7/21/2012

அட்லாண்டாவில் தோழர் நல்லகண்ணு

சார்ல்சுடன் நகரில் இருந்து அட்லாண்டா செல்லும் பயணத்தினிடையே எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அழைத்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அய்யா நல்லகண்ணு உங்களுடன் பேச விரும்புகிறார் எனக் கூற, அடுத்த வினாடி தொடர்பில் அய்யா தோழர் நல்லகண்ணு அவர்கள்.

நாங்கள், தன்விருப்பத் தொண்டர்கள் ஒரு தாய்ப்பிள்ளைகளாக இருந்து எப்படி இவ்வளவு பெரிய விழாவை நடத்தினோம், தமிழ்க் கட்டமைப்புக்காக உழைக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டு, தன்னலமில்லாத தொண்டினை அமெரிக்க மண்ணில் கண்டு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு ஈரோடு அருட்சுடர் பதிப்பகத்தாரின் வெளியீட்டில் வெளியான ”ஊர்ப்பழமை” நூலைத் தாம் வாசித்ததாகவும், அதில் இடம் பெற்ற பல விழுமியங்கள் தாம் சிறுவயதில் இருக்கும் போது கண்டவை; உங்களுக்கு எப்படித் தெரிய வந்ததெனக் கேட்டு மிகவும் வியந்து பாராட்டினார். அவருக்கு அந்நூலைக் கொடுத்த தமிழ் அன்பர் எவரோ? எங்கிருந்தாலும் நீவிர் வாழ்க!! ஈரோடு நண்பர் ஆரூரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

Take advantage of your week end!

Meet one of the cleanest politician from Tamil Nadu, warrior for the downtrodden , Tamil orator Thozar Nallakannu!!

அட்லாண்டாவில் தோழர் நல்லகண்ணு
எழுபது கவனகர் கலை.செழியன்



2 comments:

Itsdifferent said...

Its unfortunate that I am in Denver, and wont be able to meet him.
If you are meeting him, can you please ask him, what are his thoughts on how to reduce corruption in India, and how do we educate people, that it is not ok to get a job done by giving money?

அரசூரான் said...

அட்லாண்டாவில் சந்திப்பு இனிதே நிகழ்வுற்றது. அய்யாவின் எளிமை மற்றும் நினைவாற்றல் கண்டு நேரில் வியந்தோர் பலர்.