8/18/2008

நினைவு கூறல்!

சின்னஞ்சிறு வயதில் சிரித்து
மகிழ்ந்த ஊராம் சிநேகச் சலவ
நாய்க்கன் பட்டிப் புதூர்
!

நல்லதொரு துவக்கப் பள்ளியதில்
கல்விகற்க அரவணைத்தார்
அந்தஊர் மக்கள் அக்கறையுடன்!

ஆடிப்பட்டம் விடுவோம் அன்பு
நெசவாளர் பிள்ளை களுடன்
வடிவாய் வடக்குத் தோட்டத்தில்!

தைமாட்டுப் பொங்கல் காண்போம்
ஒப்பற்ற விருந்தோம் பலுடன்
கிடங்கு வீட்டுத் தோட்டத்தில்!

செஞ்சேரிமலைத் தேரா? ஆலகொண்ட

மால கோயிலா? அன்பாய் அழைத்துச்
செல்வர் இராஜூநாய்க்கர் வீட்டில்!

பள்ளயத்திற்கு பண்பாய் பாசமுடன்
அழைப்பர் எம்மை மந்திரியப்ப
கவுண்டர் வீட்டுக் குமாரர்கள்!

நாளொரு பொழுதும் நல்லவிதமாய்
களிப்புகள் கண்டு வளர்ந்தோம்
கஸ்தூரிசாமி நாய்க்கர் தோட்டத்தில்!

பண்பாய் பாசமாய் பரிவுடன்
பழகுவர் குப்புசாமி அண்ணாவும்
அந்த குமாரும் சின்னுவும்!

மாகாளி அம்மன் கோயில்
வளாகமொரு நந்தவனம்; மரங்களும்
கிள்ளைப் பிள்ளை களுமாய்!

அந்தியூர்க் காரர் வீட்டுப்
பிள்ளைகளென அன்பாய் கவனித்துக்
கொள்வர் ஊர்மக்கள னைவருமே!

வெங்கடேசு சுந்தரம் கோவிந்தராசு
ரங்கண்ணன் விஜி ஜெயகுமார்
சிவாசெந்தில் நல்ல நண்பர்கள்!

இனியும்சொல்ல நிறையப்பேர் இனிமை
கொண்ட அந்தஊரில்; நன்றியுடன்
நினைவு கொள்கிறேன் நல்லவிதமாய்!

No comments: