7/03/2010

நேரடில் ஒளிப்பரப்பில் செந்தமிழ் விழா!!!

சங்கே முழங்கு, தமிழ்ச் சங்கே முழங்கு.... செயல்பட்டே இனம் காப்போம் சங்கே முழங்கு... செந்தமிழால் சேர்ந்திணைவோம் சங்கே முழங்கு.. என சங்கை முழங்கி ஆர்பரித்தனர் இளஞ்சிறார்கள்.... அதற்கு முன்னதாக மங்கலவாழ்த்தும் இசைக்கப்பட்டு, முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது.

செந்தமிழ் நாட்டில் இருந்திருக்கும் சிறந்த கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்கள் குத்து விளக்கு ஏற்றுப்வார்கள் என அறிவிக்கப்பட, மேடையில் அழகாய், மிடுக்காய், கம்பீரமாய் இருந்த இரு கோடிக் குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன். அறிவிப்பாளரின் கணீர்க் குரலில்
அரங்கம் மெய்சிலிர்த்துப் போனது.

அடுத்து முனைவர் பழனி சுந்தரம் அவர்கள், பணிவார்ந்த மற்றும் உற்சாக வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கடும் உழைப்பை நல்கிய கனெக்டிக்கெட் தமிழ்க் குடும்பத்தினருக்கு உணர்ச்சி பொங்க நன்றியும் நவில்ந்தார்.

நல்ல நல்ல பிளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி...நல்ல தலைவன் அமைந்துவிட்டால் இனமே செழிக்கும்...எனச் சொல்லி நிறுத்திய அறிவிப்பாளர், தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களை அழைத்தார். பின்னர், தலைவர் அவர்கள் தலைமையுரை ஆற்றி வருகிறார். பேரவையில் தளத்தில், நேரடி ஒளிபரப்பு இடம் பெற்று வருகிறது அல்லது விரைவில் இடம் பெறும்.....

அரங்கத்திலிருந்து உங்கள் பழமைபேசி!



FeTNA funtion is on live streaming world wide!!
நேரடி ஒளிப்பரப்பில் செந்தமிழ் விழா!!!


1 comment:

vasu balaji said...

நன்றிங்க காணொளிக்கு.