10/13/2017

மாடர்ன் மருத்துவம் vs மரபு மருத்துவம்

மாடர்ன் மருத்துவம்
மரபு மருத்துவம்
போலி மருத்துவம்
தம்பொறுப்பு

இவற்றுக்கிடையே சிண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆகையால் நம் புரிதலையும் உளமாரச் சொல்லிக் கொள்வோம். பின்னூட்டங்களைப் பொறுத்து புரிதலைச் சரி செய்தும் கொள்வோம். இஃகிஃகி!

1. அறிவியல், இன்று ஒன்றைச் சொல்லும். புது அறிதல்களுக்கொப்ப இன்று சொல்வதை நாளையே அது மறுக்கக் கூடும். அதுதான் புத்தாக்க அறிவியல். தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கொப்ப அது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். முறைசார் அறிஞர்களை நம்பித்தான் சமூகம் இயங்கியாக வேண்டும். ஆகவே, புதுமை அறிவியல்தான் முதன்மை. (எடுத்துக்காட்டு: நுண்ணோக்கியில் குருதியின் அணுக்களை ஆய்ந்து நோய்க்கூறுகள் கண்டறிவது)

2. மரபு மருத்துவமும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதாலும், உரிய பதிவுகள், முறையான நிறுவுசான்றுப் பதிவுகள் இல்லாததாலும் சிதைவுக்கு ஆட்படுகிறது. ஆனால், முற்றிலும் ஒதுக்கிவிட, நிராகரிக்கத் தேவையில்லை. துய்ப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, அனுபவத்தின் அடிப்படையில் தன்னாய்ந்து ஏற்றுக் கொள்ளலாம். எடுத்ததற்கெல்லாம் வேதிப்பொருட்களை உண்ணாமல், மரபு மருத்துவத்தை நாடலாம். நுண்ணுயிர், தொற்றுநோய், நச்சுயிர்களைக் களைய வேதிமருத்துவத்தை நாடுவதும், சத்துக்குறைபாடுகளுக்கு மரபுமருத்துவம் நாடுவதும் ஒருவரது தெரிவாக இருக்கும் போது நாம் அதை எள்ளி நகையாடத் தேவையில்லை (எடுத்துக்காட்டு: கொட்டம்சுக்காதி தைலம், காஞ்சித்தழை, சாணிப்பூட்டாந்தழை)

3. போலி மருத்துவம். மிடீல உவர் ஆனர். போகிற போக்கில் தன் விருப்பு வெறுப்புகட்கொப்ப, அறமற்றுத் தன்முனைப்பும் தன்னலமும் கொண்டு, பேச்சு, எழுத்துத் திற்மையால் நீக்கமற நிறைந்திருக்கும் பேரறிஞர்களை, வணிக நிறுவனங்கள் வார்த்தெடுக்கின்றன. தன்னறிவுப் போதாமை கொண்டவர்கள் போற்றி வழிபடுகின்றனர். சட்டங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு இத்தகைய போக்கினை மட்டுப்படுத்தலாம்; ஆனால் முற்றிலும் களையவே முடியாது. மாறாக, சமூகம் அறிவுப்புலத்தில் இயங்கித் தன்னறிவுக்கு வசப்படுதலே பின்னடைவினை இல்லாமற் செய்யும்.

4. தம்பொறுப்பு. அய்யன் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே எல்லாமும் சொல்லிப் போய்விட்டார். அவற்றை உணர்ந்து இருத்தலே பெரும்பயனை ஈட்டும். https://youtu.be/dPDyXlkf3zo

(இதையெல்லாம் பேசி, ஒரு விவாதப் பொருளாக்க வேண்டி இருக்கு. சை... where is the common sense heading?)

No comments: