12/01/2008

இனிய‌ இந்தியா!



உலகமே வந்தாலும் கடலத்தான‌,
உலர வெக்க முடியுமா?
கள்ளத்தனமா வாரயிவன் அதை,
காய வெக்க முடியுமா??

ஊருகூடி, சுத்துற பூமியதை,
நிறுத்தத் தான முடியுமா?
ஒளிஞ்சு வந்து இவனுகதை,
ஒழிச்சு விட முடியுமா??

எட்டி நாலு பூப்பறிச்சா
பட்டி ஆலமரம் சாஞ்சிடுமா?
உப்பை நனச்சி விட்டா
உப்புப் ப‌ள்ள‌ம் காஞ்சிடுமா??

எங்க ஒத்துமை பாரறியும்!
துங்க மது நாங்கறிவோம்!!
ஊரு ச‌ன‌ம் ஓயாது!
காந்தி தேச‌ம் சாயாது!!


32 comments:

முகவை மைந்தன் said...

சந்தம் கூடி வர நல்லா இருக்கு பாடல்.

சிறப்புப் பதிவராய் ஒளி வீசித் திகழ நல்வாழ்த்துகள்.

தமிழ் said...

வாழ்த்துகள்

SP.VR. SUBBIAH said...

கவிதை கன ஜோர்
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

குடுகுடுப்பை said...

பழமையாருக்கும் நவீன இந்தியாவிற்கும் வாழ்த்துக்கள்.


ஊருகூடி, சுத்துற பூமியதை,
நிறுத்தத் தான முடியுமா?/

பூமி சுத்துதா. ? இது பூமி சுத்துவது நிக்கும்போதும் தீவிரவாதமும் நின்னுரும்.

கோவி.கண்ணன் said...

நட்சத்திர நல்வாழ்த்துகள் !

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பழமை பேசி

Viji said...

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

geevanathy said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

பரிசல்காரன் said...

நட்சத்திர வாழ்த்துகள் நண்பா!!!

ராஜ நடராஜன் said...

பழமை!உங்களை மாதிரி உண்மையான நட்சத்திரங்கள் உலாவரும்போது தமிழ் மக்கள் மின்மினிப் பூச்சுக்களை நட்சத்திரம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.மனமார்ந்த நட்சத்திர வாழ்த்துக்கள்.

கபீஷ் said...

பழமைபேசி!
வாழ்த்துக்கள்!!!

நட்புடன்
கபீஷ்

பழமைபேசி said...

//முகவை மைந்தன் said...
சந்தம் கூடி வர நல்லா இருக்கு பாடல்.

சிறப்புப் பதிவராய் ஒளி வீசித் திகழ நல்வாழ்த்துகள்.
//

வாங்க முகவை மைந்தன், வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

பழமைபேசி said...

@@திகழ்மிளிர்
@@குடுகுடுப்பை
@@கோவி.கண்ணன்
@@சின்ன அம்மிணி
@@Viji
@@முத்துலெட்சுமி-கயல்விழி
@@தங்கராசா ஜீவராஜ்
@@பரிசல்காரன்
@@கபீஷ்

வாங்க! வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!

பழமைபேசி said...

@@ராஜ நடராஜன்

வாங்க அண்ணே, அப்பிடி எல்லாம் சொல்லாதீங்க, கூசுது!
நொம்ப நன்றி!!

வடுவூர் குமார் said...

இதை படிக்கும் போது கமல் நடித்த தசாவதாரத்தில் சொல்லுவாங்களே அது ஞாபகத்துக்கு வருது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பாடல்,

துங்க மது நாங்கறிவோம்

அப்படீன்னா.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்ல பாடல், துங்க மது நாங்கறிவோம்
//

வாங்க! நன்றி!!

துங்கம் == உயர்வு

தேவன் மாயம் said...

நல்ல கவிதை!
தமிழ் மீது உங்களுக்கு
உள்ள ஆர்வத்துக்கு
வாழ்த்துக்கள்
தேவா.

Mahesh said...

அட்டகாச நட்சத்திரம் (அதாங்க சூப்பர் ஸ்டார்) அண்ணன் பழமைபேசிக்கு வாழ்த்துக்கள் !!!

பழமைபேசி said...

//வடுவூர் குமார் said...
இதை படிக்கும் போது கமல் நடித்த தசாவதாரத்தில் சொல்லுவாங்களே அது ஞாபகத்துக்கு வருது.
//

வாங்க குமார் ஐயா! நன்றி!!

பழமைபேசி said...

//thevanmayam said...
நல்ல கவிதை!
தமிழ் மீது உங்களுக்கு
உள்ள ஆர்வத்துக்கு
வாழ்த்துக்கள்
தேவா.
//

வாங்க ஐயா! வாழ்த்துக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி!!

பழமைபேசி said...

//Mahesh said...
அட்டகாச நட்சத்திரம் (அதாங்க சூப்பர் ஸ்டார்) அண்ணன் பழமைபேசிக்கு வாழ்த்துக்கள் !!!
//

எல்லாம் உங்க ஊக்கத்தாலதான்!

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் அய்யா!

நசரேயன் said...

முதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள்

நசரேயன் said...

/*
எங்க ஒத்துமை பாரறியும்!
துங்க மது நாங்கறிவோம்!!
ஊரு ச‌ன‌ம் ஓயாது!
காந்தி தேச‌ம் சாயாது!!
*/
உண்மையோ உண்மை

பழமைபேசி said...

@@சுரேகா
@@நசரேயன்

வாங்க! வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!

Natty said...

இந்த வார சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்....


மீசை இருந்தா நல்ல அறிவும், மனமும், திறனும் இருக்கும் அப்படின்னு அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் அவர்களுடைய தந்தையார் அவர்தம் இலக்கிய படைப்புகளில் கூறியுள்ளார்... ;))

மீசையோட கெட்டப் சூப்பர்.

பழமைபேசி said...

//Natty said...
இந்த வார சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்....

மீசையோட கெட்டப் சூப்பர்.
//

வாங்க நடராசு அண்ணே! நன்றிங்க!!
அதையும் பாத்துட்டீங்களா?

வல்லிசிம்ஹன் said...

இந்தியா எப்பவும் இருக்கும். இன்னும் எத்தனை தடை வந்தாலும். அருமையாப் பாட வருகிறது பாட்டு. எழுச்சி தரும்.

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
இந்தியா எப்பவும் இருக்கும். இன்னும் எத்தனை தடை வந்தாலும். அருமையாப் பாட வருகிறது பாட்டு. எழுச்சி தரும்.
//

மிக்க நன்றிங்க!! உங்களை மாதிரி பெரியவிங்க ஆசி இருந்தா எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...
தொடர்ந்து அசத்துறிங்க...:)