, மூளையைக் கசக்கோகசக்கென்று கசக்கிக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. இஃகி, அவர்களுக்குரிய விடை இதுதான்!!
நம்ம ஊர்ல கிலோகிராம் மாதிரி அமெரிக்காவுல பவுண்டு. ஒரு பவுண்டுக்கு பதினாறு அவுன்சு. அது போல இந்த ஒரு புத்தகத்துக்கு 16 கதைகள் இருக்கட்டும்னு போட்டது குத்தமா?
அந்தக் காலத்துல ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள் இருந்தன. அதைப் போல ஒரு தொகுப்புக்கு பதினாறு கதைகள் இருக்கட்டும்னு போட்டது குத்தமா?
மூத்த புள்ள பிறந்த நாள் பதினாறு. செரி, பதினாறு கதைக இருந்துட்டுப் போகட்டும்னு போட்டது குத்தமா??
சுவீட் டென், சுவீட் பிஃப்ட்டீன், சுவீட் டுவெண்ட்டின்னு சொல்லிச் சொல்றது இல்ல. சுவீட் சிக்சுடீன்னுதா சொல்லிச் சொல்றம். அப்படி சுவீட் சிக்சுடீன் இருந்திட்டுப் போகட்டும்னு போட்டது தப்பா??
பதினாறுங்றது முழுமையின் குறியீடாக ஒலகம் முழுமைக்கும் கடைபிடிக்கப்பட்டு வருது. அப்படி முழுமையாக இருக்கட்டுமேன்னு பதினாறு கதைகள் செவ்வந்தியில இடம் பெறுவது குத்தமா??
இஃகிஃகி, பதினாறினைப் போற்றுவோம்! பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோம்!! கொளுத்திப் போட்ட எழுத்தாளர் மாப்பு ஈரோடு கதிர் அவர்கட்கு நன்றி!!
நூல்களைப் பெற அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு - 9894717185
நூலாசிரியரிடம் பெற: pazamaipesi@gmail.com
இணையத்தில் பெற: https://www.udumalai.com/sevvandhi-pazhamaipesi.htm
7/30/2017
”செவ்வந்தி” சிறுகதை நூல் வெளியீடு - படத்தொகுப்பு
ஜூலை 9, 2017 ஞாயிறு மாலை 3:30 - 6:00
ஓசன் உணவகம், திருச்சி சாலை, சூலூர். கோவை.
"செவ்வந்தி” சிறுகதை நூல் நான்கு நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, குறைவான காலத்தருவாயில் ஏற்பாடு செய்யப்பட்டதும் எளிமையானதும், ஆனால் நிறைவாய் அமைந்ததுமான ஒரு விழா. நிரம்பிய அரங்கம். சுற்றமும் நட்பும் உறவு பாராட்டிய ஒரு விழா. அனைவருக்கும் நன்றி!!
நூல்களைப் பெற அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு - 9894717185
நூலாசிரியரிடம் பெற: pazamaipesi@gmail.com
இணையத்தில் பெற: https://www.udumalai.com/sevvandhi-pazhamaipesi.htm
அரங்கமும் உணவும்: ஓசன் உணவகம், சூலூர்
படங்கள்: SKS காட்சி வினையகம், பாப்பம்பட்டி[ப் பிரிவு
இசை: காப்புரிமை விலக்கப்பெற்ற இணையத் தரவிறக்கம்
வாசித்து வாழ்தல் இனிது! நூல்களைப் போற்றுவோம்!!
Subscribe to:
Posts (Atom)




