12/05/2009

பள்ளயம் - 12/05/2009

போன வாரத்துல, நான் வேலை முசுவுல அல்லாடிட்டு இருந்தம் பாருங்க. அப்ப, சித்த வலையுலகத்துல என்னதான் நடக்குது, ஒரு எட்டுப் பார்க்கலாம்ன்னு ஒன்னு ரெண்டு வலைப்பூக்களுக்கு போனதுதான் தாமுசம், நம்ம பொட்டிக்கு வினை வந்திடுச்சுங்க. பெரும்பாடு சிறுபாடு ஆயிப்போச்சு.

காரணம் என்ன? நம்ம மக்கள் கண்ட கண்ட வில்லைகளை தன்னோட வலைப்பூவுல சொருகிக்கிறாங்க... அதுக மத்தவங்க பொட்டியப் போட்டுத் தள்ளிடுது. மக்க, சொன்னாலுங் கேக்குறது கிடையாது. நான் எப்பவும் கூகுள் வாசிப்பு நிரல்லதான் வாசிக்கிறது. அன்னைக்கு ஏமாந்து நேரடியாப் பூக்களுக்கு வந்துட்டன். அது என்னோட தப்புத்தான்! மக்களே, என்னோட வலைப்பூவைப் பாருங்க.... ஒகே ஒகட்டிதா உன்னாதி! இஃகிஃகி!!

ஏதாவது கிருமி நிரலிகள் இருந்தாக்க, முதல்ல அதுகளைக் கண்டு பிடிச்சு வேரோட அழிச்சிடுங்க. சமீபத்துல எனக்குத் தலைவலி கொடுத்த கிருமிக்குப் பேரு ohkcsysguard.exe. அதுக கணனியில எங்க குடி கொண்டு இருக்குன்னு கண்டுபிடிப்பது எப்படின்னு தெரிஞ்சிக்க இந்த சுட்டியைச் சொடுக்குங்க http://www.wikihow.com/Alter-Startup-Programs-in-Windows-XP மக்களே தயவு செய்து கண்ட கண்ட வில்லைகளைப் (widgets) பாவிக்காமத் தவிர்க்கப் பாருங்க!


========================================

இன்னைக்கு எங்க எழில் தமிழ்ப் பண்பாட்டுக் குழுவோட தமிழ் வகுப்புல தமிழ் சொல்லிக் கொடுத்திட்டு இருக்கும் போது, சிறுவர்களுக்கான கையேட்டுல “ஏ” எழுத்துக்கு உரிய சொற்களா, ஏணி, ஏணை அப்படின்னு போட்டு இருந்துச்சு. உடனே ஒரு குழந்தை கேட்டுச்சு, ஏணைன்னா என்னா? க்கும்! குழுவுல இருந்த பெரியவங்க யாருக்குமே அதற்கான அர்த்தம் தெரியலையே?! உங்களுக்குத் தெரியுமாங்க??

========================================



வட நாட்டுல, பறவைகளை எல்லாம் எப்படிப் புடிப்பாங்கன்னு தெரியுமாங்க? நண்பர் சுப்ரா இன்னைக்குதான் விசயத்தைப் பகிர்ந்துகிட்டாரு. நீளக் கயித்து நடுவுல ஒரு குச்சியில சிறுசா எதனா தின்பண்டத்தை வெச்சி நட்டுக் குத்தலாக்(vertcal) கட்டி, க்யித்தோட இரு முனையையும் மரத்துலயோ, நட்டு வச்ச கம்புலயோ கட்டி வெச்சிடுவாங்களாம்.

இந்தப் பறவையானது அந்தக் குச்சி மேல போயி உக்காரவும், பாரந்தாங்காமக் குச்சியானது மறுபக்கம் சாயவும் பறவை தலைகீழாத் தொங்க ஆரம்பிக்குமாம். குச்சியில இருந்து காலை எடுத்தா கீழ விழுந்துடுவோம்னு அதுக்கு பயம். கூடவே டபக்னு தலைகீழாத் தொங்க ஆரம்பிச்ச அதிர்ச்சியில, அதுக்கு சிந்தனையும் நின்னுடுமாம். அப்புறம் என்ன, குருவிக்காரன் போயி ஒரு சிரமும் இல்லாம அதைப்ப் புடிச்சி ஆட்டையப் போட வேண்டியதுதான்!

ஆக, உங்கள் சிந்தனைய உயிரோட்டமா வெச்சுக்க வேண்டியது முக்கியம் மக்களே முக்கியம். பிரபல எழுத்தாளர் சொல்றாரு, அவர் சொல்றாரு, இவர் சொல்றாருன்னு எல்லாம் நாம அவங்களோட பசப்புல மயங்கிடக் கூடாது பாருங்க. வாசிங்க, ஆனா அதைப் பல தரப்பட்ட கோணத்துலயும் அலசுங்க. தப்போ, சரியோ, சரியான முறையில விமர்சனம் செய்யுங்க.

பழமைபேசி அவ்வளவு எழுதி இருக்கான், இவ்வளவு எழுதி இருக்கான்னு ஒரு பெரியவர் சிலாகிக்கறார்; அதைக் கேட்ட இன்னொருத்தர், அதுக்கென்ன எருமை கூடத்தான் தினமும் நிறைய சாணி போடுதுன்னு விமர்சனம் செய்யுறார். அதையும் ஏத்துக்குற பக்குவத்தை நாமதான் உண்டாக்கிக்கணும். நிறைவாப் பேசுறதை ஏத்துக்குற மனசு, மாறாப் பேசுறதையும் ஏத்துக்கத்தான வேணும்?! இஃகிஃகி!


========================================

வட அமெரிக்க தமிழ் மக்களே, நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன். அல்லாட்டி, நிச்சயமா டிசம்பர்-12 அன்னைக்கு, நியூஜெர்சி தமிழ் விழா விருந்துல கலந்துகிட்டு இருந்திருப்பேன். உள்ளூர்ல இருக்குற நீங்க முடிஞ்சாப் போயிக் கலந்துகுங்க.

We would appreciate if you could confirm your participation, and communicate by e- mail to natkuppuraj@yahoo.com or with any coordinators on or before Dec 9 .
Holiday party combined with our fund raising dinner for Thamizh Vizhaa 2010.

Date: December 12 th, 2009

Time: 4.30 p.m

Venue: Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

Event: CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

ஊர் மக்களே, நான் செவ்வாய்க் கிழமை(டிச-8) ஊருக்கு வர்றேன். மூனு வருசம் முன்னாடி வந்தேன். சிக்கன் குனியான்னு ஒரே களேபரம். இப்பவும் அதையே சொல்லி பயமுறுத்துறாங்களே? அவ்வ்வ்வ்.....


========================================

எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு!

16 comments:

பழமைபேசி said...

ஏணை = புடவைத் தொட்டில்

vasu balaji said...

வாங்க வாங்க. சிக்கன் குனியா கொசு வெள்ளையா இருக்கிறவங்கள கடிக்காதாமா:)). மேல கேள்வி கேட்டுபோட்டு பின்னூட்டத்துல பதிலும் சொல்லியாச்சி. பயணம் சுகமாய் அமைய வாழ்த்துகள்.

அ. நம்பி said...

--- கெட்ட பொன்னன் ---

ஆட்டி விட்ட ஏணையில்
அழகுக் குழந்தை தூங்கையில்
பாட்டுப் பாடிக் கதவையே
படபட என்று குலுக்கினான்.
போட்டு டைத்தான் பெட்டியை
பொத்த லிட்டான் சட்டியை
நீட்டுக்கழி தூக்கியே
நின்ற டித்தான் தகரத்தை.

ஆட்டி விட்ட ஏணையில்
அழகுக் குழந்தை அலறியே
நீட்டி நீட்டி அழுததே
நிறையக் கண்ணீர் வடித்ததே
கேட்டு வந்தார் அம்மாவும்
கிளம்பி வந்தார் அப்பாவும்
போட்ட ஓசை யார்என்றார்
பொன்ன னைத்தான் சீஎன்றார். - பாவேந்தர்

எம்.எம்.அப்துல்லா said...

Wine and Dine : 7 p.m [South Indian Dinner] //

சவுத் இண்டியன்ல எங்க வைன்??கள்ளும்.கொறிக்கவும்னு மாத்துங்கன்னு அன்னைக்கே சொன்னேனே!!

:))

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி

ஏணை என்பது சாதாரணமாக கிராமப்புறங்களில் வழங்கும் சொல் தான் - புடவையினால் காட்டப்படும் தொட்டில் தான் - மழலைச் செல்வங்கள் மகிழ்வுடன் உறங்க உதவும் தொட்டில்.

எரிதம் ( ஸ்பாமா ) எனப்படும் நிரலிகள் கண்டுபிடித்து அழிக்கப் பட வேண்டுமே - எப்படிச் செய்வது .....
நல்வாழ்த்துகள்

பிரபாகர் said...

ஏணைக்கு இப்பத்தான் விளக்கம் தெரியும்... நன்றி பழமைபேசி...

உங்களின் பயணம் மிக சிறப்பாயிருக்க வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

ப்ரியமுடன் வசந்த் said...

// நிறைவாப் பேசுறதை ஏத்துக்குற மனசு, மாறாப் பேசுறதையும் ஏத்துக்கத்தான வேணும்?!//

ம்ம்...மனசுல வச்சுக்கிறேன்..அய்யா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

எருமைனா தினம் சாணி போடத்தானே செய்யும்...

அடக்கி வச்சு பேங்லயா போட்டுவைக்கப் போகுது....

விடுங்க மாப்பு

Thekkikattan|தெகா said...

பழமைபேசி அவ்வளவு எழுதி இருக்கான், இவ்வளவு எழுதி இருக்கான்னு ஒரு பெரியவர் சிலாகிக்கறார்; அதைக் கேட்ட இன்னொருத்தர், அதுக்கென்ன எருமை கூடத்தான் தினமும் நிறைய சாணி போடுதுன்னு விமர்சனம் செய்யுறார்//

:))) அது சரி...

ஆ.ஞானசேகரன் said...

//மக்களே தயவு செய்து கண்ட கண்ட வில்லைகளைப் (widgets) பாவிக்காமத் தவிர்க்கப் பாருங்க! //

நன்றிங்க பழம

தாராபுரத்தான் said...

வாங்க,,வாங்க,,வாங்க ,,,வாங்க,,,

அப்பாதுரை said...

அருமை, அருமை.

காந்தி காங்கிரஸ் said...

நல்ல பகிர்வு .
வாழ்த்துகள்.

Jawahar said...

சுவாரஸ்யமா எழுதறீங்க. ஏனை என்றால் தூளி என்று எழுத நினைத்த போது நண்பர்கள் பழைமை பேசியும், நம்பி அவர்களும் ஏற்கனவே எழுதியிருப்பதைப் பார்த்தேன். தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப் படுகிற சொல் என்று நினைத்திருந்தேன்.

http://kgjawarlal.wordpress.com

KARTHIK said...

நன்றிங்க தல
நம்ம கண்ணிலையும் இருந்துதுங்க
எடுத்தாச்சு

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு.......அரசியல்தான் புரியவில்லை.......

வாருங்கள்.....வரவேற்கக் காத்திருக்கிறோம்