2/27/2011

செலுத்தி(jockey)யும், நள்ளிரவு நாய்களும்!

உலகின் ஒரு கோடியில்
அது நள்ளிரவு நேரம்
நகரத்து நாய்கள்
கிராமத்து நாய்களெனப்
பேதம் பாராது
வலையில் திரிந்து கொண்டிருந்தன;
அந்த நாய்களுக்குச் செலுத்தி
தாயகமும் தம் மொழியும்!!
அந்தத் திரிதலில்
அகப்பட்ட காணொலிகள்
சொல்லாமற் சொல்லியது
நாய்களுக்கும் முகவரி உண்டு!
நாய்களுக்கும் முகவரி உண்டு!!







10 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

வலையில் திரிந்து கொண்டிருந்தன;
அந்த நாய்களுக்குச் செலுத்தி
தாயகமும் தம் மொழியும்!!//

யாரை சொல்றீங்க.. தவறா புரிய வாய்ப்பிருப்பதால் கேட்கிறேன்..

தெளிவா சொன்னால் நன்று.

பழமைபேசி said...

@@ பயணமும் எண்ணங்களும் said...


நானும் என் நண்பர்களுமுங்க... வெள்ளி, சனி நாட்கள்ல நாங்க அப்படித்தான்...

Unknown said...

அருமை நச்..ஆனால் இதில் கிராமம்,நகரம் என்பதற்க்கு பதில் வேற எதாவது சொற்பதத்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

வருண் said...

மணியண்ணா! இதை உண்மைக்கதைனு சொன்னா நம்பலாம்தான்! :)

Chitra said...

உண்மையிலேயே இந்த காணொளிகளைக் காணும் போது, பெருமையாக இருக்கிறது... பகிர்வுக்கு நன்றிங்க...

நிலவு said...

ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

அப்பாதுரை said...

செலுத்தி - நன்று!

ஈரோடு கதிர் said...

பகிர்வுக்கு நன்றிங்க மாப்பு!

நசரேயன் said...

வீட்டிலே போய் படம் பார்க்கிறேன்

பாலா said...

ஒன்னியும் புர்ல தல. நேர்ல நல்லாதானே பேசறீங்க?? ;)