10/13/2012

காற்றுப் பிரிகை

வெங்கலக்கடையில் யானை
அடுக்களையில் மனைவி
பாத்திரங்கள் கழுவியபடி!

உரிமைக்காய்ப் போராடும் போராளிகள்
உடுத்திருக்கும் உடுப்பு மாற்ற 
அடம் பிடிக்கும் குழந்தைகள்!

கூட்டாஞ்சோறு நிகழ்வில்
அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
யாருக்கோ காற்றுப் பிரிகை!

என்ன அத்தை, ஆச்சா?
அமெரிக்க விசாரணைக்கு அலறும்
ஆண்டிபட்டி மாமியார்!!

அமெரிக்க ஆணைக்குப் பணிந்தார்
அமிஞ்சிக்கரை நாட்டாமை
நேத்தே அனுப்பிட்டேன் மருமகளே!!




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விதவிதமான சிந்தனை வரிகள்...

ரசித்தேன்...

Mr.E said...

enjoyed the thoughts!!