முதல்ல கொஞ்சம் கட்டையப் போட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா? பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன?
ஒருத்தர் ’நான்’, ’தனது’, ’என்’ இந்த மாதரயெல்லாம் தன்னையே பிரதானமா வெச்சிப் பேசறதும், அந்த நெனப்புல திரியறதுன்னும்ன்னு சொல்றாங்க. அதைத்தான் நம்ம தமிழ் சொல்லுது, ’கிருதா’ன்னு.
அவன் ஒரு கிருதா கொணங்(குணம்) கொண்டவன், அவன் ஒரு கிருதன்ன்னு சொல்றது. அர்த்தம், அனர்த்தம்ன்னு சொல்லிக் கேட்டு இருப்பீங்க. அர்த்தமுன்னா சுலுவுல தெரியும் உங்குளுக்கு! அனர்த்தம்ன்னா? தத்துபித்துன்னு தப்புத் தப்பா எதனாச்சும் பேசி வெக்கிறது. சுயம்ன்னா, தனக்குத் தானே!
இப்ப உங்குளுக்கு நான் என்ன சொல்ல வாறேன்னு தெரிஞ்சி போச்சாக்கூ? இஃகிஃகி! ஆமாங் கண்ணூ, என்னைப் பத்தி நானே, கிருதனாட்டம் அனர்த்தம் சொல்லப் போறேன். பொறுத்துகுங்க என்ன? நெம்பக் கோவம் வந்தா, அதுக்கு நாம்பொறுப்புக் கெடையாது! என்னைய இப்பிடி எழுதச் சொன்னவிங்க சிங்கப்பூரு ஞானியாரு, அவரை வெய்யுங்கோ, என்ன வேணுமின்னாலும் செய்யுங்கோ!! என்னிய உட்ருங்க செரியா??
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
பழமைபேசிங்றதா? எங்க ஊர்ல பழமை பேசுறதுன்னா, திண்ணையில, பொடக்காளீல, கோயல்வாசல்ல, சத்திரத்துலன்னு பொதுவான எடங்கள்ல, காத்தோட்டமா ஒக்காந்து பேசுறதைச் சொல்றது கண்ணு. அதான், உங்ககோடெல்லாம் பழமை பேசுறவன்ங்ற அர்த்தத்துல பழமைபேசின்னு எனக்கு நானே வெச்சிகிட்டன்.
நெசப் பேரு கேக்குறீங்களா? எங்க பெரியண்ணம் பேரு பிரபாகரன், சின்ன அண்ணம் பேரு சந்திரசேகரன்; அதுனால, கரன்னு முடியோணுமின்னு எங்கப்பனாத்தா வெச்ச பேரு மனோகரன். ஆனா, எங்களுக்கு நெம்ப வேண்டப்பட்ட வாத்தியாரு ஒருத்தரு மணிவாசகம்ன்னு பள்ளிக்கூடத்துல காதைத் தொட்டுச் சேத்தும் போது எழுதிப்போட்டாரு. அதேவும் நெலைச்சும் போச்சு கண்ணூ. எனக்குமு புடிச்சுத்தான் இருக்குது.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
அன்புப் பதிவரு அகநாழிகை, அவ்ரோட இடுகை ஒன்னுல ’இப்படிக்கு ரோசு’ன்னு சொல்லிச் சொல்ல, நான் அது யாருன்னு வலையில மேய, காணொளி ஒன்னு அகப்பட்டுது. சரி பாப்பமின்னு அதைப் பாக்க, அதுல எனக்குத் தெரிஞ்ச ஈழம் - உடுப்பிட்டி அக்காவுங்க மாதரயே, ஒரு சகோதரி கதைக்குறதப் பாத்தமுமே ஒரே அழுகாச்சி. நாள் பூராவுமு ஒளிஞ்சி இருந்து, ஒளிஞ்சு இருந்து அழுதனாக்கூ. அதுவுமு, அந்த சகோதரி தன்னோட சகோதரனைப் பத்தி சொல்லும் போது, எனக்கு தாங்க முடியல.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நெம்பப் புடிக்கும்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
முருங்கைக்கா சாம்பாருமு, தயிருமு சோத்தோடொ!
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்ன கேளுவியிது? நட்புன்னாலே, மத்தவங்க கூடப் பழகுறதுதான?!
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கண்ணூ, நான் கெராமத்துல பொறந்து வளந்தவன். எங்கூர்ல இந்த ரெண்டும்மில்லை. அதுனால, எனக்கு ரெண்டும் புடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
என்னியப் பாத்து அகோ சொல்றது, குறுஞ்சிரிப்பு சிரிக்குறது, இப்பிடி சொல்லுற வணக்கத்துக்கு எதோ ஒரு விதத்துல பதில் வருதான்னு கெவினிப்பேன்.
8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
புடிச்சது, வெளிநாட்டுக்கு வந்து நெம்ப வருசங்களானாலும் இன்னியுமு ஊர் ஞாவகத்தை வெச்சிருக்குறது. புடிக்காதது, செஞ்ச தப்புகளையும் சேத்தி மறக்காம இருக்குறது.
9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?
புடிச்சது பொறுமை; புடிக்காதது, வெகுளியா இருக்குறது.
10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா, அம்மா!
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை நெற பனியனாவு, நீல நெறத்துல சல்லடம்.
12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இப்ப பாட்டுக் கேக்குலியே!
13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஆகாயத்துல இருக்குற நீல நெறம்.
14.பிடித்த மணம்?
பழனி சித்தனாதன் துண்ணூறு வாசம்.
15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
குறும்பன்
ராஜ நடராஜன்
இவங்க நல்லா எழுதுறவங்க! ஆனா, எப்பவாச்சும் ஒரு இடுகைதான் இடுறாங்க, அதான் காரணம்; நான் இந்த இடுகை இடுறது, நிமித்தம்!!
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
கேள்வியில பிழை இருக்கு. பிடித்த இடுகை எதுன்னு கேட்டு இருக்கோணும். சிங்கை ஞானியார் பதிவுல இருக்குற இடுகை எல்லாமே பிடிச்சு இருக்கு.
17. பிடித்த விளையாட்டு?
கபடி
18. கண்ணாடி அணிபவரா?
அல்ல!
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
கிராமியச் சூழல்ல இருக்குற படம்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
எம்மக வரைஞ்ச குதரை!
21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
தென்பாங்குப் பூந்தமிழ்
22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை. இது எல்லாமும் புடிக்கும். இது தவிர வேறெதுனா சத்தம் சொல்லி இருக்காங்களா கண்ணூ?!
23.பிடித்த பருவ காலம் எது?
மழலைப் பருவம்.
24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
தமிழ்ல கேளுங்க, தெரிஞ்சா சொல்றேன்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?
பதினோராயிரம் மைல்கள்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனித் திறமைக்கும், பொதுத் திறமைக்கும் என்ன வித்தியாசமுன்னு தெரியலீங்களே.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
புருசனோட கண்ணாலம்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அளவு கடந்த நித்திரை.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
மலையாள தேசம் பூராவுமு.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
நோவு நொடி இல்லாம!
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
தூங்குறதுதான்!
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை நல்லா இருந்தா, வாழ்வும் சிறப்பா இருக்கும்ன்னு நம்புறவன் நானு!
6/05/2009
6/04/2009
’நறுக்கு’ன்னு நாலு கேள்வி -- 1?
குதிரைகள்ல தலைவர்கள், வீரர்கள் உட்கார்ந்திருக்கிற மாதிரியான சிலைகள் பார்த்து இருப்பீங்க. அப்படிப்பட்ட சிலைகள்ல முன்னிரு கால்களும் தூக்கினா மாதிரி இருந்தா, அவர் போர்க்களத்துல இறந்திட்டாரு. வலதுபக்க முன்கால் மட்டும் தூக்கினா மாதிரி இருந்தா, போர்ல பட்ட குண்டடியினால இறந்திட்டாரு. இடதுபக்க முன்கால் தூக்கினாமாதிரி இருந்தா, போர்க் களத்துல ஏற்பட்ட விபத்துனால இறந்துட்டாரு. நாலு காலும் நிலத்துல இருந்தா, அவருக்கு ஏற்பட்டது இயற்கை மரணம். நாலுகாலும் நிலத்துல ஊன்றி இருக்காம இருந்தா, உங்களைப் போல அவரும் உயிரோட இருக்கார்ன்னு தானே அர்த்தம்?
அவாய்த் தீவுகள் வருசத்துக்கு நாலு விரற்கடை, சப்பானை நோக்கி நகருது. அப்ப இலங்கை, இந்தியாவை நோக்கி நகருதா?
ஒருத்தர் நாய் மாதிரி, எட்டு வருசம் ஏழு மாசம் ஆறு நாட்களுக்கு குரைக்குறதுக்கு செலவாகுற சக்தியானது, ஒரு கோப்பை காப்பித் தண்ணி சூடு செய்யுறதுக்கு உண்டான அளவாம். அதான் வீட்ல சத்தம் அடங்கவே மாட்டேங்குதா?!
உலக மக்கள் தொகையில 51% பெண்கள்; 49% ஆண்கள். உலகப் பணத்துல பாதி, வெறும் ஆறு சதமான மக்கள்கிட்டவே முடங்கி இருக்கு. இந்த ஆறுல ஒரு சதம் சாகும் தருவாயில இருக்குறவங்க. ஒரு சதம் பிறந்து சில நாட்களே ஆனவங்களாம். இந்த ஆறு சதத்துல, இந்தியாவுக்கு எத்தனை சதம்?
தன்னோட சாம்பலை எடுத்து, அதை சுருக்கிப்(compress) படிகக் கல்லா மாத்தி, அந்தக் கல் வெச்ச மோதிரத்தை விருப்பமானவங்ககிட்டத் தர ஒரு நிறுவனம் $14000 விலை வெக்கிறாங்களாம்; விருப்பமிருக்குறவங்க கிட்ட இருந்து விண்ணப்பங்களைக் கோரி விளம்பரமும் செய்யுறாங்களாம். மோதிரத்துக்கு ஆசைப்பட்டு, உசுரோட இருக்குற ஆட்களைப் போட்டுத் தள்ள மாட்டாங்களா?
வருசத்துக்கு சராசரியா நாற்ப்பத்து இரண்டு இலட்சம் தடவை ஒருத்தரோட கண் இமைகள் மூடித் திறக்குதாம், அதாவது அவ்வளவுதடவை அவரு கண் சிமிட்டுறாரு. தமிழ்நாட்டுலதான் மின்பற்றாக் குறை ஆச்சே, அங்க இருக்குறவங்க கண் சிமிட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிச்சா என்னன்னு கேக்குறாரு வடஅமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன். கேள்வி நியாயமானதுதானே?
அவாய்த் தீவுகள் வருசத்துக்கு நாலு விரற்கடை, சப்பானை நோக்கி நகருது. அப்ப இலங்கை, இந்தியாவை நோக்கி நகருதா?
ஒருத்தர் நாய் மாதிரி, எட்டு வருசம் ஏழு மாசம் ஆறு நாட்களுக்கு குரைக்குறதுக்கு செலவாகுற சக்தியானது, ஒரு கோப்பை காப்பித் தண்ணி சூடு செய்யுறதுக்கு உண்டான அளவாம். அதான் வீட்ல சத்தம் அடங்கவே மாட்டேங்குதா?!
உலக மக்கள் தொகையில 51% பெண்கள்; 49% ஆண்கள். உலகப் பணத்துல பாதி, வெறும் ஆறு சதமான மக்கள்கிட்டவே முடங்கி இருக்கு. இந்த ஆறுல ஒரு சதம் சாகும் தருவாயில இருக்குறவங்க. ஒரு சதம் பிறந்து சில நாட்களே ஆனவங்களாம். இந்த ஆறு சதத்துல, இந்தியாவுக்கு எத்தனை சதம்?
தன்னோட சாம்பலை எடுத்து, அதை சுருக்கிப்(compress) படிகக் கல்லா மாத்தி, அந்தக் கல் வெச்ச மோதிரத்தை விருப்பமானவங்ககிட்டத் தர ஒரு நிறுவனம் $14000 விலை வெக்கிறாங்களாம்; விருப்பமிருக்குறவங்க கிட்ட இருந்து விண்ணப்பங்களைக் கோரி விளம்பரமும் செய்யுறாங்களாம். மோதிரத்துக்கு ஆசைப்பட்டு, உசுரோட இருக்குற ஆட்களைப் போட்டுத் தள்ள மாட்டாங்களா?
வருசத்துக்கு சராசரியா நாற்ப்பத்து இரண்டு இலட்சம் தடவை ஒருத்தரோட கண் இமைகள் மூடித் திறக்குதாம், அதாவது அவ்வளவுதடவை அவரு கண் சிமிட்டுறாரு. தமிழ்நாட்டுலதான் மின்பற்றாக் குறை ஆச்சே, அங்க இருக்குறவங்க கண் சிமிட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிச்சா என்னன்னு கேக்குறாரு வடஅமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன். கேள்வி நியாயமானதுதானே?
இது இதுதான்....
சில பல நேரங்களில் நாம் ஒன்றைச் சொல்ல, அது அதுவாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அதைப் பரங்கியர் மொழியில் misunderstanding என்கிறோம். நமது மொழியில் விகற்பம் என்கிறோம்.
அந்த ஒன்றே அதுவாகவும், வேறொன்றுமாகவும் இருப்பது உண்டு. அந்த நேரத்தில், மறுபக்கத்தில் இருப்பவர் வேறொன்றாகக் கருத்தில் கொள்வதை பரங்கி மொழியில் misinterpreted என்கிறோம். தமிழில் பிறழ்ச்சி என்கிறோம்.
ஒன்று, அதுவாகவும் வேறொன்றாகவும் பொருள் கொள்ளும் வகையில் குறிப்பிடுவது சிலேடை நயம். ஈரடிப்பயன் என்றும் சொல்கிறோம்.
இந்தப் பின்னணியில் நாம் இப்போது காணப்போவது சில விகற்பங்கள். கடந்த சில இடுகைகளில், நாம் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்று தகுந்த இடங்களில் எழுதி வந்தோம். இன்றும் அதையேதான் சொல்கிறோம். அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.
ஆனால் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்றதை, உணர்வு வயப்படுதலைத் தவிர்த்தல் நலம் என்ற பொருளில் பலர் பொருள் கொண்டதை நாம் காண முடிந்தது. ஆகவே இந்த விகற்பத்தைக் களைய முற்படுவோம் வாருங்கள்.
உணர்வு என்றால் மனதில் ஏற்படும் ஒரு மாற்றம். உணர்வு(conscious)வயப்படுதல் என்பது, மனதார ஒன்றை கிரகித்துக் கொண்டு செயல்படுதல், mentally responding. உணர்ச்சி(feeling)வசப்படுதல் என்றால், ஏதோ ஒன்று உங்களை ஊக்குவித்ததின்(trigger) நிமித்தம் நீங்கள் உணர்ச்சியினூடாக செயல்படுதல், with physical response. உணர்ச்சிகள் என்பது, அழுகை, கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு முதலானவை.
போராளி(militant) என்பவன் தலைவன் இட்ட கட்டளைகளை உள்வாங்கி, உணர்ச்சி வசப்படாமல் செயல்படுபவன். இலக்கு இது என்று கணித்து, உபாயங்களை வகுத்துச் செயல்படுபவன். அமைதியே உருவாக இருப்பான், சுக துக்கங்கள் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் காரியத்தில் கண்ணாயிருப்பான்.
மருளன்(fanatic) என்பவன் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவன். ஏதோ ஒரு கிரியாவூக்கிக்கு(trigger) ஆட்பட்டவுடனே, உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுபவன். மகிழ்ச்சியான தருணமானால், எள்ளி நகையாடுவான். சினமாயிருந்தால், அடித்து நொறுக்குவான். வெறுப்பாயிருந்தால், கொச்சையால் பேசி உமிழ்வான்.
மேலே சொன்னவை ஒரு உதாரணத்துக்கு மட்டுமே. ஆனால், உணர்வு வயப்படுவதும் உணர்ச்சி வசப்படுவதும் சாமன்யனுக்கும் பொருந்தும். தமிழ்த் தலைவரின் உரை கேட்டு, இனி தமிழில்தான் எழுதவேண்டும் என எண்ணும் போது அவன் உணர்வுமயம் ஆகிறான். அதே தலைவரின் பேச்சைக் கேட்டு அழுதான் என்றால், அவன் உண்ர்ச்சிமயம் ஆகிறான் என்றாகிறது.
இல்லை என்பதும், அல்ல என்பதும் ஒன்றல்ல. ஆனாலும் நாம் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிப் பாவிக்கிறோம். அது விகற்பம்! நான் அவன் இல்லை என்பது தவறு. நான் அவன் அல்ல என்றே வர வேண்டும். தமிழில் நுண்ணியம் இருக்கு, தமிழில் நுண்ணியம் இல்லை என்பது சரி. ஆகவே, எங்கெல்லாம் உண்டு, இல்லை, இருக்கு என்கிற சொற்களைப் பாவிக்கிறோமோ அங்கு மட்டுமே இல்லை என்பதுவும் வரும்.
அதே போல வாழ்வும், வாழ்க்கையும் ஒன்றல்ல. அவன் வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் அவனுடைய வாழ்வு சிறப்பாக இல்லை. இது சரி. எப்படி? அவன் அன்றாட நியதிகளைச் சரியாகக் கையாண்ட போதும், பிறந்ததிலிருந்து இன்றைய நாள் வரையிலான நாட்கள் அவனுக்கு சிறப்பாக அமையவில்லை என்று பொருளாகிறது. பரங்கியர் மொழியில் சொல்ல வேண்டுமானால், வாழ்வு என்பது life. வாழ்க்கை என்பது livelihood. ஆக, ’அவனுக்கு கிடைச்ச வாழ்க்கையப் பாரு’ என்பது தவறு. ’அவன் வாழுற வாழ்க்கையப் பாரு’ அல்லது ’அவனுக்குக் கிடைச்ச வாழ்வு பாரு’ என்று வர வேண்டும்.
இயன்றது செய்கிறேன் என்பதும், முடிந்தது செய்கிறேன் என்பதும் ஒன்றல்ல. I do whatever I could என்பதும், I do whatever I am able to என்பதும் ஒன்றல்ல. என்னால் இயன்றது என்றால், தன் சக்திக்கு ஆன வரையிலும் என்றாகிறது. முடிந்தது என்றால், தன் சக்தியோடு சேர்த்து இன்ன பிற அம்சங்களையும் கூட்டி அதனால் ஆவது என்று பொருளாகும்.
கொசுறு: உணர்ச்சி வசப்படுதலைக் குறைக்க, மிதமிஞ்சிய உப்பு, காரம், புளியுடன் சேர்த்து கத்தரிக்காயையும் குறைப்போம். உணர்வுவயப்படுதலை ஊக்குவிக்க, வெண்பூசணிக்காய் மற்றும் மோர் பாவிப்பதை அதிகப்படுத்துவோம்!
அந்த ஒன்றே அதுவாகவும், வேறொன்றுமாகவும் இருப்பது உண்டு. அந்த நேரத்தில், மறுபக்கத்தில் இருப்பவர் வேறொன்றாகக் கருத்தில் கொள்வதை பரங்கி மொழியில் misinterpreted என்கிறோம். தமிழில் பிறழ்ச்சி என்கிறோம்.
ஒன்று, அதுவாகவும் வேறொன்றாகவும் பொருள் கொள்ளும் வகையில் குறிப்பிடுவது சிலேடை நயம். ஈரடிப்பயன் என்றும் சொல்கிறோம்.
இந்தப் பின்னணியில் நாம் இப்போது காணப்போவது சில விகற்பங்கள். கடந்த சில இடுகைகளில், நாம் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்று தகுந்த இடங்களில் எழுதி வந்தோம். இன்றும் அதையேதான் சொல்கிறோம். அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.
ஆனால் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்றதை, உணர்வு வயப்படுதலைத் தவிர்த்தல் நலம் என்ற பொருளில் பலர் பொருள் கொண்டதை நாம் காண முடிந்தது. ஆகவே இந்த விகற்பத்தைக் களைய முற்படுவோம் வாருங்கள்.
உணர்வு என்றால் மனதில் ஏற்படும் ஒரு மாற்றம். உணர்வு(conscious)வயப்படுதல் என்பது, மனதார ஒன்றை கிரகித்துக் கொண்டு செயல்படுதல், mentally responding. உணர்ச்சி(feeling)வசப்படுதல் என்றால், ஏதோ ஒன்று உங்களை ஊக்குவித்ததின்(trigger) நிமித்தம் நீங்கள் உணர்ச்சியினூடாக செயல்படுதல், with physical response. உணர்ச்சிகள் என்பது, அழுகை, கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு முதலானவை.
போராளி(militant) என்பவன் தலைவன் இட்ட கட்டளைகளை உள்வாங்கி, உணர்ச்சி வசப்படாமல் செயல்படுபவன். இலக்கு இது என்று கணித்து, உபாயங்களை வகுத்துச் செயல்படுபவன். அமைதியே உருவாக இருப்பான், சுக துக்கங்கள் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் காரியத்தில் கண்ணாயிருப்பான்.
மருளன்(fanatic) என்பவன் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவன். ஏதோ ஒரு கிரியாவூக்கிக்கு(trigger) ஆட்பட்டவுடனே, உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுபவன். மகிழ்ச்சியான தருணமானால், எள்ளி நகையாடுவான். சினமாயிருந்தால், அடித்து நொறுக்குவான். வெறுப்பாயிருந்தால், கொச்சையால் பேசி உமிழ்வான்.
மேலே சொன்னவை ஒரு உதாரணத்துக்கு மட்டுமே. ஆனால், உணர்வு வயப்படுவதும் உணர்ச்சி வசப்படுவதும் சாமன்யனுக்கும் பொருந்தும். தமிழ்த் தலைவரின் உரை கேட்டு, இனி தமிழில்தான் எழுதவேண்டும் என எண்ணும் போது அவன் உணர்வுமயம் ஆகிறான். அதே தலைவரின் பேச்சைக் கேட்டு அழுதான் என்றால், அவன் உண்ர்ச்சிமயம் ஆகிறான் என்றாகிறது.
இல்லை என்பதும், அல்ல என்பதும் ஒன்றல்ல. ஆனாலும் நாம் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிப் பாவிக்கிறோம். அது விகற்பம்! நான் அவன் இல்லை என்பது தவறு. நான் அவன் அல்ல என்றே வர வேண்டும். தமிழில் நுண்ணியம் இருக்கு, தமிழில் நுண்ணியம் இல்லை என்பது சரி. ஆகவே, எங்கெல்லாம் உண்டு, இல்லை, இருக்கு என்கிற சொற்களைப் பாவிக்கிறோமோ அங்கு மட்டுமே இல்லை என்பதுவும் வரும்.
அதே போல வாழ்வும், வாழ்க்கையும் ஒன்றல்ல. அவன் வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் அவனுடைய வாழ்வு சிறப்பாக இல்லை. இது சரி. எப்படி? அவன் அன்றாட நியதிகளைச் சரியாகக் கையாண்ட போதும், பிறந்ததிலிருந்து இன்றைய நாள் வரையிலான நாட்கள் அவனுக்கு சிறப்பாக அமையவில்லை என்று பொருளாகிறது. பரங்கியர் மொழியில் சொல்ல வேண்டுமானால், வாழ்வு என்பது life. வாழ்க்கை என்பது livelihood. ஆக, ’அவனுக்கு கிடைச்ச வாழ்க்கையப் பாரு’ என்பது தவறு. ’அவன் வாழுற வாழ்க்கையப் பாரு’ அல்லது ’அவனுக்குக் கிடைச்ச வாழ்வு பாரு’ என்று வர வேண்டும்.
இயன்றது செய்கிறேன் என்பதும், முடிந்தது செய்கிறேன் என்பதும் ஒன்றல்ல. I do whatever I could என்பதும், I do whatever I am able to என்பதும் ஒன்றல்ல. என்னால் இயன்றது என்றால், தன் சக்திக்கு ஆன வரையிலும் என்றாகிறது. முடிந்தது என்றால், தன் சக்தியோடு சேர்த்து இன்ன பிற அம்சங்களையும் கூட்டி அதனால் ஆவது என்று பொருளாகும்.
கொசுறு: உணர்ச்சி வசப்படுதலைக் குறைக்க, மிதமிஞ்சிய உப்பு, காரம், புளியுடன் சேர்த்து கத்தரிக்காயையும் குறைப்போம். உணர்வுவயப்படுதலை ஊக்குவிக்க, வெண்பூசணிக்காய் மற்றும் மோர் பாவிப்பதை அதிகப்படுத்துவோம்!
6/03/2009
உப்பைக் குறைச்சிக்கலாம்!
உடுக்க உடை! உண்ண உணவு!! உறங்க உறைவிடம்!!! வாழ்வாதாரங்களான இந்த அடிப்படை வசதிகளைத் தராத ஆட்சி, ஒரு ஆட்சியா? இவர்களுக்கு ஓட்டு ஒரு கேடா?? இவைகளுக்கு உத்தரவாதம் தராத தலைவன், ஒரு தலைவனா???
மேலே கூறியது போல வெகு காரசாரமாக உணர்ச்சி உரைகளைப் பொழிவார்கள்! ”ஆகா, என்ன உரை? என்ன உரை??” என்றெல்லாம் பொங்கி, சீட்டி அடித்து, கனகச்சிதமாகக் கை கொட்டி ஆர்ப்பரிப்போம். இது இன்று, நேற்றல்ல, கி.பி 400ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது என்கிறது வரலாறு. எப்படி?
ஆம். அன்றிலிருந்து எந்த மன்னனும் சரி, மக்களாட்சி செய்தவர்களும் சரி, தன்னுடைய மக்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டுக்கு சரியானதொரு பாதுகாப்பைத் தரத் தவறியதைக் காணலாம்! மக்களும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதும் இல்லை.
உணவு, உடை, உறையுள் இருக்கட்டும், எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் என்று எப்போதாவது, யாராவது கேட்டதுண்டா? உயிருக்குத்தானே உணவு, உடை, உறையுள்? ஆனால், நாம் அதை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. காரணம், நாம் மேலே சொன்ன உரையில் நம்மை நாமே இழந்ததுதான்.
இந்த வரிசையில் இந்திராவும், சஞ்சய் காந்தி மட்டும் விதிவிலக்கு. அண்டை நாடான சீனா, இந்தியா சீனா பாயி பாயி என்று சொல்லி நட்பு நாடகம் ஆடி, நேருவின் முதுகில் குத்தியதின் விளைவாய், அவர் தீராத வேதனையுடன் உயிர் நீத்ததின் தாக்கம்தான் அதற்குக் காரணம். இந்திராவின் மறைவுக்குப் பின் எந்தத் தலைவருக்கும் நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை.
தேர்தல் வரும். ஒருவரை ஒருவர் புழுதி வாரித் தூற்றுவார்கள். நாமும் நம் பங்குக்கு அந்த ஆட்டத்தில் வெகு மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறோம். இதனால் நாட்டின் பாதுகாப்பு கேலிக்குரியதாகி, பின்னர் அதுவே மாநிலத்தின் பாதுகாப்பு அல்லது உரிமைகள் என்ற அளவுக்கு கீழிறங்கி, தற்போது அது இன்னும் ஒருபடி கீழிறங்கி, சமுதாயம் என்கிற மக்கள்த் திரள் சிதறத் துவங்கி இருக்கிறது.
எப்படி அதைத் தீர்மானிக்கிறோம்? இது அவநம்பிக்கை(pessimism) ஆகாதா என்றெல்லாம் வினவலாம்?? இது அவநம்பிக்கை அல்ல. ஒருவனுக்கு தன்னுடைய உள்ளார்ந்த நிலை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் தனது குறைகளைக் களைய ஏதுவாக இருக்கும்.
மாறாக அதை மறைக்க முற்பட்டு மழுப்புவதால் மேலும் பின்னடைவே ஏற்படும்; ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஈழத்தின்பால் மனிதாபக் குரல் கூட எழுப்ப முடியாமல் போனதும் இதன் காரணமாகத்தான். அது காவிரிக்கும் தொடரும், பெரியார் அணை தாவாவுக்கும் தொடரும், எதற்கும் தொடரும் என்ற நிலையில்தானே நாம்?!
தமிழனின் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? உணர்ச்சி வசப்படுவது, அதனால் திட்டமிட்ட போலிப் பரப்புரைகளுக்கு இரையாவது என்பதுதானே? அறிவியல் என்ன சொல்கிறது? உப்பும், புளிப்பும், காரமும் அளவுக்கு அதிகமானால், அது மாறுபட்ட விளைவுகளைத் தூண்டுகிறது என்பதுதான்.
தெலுங்கனுக்குத் தலைவலி அவன் உண்ணுகிற காரத்தைத் தரவல்ல மிளகாயில் என்றால், தமிழனுக்குத் தலைவலி அவன் உண்ணும் உப்பில்தான்! இதில் பெருமையாக உசுப்பல், என்னவென்று? நீயெல்லாம் உப்புப் போட்டுத் தின்கிற தமிழனா? சூடு சொரணை என்கிற பெயரில், இனியும் எத்தனை நாட்களுக்கு நம் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கப் போகிறோம்??
உப்பு என்பது உடலுக்குத் தேவை, ஆனால் அது தேவையான அளவில்! உப்பே உணவாக உட்கொண்டால்? உணர்ச்சி வசப்படுவோம், இருதய நோய் வரலாம், வாதநோய் வரலாம், மன உளைச்சல் நேரிடும், இரத்த அழுத்தம் மேலோங்கும், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
தேவையான உப்பு என்பது, உணவின் மூலப் பொருள்களிலேயே அடங்கி உள்ளது, அதாவது காய்கறிகளில், பதனிட்ட உணவுகளில் என்று. அமெரிக்க மருத்துவக் கழகம் சொல்கிறது, தினமும் ஒரு கிராம் உப்பைக் குறைத்துக் கொள்வதின் மூலம், அமெரிக்காவில் மாத்திரமே பத்தாண்டுகளில் 2 லட்சம் பேரின் இழப்பைத் தவிர்க்கலாம் என்று.
ஆகவே உட்கொள்ளும் உப்பு, கூடவே காரம் மற்றும் புளிப்பைக் குறைத்து வாழ்வில் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்துவோம். அதோடு தனிநபரின் உயிருக்கு உத்தரவாதம், சமூகத்தின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிமை கோருவோம்!
மேலே கூறியது போல வெகு காரசாரமாக உணர்ச்சி உரைகளைப் பொழிவார்கள்! ”ஆகா, என்ன உரை? என்ன உரை??” என்றெல்லாம் பொங்கி, சீட்டி அடித்து, கனகச்சிதமாகக் கை கொட்டி ஆர்ப்பரிப்போம். இது இன்று, நேற்றல்ல, கி.பி 400ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது என்கிறது வரலாறு. எப்படி?
ஆம். அன்றிலிருந்து எந்த மன்னனும் சரி, மக்களாட்சி செய்தவர்களும் சரி, தன்னுடைய மக்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டுக்கு சரியானதொரு பாதுகாப்பைத் தரத் தவறியதைக் காணலாம்! மக்களும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதும் இல்லை.
உணவு, உடை, உறையுள் இருக்கட்டும், எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் என்று எப்போதாவது, யாராவது கேட்டதுண்டா? உயிருக்குத்தானே உணவு, உடை, உறையுள்? ஆனால், நாம் அதை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. காரணம், நாம் மேலே சொன்ன உரையில் நம்மை நாமே இழந்ததுதான்.
இந்த வரிசையில் இந்திராவும், சஞ்சய் காந்தி மட்டும் விதிவிலக்கு. அண்டை நாடான சீனா, இந்தியா சீனா பாயி பாயி என்று சொல்லி நட்பு நாடகம் ஆடி, நேருவின் முதுகில் குத்தியதின் விளைவாய், அவர் தீராத வேதனையுடன் உயிர் நீத்ததின் தாக்கம்தான் அதற்குக் காரணம். இந்திராவின் மறைவுக்குப் பின் எந்தத் தலைவருக்கும் நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை.
தேர்தல் வரும். ஒருவரை ஒருவர் புழுதி வாரித் தூற்றுவார்கள். நாமும் நம் பங்குக்கு அந்த ஆட்டத்தில் வெகு மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறோம். இதனால் நாட்டின் பாதுகாப்பு கேலிக்குரியதாகி, பின்னர் அதுவே மாநிலத்தின் பாதுகாப்பு அல்லது உரிமைகள் என்ற அளவுக்கு கீழிறங்கி, தற்போது அது இன்னும் ஒருபடி கீழிறங்கி, சமுதாயம் என்கிற மக்கள்த் திரள் சிதறத் துவங்கி இருக்கிறது.
எப்படி அதைத் தீர்மானிக்கிறோம்? இது அவநம்பிக்கை(pessimism) ஆகாதா என்றெல்லாம் வினவலாம்?? இது அவநம்பிக்கை அல்ல. ஒருவனுக்கு தன்னுடைய உள்ளார்ந்த நிலை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் தனது குறைகளைக் களைய ஏதுவாக இருக்கும்.
மாறாக அதை மறைக்க முற்பட்டு மழுப்புவதால் மேலும் பின்னடைவே ஏற்படும்; ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஈழத்தின்பால் மனிதாபக் குரல் கூட எழுப்ப முடியாமல் போனதும் இதன் காரணமாகத்தான். அது காவிரிக்கும் தொடரும், பெரியார் அணை தாவாவுக்கும் தொடரும், எதற்கும் தொடரும் என்ற நிலையில்தானே நாம்?!
தமிழனின் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? உணர்ச்சி வசப்படுவது, அதனால் திட்டமிட்ட போலிப் பரப்புரைகளுக்கு இரையாவது என்பதுதானே? அறிவியல் என்ன சொல்கிறது? உப்பும், புளிப்பும், காரமும் அளவுக்கு அதிகமானால், அது மாறுபட்ட விளைவுகளைத் தூண்டுகிறது என்பதுதான்.
தெலுங்கனுக்குத் தலைவலி அவன் உண்ணுகிற காரத்தைத் தரவல்ல மிளகாயில் என்றால், தமிழனுக்குத் தலைவலி அவன் உண்ணும் உப்பில்தான்! இதில் பெருமையாக உசுப்பல், என்னவென்று? நீயெல்லாம் உப்புப் போட்டுத் தின்கிற தமிழனா? சூடு சொரணை என்கிற பெயரில், இனியும் எத்தனை நாட்களுக்கு நம் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கப் போகிறோம்??
உப்பு என்பது உடலுக்குத் தேவை, ஆனால் அது தேவையான அளவில்! உப்பே உணவாக உட்கொண்டால்? உணர்ச்சி வசப்படுவோம், இருதய நோய் வரலாம், வாதநோய் வரலாம், மன உளைச்சல் நேரிடும், இரத்த அழுத்தம் மேலோங்கும், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
தேவையான உப்பு என்பது, உணவின் மூலப் பொருள்களிலேயே அடங்கி உள்ளது, அதாவது காய்கறிகளில், பதனிட்ட உணவுகளில் என்று. அமெரிக்க மருத்துவக் கழகம் சொல்கிறது, தினமும் ஒரு கிராம் உப்பைக் குறைத்துக் கொள்வதின் மூலம், அமெரிக்காவில் மாத்திரமே பத்தாண்டுகளில் 2 லட்சம் பேரின் இழப்பைத் தவிர்க்கலாம் என்று.
ஆகவே உட்கொள்ளும் உப்பு, கூடவே காரம் மற்றும் புளிப்பைக் குறைத்து வாழ்வில் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்துவோம். அதோடு தனிநபரின் உயிருக்கு உத்தரவாதம், சமூகத்தின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிமை கோருவோம்!
ஒரே ஆணி!
வணக்கம் மக்களே! இன்னைக்கு வீட்ல ஒரே ஆணி! குழந்தைகளை கோயிலுக்கு அழைச்சிட்டுப் போய்வர ரொம்ப நேரம் ஆகும். ஆகவே நான் எழுத இருந்த என்னோட நினைவுகளுக்கு மூலமானவங்க, இளஞ்சிங்கம் சஞ்சய் அவ்ர்களோட நிழல்படம் மாத்திரம்!
6/02/2009
அதிரடி! ஆச்சரியம்!!
உரக்கப் பேசினா உண்மை! உண்மை அல்லாததை கூட்டத்தை சேர்த்துகிட்டு, மொத்தமாப் பேசுனா அதுவே உண்மை!! பத்திரிகை அல்லது ஊடகத்துல எது வந்தாலும் அது உண்மை!! இது யதார்த்தம்; அந்த யதார்த்தம் உண்மை அல்லாதப்ப அதை முறியடிக்க வேண்டிய கடமை நம்ம எல்லாருக்கும் இருக்கு!!
ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; இந்த இடத்துலதாங்க, ‘நான்’ங்ற அகம்பாவம் அடிபட்டுப் போகுது.
இதைத் தெளிவாப் புரிஞ்சிட்டா, வாழ்க்கையில நிறையப் பிரச்சினைகள் வராதுன்னு சொன்னாரு ஒரு பெரியவர். உடனே அது யார் அந்தப் பிரபலம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடாதீங்க! அது எங்க பூட்டன் வெண்குடை சுப்பையாங்ற விவசாயி எழுதி வெச்ச விலாக்குறிப்பு (புத்தகத்துப் பக்கங்களின் விளிம்பில் எழுதி வைப்பது).
அந்த வகையில ஒரு சில உண்மைக் கூற்றுகள்:
எப்ப வேணாலும் பொய் சொல்லலாம். ஆனா ஒருத்தர், தலையில நிக்கும் போது, அதாவது தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?
அமெரிக்கக் குடிமக்கள்ல நாலு பேர்த்துல ஒருத்தர் எதோ ஒரு தொலைக் காட்சியில தோற்றம் அளிச்சவங்களா இருக்காங்களாம். நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் கிடையாது, இருந்தாலும் உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அதுவும் ஒளி பரப்புல இடம் பிடிச்சது.
நீங்க தும்மும் போது வாய்/மூக்குல இருந்து பறக்கக் கூடிய துகளின் வேகம் மணிக்கு 100 மைல்களுக்கும் மேல்.
குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை!
சரி வரட்டுமாங்க? இஃகிஃகி!!
ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; இந்த இடத்துலதாங்க, ‘நான்’ங்ற அகம்பாவம் அடிபட்டுப் போகுது.
இதைத் தெளிவாப் புரிஞ்சிட்டா, வாழ்க்கையில நிறையப் பிரச்சினைகள் வராதுன்னு சொன்னாரு ஒரு பெரியவர். உடனே அது யார் அந்தப் பிரபலம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடாதீங்க! அது எங்க பூட்டன் வெண்குடை சுப்பையாங்ற விவசாயி எழுதி வெச்ச விலாக்குறிப்பு (புத்தகத்துப் பக்கங்களின் விளிம்பில் எழுதி வைப்பது).
அந்த வகையில ஒரு சில உண்மைக் கூற்றுகள்:
எப்ப வேணாலும் பொய் சொல்லலாம். ஆனா ஒருத்தர், தலையில நிக்கும் போது, அதாவது தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?
அமெரிக்கக் குடிமக்கள்ல நாலு பேர்த்துல ஒருத்தர் எதோ ஒரு தொலைக் காட்சியில தோற்றம் அளிச்சவங்களா இருக்காங்களாம். நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் கிடையாது, இருந்தாலும் உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அதுவும் ஒளி பரப்புல இடம் பிடிச்சது.
நீங்க தும்மும் போது வாய்/மூக்குல இருந்து பறக்கக் கூடிய துகளின் வேகம் மணிக்கு 100 மைல்களுக்கும் மேல்.
குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை!
சரி வரட்டுமாங்க? இஃகிஃகி!!
6/01/2009
அமெரிக்காவுக்கு பதிலடி! பெண்டிர் வளர்ச்சிக்கு முதல்படி!!
சமீபத்தில் அமெரிக்காவின் உச்ச நீதிபதியாக ஒரு சிறுபான்மை இனத்தைச் சார்ந்த, அதுவும் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணியை அந்நாட்டு அதிபர் நியமனம் செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அது போலவே இந்தியாவிலும் வரலாற்றில் முதல் முறையாக, மக்கள் சபைத் தலைவர் பதவிக்கு தலித் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியை நியமிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பதை நாம் அறிகிறோம். எம்மைப் பொறுத்த மட்டிலும், மாநில முதல்வர், இந்தியாவின் பிரதமர், ஏன் அமெரிக்காவின் அதிபர் பதவியைக் காட்டிலும் சவாலான பதவி இந்த இந்திய பாராளுமன்ற சபாநாயகர் பதவி என்பது. 545 உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி அவையை நடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அதைக் கையாளும் பொறுப்பு, இப்போதுதான் ஒரு பெண்மணிக்கு கிடைக்க இருக்கிறது என்பதும் தாமதமான ஒன்றுதான்.
இவரது தலைமையில் நடக்கப் போகும், இந்த 15வது மக்கள் சபையின் காலத்திலேயே, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுமானால், அதைவிட அளப்பரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது.
பெண்களின் வளர்ச்சி துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த வளர்ச்சிக்குத் தேவையானது, நாம் முன்னரே உரைத்தது போல பாரிய அளவிலான உளவியல்ப் புரட்சியாக மட்டுமே இருக்க முடியும்.
முதற்கட்டமாக, பெண்ணடிமை, ஆணாதிக்கம், பெண் விடுதலை போன்ற சொற்களை அறவே ஒழித்தாக வேண்டும். ஏன்? இவையெல்லாம் எதிர்மறைப் (negative approach) பார்வையோடு, துயரச் சிந்தனை(pessimism)யோடு சமூகத்தை நாடும் சொற்கள். அவற்றைக் கையாளுவதால், மறைமுகமாக (indirect) பெண் அடிமையானவள், ஆண்களின் ஆதிக்கத்தில் தாழ்ந்து போனவர்கள், விடுதலையற்றுக் கிடப்பவர்கள் போன்ற உணர்வைச் சமூகத்தில் நாமே விதைக்கும் காரியத்திற்கு துணை போகிறோம்.
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? மங்கயர்தாழ் நிலையை, தாழ்ந்த நிலையில் இருந்து மேன்மை நிலைக்குக் கொண்டு செல்லும் முகமாக, பெண் வளர்ச்சி, மங்கையர் மறுமலர்ச்சி போன்ற மேன்மைச் சிந்தனை(Optimism)யுள்ள சொற்கள் கொண்டு சமூகத்தை அணுக வேண்டும்.
சொற்களை மாற்றிக் கையாளுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா? இங்கே சொற்கள் என்பது முக்கியமல்ல. சிந்தனையும் மாறுபடுகிறது! இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தின் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவே அடிப்படை. சமூகத்தில், தெரிந்தோ தெரியாமலோ அவநம்பிக்கையுள்ள(pessimism) சிந்தனை வேரோடிப் போயிருக்கிறது. சமூகத்தின் லெளகீக வாழ்வில் நிகழும் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
காலையில் எழுந்ததும் மனைவி, “ஏங்க, வேலைக்குப் போகலையா?”. அதற்கு கணவன், “நீ இன்னும் காபி போடலையா? காபி போடாம என்ன செய்யுற??”.
அதுவே பக்கத்து வீட்டில், “வேலைக்குப் போறீங்கதானே? நேரம் ஆகுது அதான்!”. உடனே கணவன், “காபி போட்டுட்டியா, இதோ வர்றேன்!”.
இந்த இரு வீடுகளிலும் என்ன வேறுபாடு? முந்தைய வீட்டில், எதிர்மறைச் சிந்தனை தாண்டவமாடுவதை உணரலாம். அதுவே பக்கத்து வீட்டில், இன்பமயச் சிந்தனை வழிந்தோடுகிறது என்பதுதான்.
இரு நண்பர்கள், அவர்களுக்கு வயது 8. முதலாமவன் மாட்டு வண்டியில் இருந்து வீசப்படும் திரைப்பட அறிவிப்புத் துண்டுகளைப் பெறச் செல்கிறான். திரும்பி வருபவனைப் பார்த்து, “டே குமாரு, நோட்டீசு கெடச்சுதாடா?”. அதே நண்பர்கள், வயது 18, உடுமலை லதாங்கி திரையகம் முன்பு, “என்றா, டிக்கெட் கெடைக்கலையா?”. “கெடச்சது, வா போலாம்!”. ஆக இடைப்பட்ட இந்த பத்துவருட காலத்தில், அவர்களுக்குள் இந்த எதிர்மறைச் சிந்தனையை ஊட்டியது யார்? சமூகம்!
திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன், மணமகள் வீட்டார் ஏதோ குறித்து மறைவாகப் பேசிக் கொண்டு உள்ளனர். அதையறிந்த மூன்றாம் நபரான இவர், “என்ன, கல்யாணத்துல ஏதும் பிரச்சினையா?” என்று கேட்கிறார். கல்யாண வேலை எல்லாம் நன்றாக நடக்கிறதாயென ஏன் இவர் கேட்கக் கூடாது?? அவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே எதிர்மறைச் சிந்தனையோடு கேட்பது கிடையாது. இயல்பாகவே அப்படித்தான் பேச்சு வருகிறது சமூகத்தில். இதில் அந்த தனிப்பட்ட நபரைக் குறை சொல்வது சரி ஆகாது.
இப்படி உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால், pessimism என்கிற அவநம்பிக்கை எங்கும் வியாபித்திருப்பதைக் காணலாம். கடை இன்னும் திறக்கலையா? பஸ் போயிருச்சா? பள்ளிக்கூடத்துல இடம் கிடைக்கலையா? அரிசி தீர்ந்து போச்சா? இப்படி நிறைய! சரி, இனி இவற்றின் மூலம் மற்றும் விளைவுகளைப் பார்ப்போம்.
மூலம் என்று பார்த்தால், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்கள். பேச்சாளர்கள் என்பவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். பெரும்பாலும் பரப்புரையாளர்கள்தானே?! ஊடகங்களிலும் எதிர் மறையான காட்சிகள் கொண்டு வெகுவாக துயரத்தைக் காண்பித்து, எதிர்மறையை விதைத்து வளர்த்து விடுகிற நிலையை நீங்கள் சுலபமாக உணரலாம்.
நான் 1990களிலே பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, பெரும்பாலும் 1980களுக்கு முன் வந்த நாவல்கள், நூல்களை வாசிப்பது உண்டு. அவற்றிலெல்லாம் நல்ல சிந்தனைக்குரிய, வெற்றியை அடிப்படையாகக் கொண்ட நேர்மறைக் காட்சிகள் வெகுவாக வர்ணிக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கோ வதைபடுவதை இரசிக்க சாரை சாரையாய் மக்கள் கூட்டம். இரசனையே மாற்றப்பட்டு விட்டதுதானே காரணம்?!
இன்றைய உலகில் அறிவியல் சாதனம் கொண்டு, ஒருவர் எந்த மாதிரியான உணர்வுடன் இருந்தார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. எப்படி? அவன் உணர்வுகள் மூளையில் அதற்கான சுவடுகளைப் பதிக்கிறது. அதைப் படம் எடுப்பதின் மூலம், மருத்துவர்கள் பதிந்த உணர்வுகளைக் கணக்கிடுகிறார்கள் என்பதே!
ஆக, வெந்தசாமியோ நொந்தசாமியோ, யாரோ ஒருவர் தெருமுனையில் நின்று கொண்டு பரப்புரையாற்றும் போது கேட்கப்படும் வக்கிரங்கள், அவனுள்ளும் அவளுள்ளும் சுவடுகளாய் விதைக்கப் படுகிறது. அது போன்றதுதான் காணொளிக் காட்சிகளும்.
அச்சுவடுகள், குரோமோசோம்கள் வழியாகச் சென்று பிறக்கும் குழந்தையினுள்ளும் தங்குகிறது. சமூகத்தில், வெளிச் சக்திகளால் விதைக்கப்படுகிற வக்கிரங்கள் நம்முள் செல்வதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, கர்ப்பம் தரித்த பின் அமைதியாய்ப் பாடல்கள் கேட்பதின் மூலம், குழந்தையினுள் பதிந்த சுவடுகள் அழிந்து விடுமா?
நன்னம்பிக்கையோடு பிரச்சினையை அணுக வேண்டும், எனவேதான் முன்னாள் குடியரசுத் தலைவர் நல்ல கனவு காணுங்கள் என்றார். அதையும் கனவு காணச் சொல்கிறார் என்று பொத்தாம் பொதுவாகக் கூறி, சிந்தனையை மழுங்கடித்து விட்டோம்.
மனநல மருத்துவர் ருத்திரன் ஐயா அவர்களைப் போன்று, ஆயிரமாயிரம் ருத்திரன்கள் வர வேண்டும். அவர்கள் எல்லாம், கலை, இலக்கியம், பத்திரிகை, ஊடகங்கள் என எங்கும் வியாபித்து உளவியல்ப் புரட்சியைக் கொண்டு வரவேண்டும்.
அவ்வாறு உளவியல் ரீதியாக, பெண்களின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வுகள் சமூகத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நல்ல நம்பிக்கையை ஊட்டி, பெண்களுக்கு சமூகத்தில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.
மக்கள் சபைத் தலைவராக பதவி ஏற்கும்பட்சத்தில், வேளாண்மைத் துறையில் புரட்சிகளைக் கொணர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களைப் போலவே, அவரது புதல்வி மீரா குமார் அவர்களும் புரட்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு,
பழமைபேசி.
Subscribe to:
Posts (Atom)