7/15/2009

Fetna .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 4

கடுமையான வேலைப் பளு! அதான் இடுகை இடுறதுல தொய்வு.... சரி, நினைவுக்கு வந்ததுல ஒன்னு ரெண்டை சொல்லிட்டுப் போலாம்ன்னு....இஃகிஃகி!

வாழ்க்கையில சோதனையான நேரம் வரும்போது, கீழ கீழ போறமேன்னு நினைச்சு வருத்தப்படக்கூடாது. ஆழ்ந்து போகிறோம், அதாவது வாழ்க்கையில் ஆழ்ந்து போகிறோம், வாழ்க்கையின் மறுபக்கத்தையும் கண்டு கொண்டிருக்கிறோம், அதுவே சாதனைக்கு வழிகாட்டுதலாக அமையப் போகிறதுன்னு நினைக்கணும். (கவிஞர் செயபாசுகர்)


ஒருத்தன், அய், என்னோட கோவணம் கோபுரத்துல பறக்குது, அய் என்னோட கோவணம் கோபுரத்துல பறக்குதுன்னு ஊரைக் கூட்டிச் சொல்லி மகிழ்ந்தானாம் அவன் அம்மணமா நிக்கிறது தெரியாம! விழா மலரில் பாவேந்தர் தெறித்த நறுக்குகளின் ஒன்றான இது இடம் பெற்றுள்ளது.

சரி, இடுகைக்கு வந்தீங்க, இந்த படங்களையும் பார்த்திட்டுப் போங்க மக்கா!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

3 comments:

குடந்தை அன்புமணி said...

உங்க தமிழ் நடையில ஆழ்ந்து போயிட்டேன்ணே...
புகைப்படங்களும் பார்த்துட்டேன்.

தேவன் மாயம் said...

வேலையையும் கவனிங்க!!
எங்களையும் கவனிங்க!!

ஊர்சுற்றி said...

படங்கள் அருமை...!!!