10/26/2017

வேய்க்கானம்



 தொறந்திருக்குற ஊட்டுக்குத் தொறப்புக்குச்சி தேடுறவனோடெல்லாம் சகவாசம் எதுக்குங்றேன்? ஓடியாடிப் பாடுபட்டுச் சேக்குற வழியப் பாத்தா உருப்புடுலாம். வேய்க்கானம்ங்றது நெம்ப முக்கியமல்லோ? ஏன்னா, ஒறவும் பகையும் கையில காசிருந்தாத்தான் வந்து சேரும். இருக்குற ஒறவு அந்து போறதும் அந்தக் காசாலத்தான் போகும். அதுனால வேய்க்கானம் நெம்ப முக்கியம்.

 என்றா இவன் நெம்பத்தான் பாடம் போடுறானேன்னு யோசிக்கிறீங்ளாட்ட இருக்கூ? சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும் பரிஞ்சு போடாத சோறும் இருந்தாயென்ன? இல்லாட்டியென்ன?? அதாஞ்சொல்றன். பின்ன. உங்களுக்குன்னு நான் இருக்குறது எதுக்கு? திருவுண்டானா திறமையும் வந்து சேரும்.

தெகிரியமா இருங்க!! ஒழுக ஒழுகப் பேசுனாக் காசாயிருமா? போயி, நீங்களும் உங்க பொழப்பு தழப்பைப் பாருங்க. நானும் என்ற பொழப்பைப் பாக்குறன்!! 

-பழமைபேசி.

No comments: