10/14/2012

காதலி

பட்டறிவின் வெளிப்பாடாக அமையும் படைப்புகள்; உணர்ந்த உணர்வின் வெளிப்பாடாக வரும் படைப்புகள்; சிந்தனையின் விளைவாய் வரும் படைப்புகள்; வாசிப்பின் விளைவாய் வரும் படைப்புகள் போன்றவற்றிற்கு இணையாக அமையப் பெறுவதுதான் உற்பத்தியாக்கப்பட்டு வரும் படைப்புகளும். இதோ, அவ்வரிசையில் ஒன்றைக் காண்போம்.

விட்டு விட்டு இடியிடித்ததில்
விடாமல் கொட்டியது
மழை!
தொட்டு தொட்டுப் பேசியதில்
தொடாமல் கிட்டியது
செருப்படி!
ஓங்கி ஓங்கி அடித்ததில்
ஓங்காமல் செத்தது
பாம்பு!
ஓடி ஓடி அடைத்ததில்
ஓடாமல் அடைபட்டது
முயல்!
சொல்லிச் சொல்லிப் பாடமடித்ததில்
சொல்லாமல் ஓடி வந்தாள்
காதலி!
தூங்கித் தூங்கி விழுந்ததில்
தூங்காமல் தவித்தான்
அண்மைக்காரன்!
பேசிப் பேசிக் குலவியதில்
பேசாமல் தந்து விட்டான்
முதலாளி!
என்ன யோசிக்கிறீர்கள்? இதன் நீட்சியாக நீங்களும் சில பல அடிகளைப் புனைந்து மகிழுங்கள்! :-))

No comments: