8/11/2022

நதியெங்கே செல்கின்றது? கடலைத் தேடி...


நமக்கெல்லாம் தெரிந்ததுதான்

வளைந்து நெளிந்து

கொந்தளிப்புகளினூடாக 

பதற்றத்துடன் பாய்கின்றது நதி

திரும்பிப் பார்க்கின்றது

வந்த பாதையை

மலை உச்சிகளை

தான்வீழ்ந்த பள்ளத்தாக்குகளை

காடுகளை மலையோர ஊர்களை

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு அமிழ்ந்துவிடப்போகின்றோம்

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு மூழ்கிவிடப்போகின்றது

வேறுவழியில்லை நதிக்கு வேறுவழியில்லை

நதி திரும்பிச் சென்றுவிட முடியாது

எவரும் திரும்பிச் சென்றுவிட முடியாது

துணிச்சலோடு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

கடலுக்குள் நுழைவதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

அப்போதுதான் அச்சம் விலகியோடும்

அப்போதுதான் நதிக்குத் தெரியவரும்

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலாகவே ஆவதுதான் அது!!


[ஜமுனா மாப்ள அவர்கள், ’கடலைத் தேடி ஓடும் நதி’ என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னார். யோசிக்கத் தலைப்பட்ட போது எப்போதோ படித்த கலீல் ஜிப்ரான் அவர்களின், ‘திரும்பச் செல்லமுடியாது நதிக்கு’ எனும் படிமக் கவிதைதான் நினைவுக்கு வந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விருப்பமானவை இருக்கும். தம் வாழ்வில் இன்னின்னதைச் செய்தால் மனம் நிறைவு கொள்ளுமென்கின்ற இலக்குகள் இருக்கும். அவற்றை எப்படி அடையப் போகின்றோமென எண்ணும் போது, அச்சமாக இருக்கும். வாழ்க்கைப் பயணம் என்பது நதியைப் போல. எப்படியாக மடிந்தோமென்பதல்ல; எப்படியாக வாழ்ந்தோமென்பதுதானே? எதிர்காலத்தைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்! சியர்ஸ்!!]

No comments: