12/30/2011

மனுஷ்யபுத்திரனே, தொடர்க!!




அண்மையில், கமலஹாசனின் வணிக இதழ்ச் செவ்விகளை நூலாக்கி இருக்கிறார்கள் என விமர்சனம் எழுந்தது. அதுவும், அந்த விமர்சனம் கடுமையாகவும் இருந்தது. சமூகக் கருத்துகளைத் தெளிக்கும் கலைஞனுடைய சொற்களை நூலாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்? இருபதாண்டுப் பழைய கல்கி, குமுதம் கிடைத்தால் ஒருவித ஆவலுடன் படிப்பதில்லையா நாம்? விமர்சனம் செய்தோர்க்கு இக்காணொலியை காணப் பணிக்கிறேன். இன்னுஞ்சொல்லப் போனால், இது போன்ற பேச்சுகளையும் மனுஷ்யபுத்திரன் நூலாக்க முன் வர வேண்டும்.

பகுத்தறிவாளன் மற்றவர்கள் பொட்டை அழித்த்துத்தான் பகுத்தறிவை நிறுவ வேண்டியதில்லை. மற்றவர்களை அன்போடு பார்த்துத் தம் கொள்கைக்கு வரவேற்க வேண்டும்!!

12/29/2011

இலகான் புயல்

இலகான் புயல்
இன்னுஞ்சிறிது நேரத்தில்
வங்கங்கடற்கரையில்
புறப்பட்டு
பாரசீகவளைகுடா
கருங்கடல்
செங்கடல்
கடந்து
அட்லாண்டிக் பெருங்கடலைக்
கடக்க இன்னும்
இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு
குறைவாகவே உள!!

12/28/2011

பிரச்சினை

"ஏங்க... எனக்குப் பிரச்சினையாக் கெடக்கு... பிரச்சினையக் கொஞ்சம் இல்லாமப் பண்ணியுடுங்களேன்?”

“யோவ்... என்னையா பிரச்சினை உனக்கு?”

“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”

“என்னயா சொல்றே? ஒரு பிரச்சினையும் இல்லையா... நெம்ப நல்லது... நிம்மதியா இரு அப்ப”

”பிரச்சினை இல்லேங்குறதுதான் பிரச்சினையே எனக்கு”

“செரி அப்ப... அந்த பிரச்சினைய வெச்சி மல்லுக்கட்டு பின்ன?”

“என்னங்க நீங்க... பார்த்தா பெரிய மனுசனாட்ட இருக்கீங்க? எனக்கு ஒரு தீர்வு சொல்லச் சொன்னா இப்படிச் சொல்றீங்களே? அதான் பிரச்சினையே இல்லைன்னு சொல்றேனில்ல? என்னதான் படிச்சுப் பட்டம் வாங்குனீங்களோ? விளங்கலையா உங்களுக்கு??”

“குழப்புறடா நீ! என்ன பிரச்சினை ஒனக்கு??”

“ஒரு பிரச்சினையும் இல்லாம வெறுமையாக் கெடக்கு...அதான் பிரச்சினை”

“அதான் சொன்னனேடா! பிரச்சினை இல்லத்தானே? நிம்மதியா இரு அப்ப”

“யோவ்... நானே பிரச்சினை எதுவும் இல்லாமப் பிரச்சினையாக் கெடக்குங்றேன்... எழவு, நீயெல்லாம் என்ன படிச்ச நீ?”

“சதக்... சதக்”

12/24/2011

புளிமரக்காடு


நத்தார் நாள் விடுப்பையொட்டி வலையில் தமிழை நுகர்ந்து கொண்டிருந்தேன். நுகர்ந்தவாக்கில் எம்மண்ணில் இருப்பதாய் உணர்ந்ததும், கண்டு கொண்டிருந்த காணொலியை ஆய்வு செய்திடப் பார்த்தால், எம்மண்ணின் சொந்தக்காரன் மா.பிரகாசு. உயிரோடு மண்ணையும் கலந்து சுவாசித்துக் கொண்டிருப்பவன். தமிழுக்காக, தமிழருக்காக ஈகங்களைச் செய்தவன்; செய்கிறவன். கொண்ட கொள்கைக்காய் வாழ்கிறானவன்!!

அழைத்துப் பேசினேன். மனதாரப் பாராட்டினேன். நான் தொலைத்த மண்ணை இலாகவமாய்ப் படம் பிடித்திருக்கிறான். கூடவே, அறமோங்க நறுந்தேன்த் தமிழால் ஊர்ப் பெரியவரைப் பாராட்டவும் செய்திருக்கிறான் அவன். நானும் அவனும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள். பிரகாசு, அண்ணனால் செய்ய வேண்டியதை இளவல் நீ செய்கிறாய். நீ வாழ்க! நின் தொண்டு வளர்க!!


12/23/2011

கலக்கமா இருக்கு!

கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

துணிகெல்லாம் துவச்சி
மடிச்சும் வெச்சிருக்கேன்
சமையலறை கழுவி
துடைச்சிம் வெச்சிருக்கேன்
குளியல்தொட்டி ரெண்டும்
கழுவிப் பளபளன்னு ஆக்கியிருக்கேன்
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

ஊர்தி ரெண்டும் பழுதுபார்த்து
கீலெண்ணெய்யும் போட்டு வெச்சிருக்கு
பாப்பாவோட பள்ளிக்கூடத்து ஆட்களுக்கு
பரிசு நல்லாக் கொடுத்தும் வெச்சிருக்கு
சுத்து முத்தும் அல்லாம்
பார்த்தாச்சு
அல்லாமும் செரியா இருக்கு
ஆனாலும் ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

ஆமா; அந்த ஒன்னை நெனைச்சா
கலக்கமா இருக்கு!
இப்பத்தான் சித்த முன்னாடி பார்த்தேன்
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
வவுறு கொஞ்சம்
ரெண்டு சுத்து
பெருத்தா மாதர இருக்கே?
ஏது சொல்வாளோ?
என்னென்னு வைவாளோ??
கலக்கமா இருக்கு!
இன்னும் ஒருவாரந்தேன்
இதே கிழமை
வந்திருவாங்க!!

12/22/2011

ஓலையக்கா கொண்டையிலே....

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா

கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

பாடலைக் கேட்க....