8/10/2008

கடற்கரைப் பயண அனுபவக்கோவை-1

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினரின் கடற்கரைப் பயண, முதல் நாள் முடிவில் எழுதிய அனுபவக் கோவை இது.


குழுமம் காலை பத்துக்கு புறப்பாடு என்றோம்,
அய்யா கலையின் வீட்டில் கூடி, கொட்டமடித்து
தொண்ணூறு மணித்துளிகள் கடந்து இனிதே
புறப்பட்டது குதூகல குழுமம்! உற்சாகமிகு
பயணத்தின் இடையே தேவாலயம் ஒன்றின்
புறவாசலில் புன்முகம் கொண்ட சக்தியரின்
உன்னதமாய் உமிழ்நீர் சுரக்க உணவுப் படையல்!

உண்டதும் கண்டது பருத்திச் செடிகளும் காய்களும்,
அருகண்மையில் இருந்த விளை நிலத்தில்; தவப்
பொறுப்பாய், புழங்கிய புறக்கொல்லையின் பெருக்கல்! பின்
கடற்கரை நோக்கிய பயணம் தொடர்ந்தது அதே பாங்காய்,
அடைந்தது குழுமம் அழகிய கடற்கரைக் குடிலை!! செல்லச்
சிறுசுகள், மேல் தளமும் கீழ் தளமுமாய் ஓடிப்பாய
சென்றனர் ஆடவர் பாலும் பழமும் வாங்க அங்காடிக்கு!!!

அந்தப் பால்கொண்டு வடித்த காப்பித்தண்ணீரின் அதே
தெம்புதனை எரிபொருளாய் பாவித்து சீறிப் பாய்ந்தது
குழுமம் கடலை நோக்கி; குழந்தைகளும் பெற்றவர்களுமாய்
மூழ்கி எழுந்ததும் துள்ளிக் குதித்ததும் அப்பப்பா, சொல்லி
மாளாது பெற்ற இன்பம்; வானதியின் வேகம் பேரலையை
வம்புக்கு வரச் சொன்னது; நல்லதொரு துள்ளல் மகா
சமுத்திரத்தில்; கண்களைக் கவர்ந்தது தும்பிப் பட்டம்!

பரிவாய் உசுப்பி விட்டேன் பெரும் குழாயை தாண்டுவதேன,
தாண்டி விட்டார் முயற்சித்த அனைவரும்; ஆகா எனத்
துவங்கியது கபடி ஆட்டம் மங்கிய மாலைப் பொழுதில்,
கண்டு களித்தார் கடற்கரையில் குழுமமும் பரங்கியரும்!
அது போதாது போதாது என வைத்தோம் ஓட்டப் பந்தயம்;
சீறிப்பாய்ந்து, நமன் வரினும் நாமார்க்கும் குறைவு உற்றோ
மென பறைசாற்றினர் கலை அய்யா - மலர் தம்பதியினர்!!

வந்தோம் மனநிறைவோடு அந்த அழகிய குடிலுக்கு; பின்
புசித்தோம் பசித்த வயிறார! குழுமம் ஒருங்கே அமர்ந்தது
பின்புறக்கொல்லையில் தடாக முகமாய்; இன்புற்றோம்
பொதிகைத் தென்றல் இலைச்சருகாய் மயூரத்துகிலாய்
வருடிவர; அங்கே அன்பாய் அனுசரணையாய் அசத்தினார்
அய்யா சண்முகநாதன் போட்டிகள் நடாத்தி! கடற்கரைக்
களியின் களைப்பாய் நித்திரையில் குழுமம் இப்போது!!

No comments: