10/18/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 7!

கிள்ளாக்குச்சீட்டு, கடவுச்சீட்டு(passport)ங்றது எல்லாம் வாங்குறதே ஒரு பெரிய காரியமா இருந்ததொரு காலம். நான் முதன்முதல் கடவுச்சீட்டு வாங்க, உக்கடம் - சோமனூர் வண்டி புடிச்சுப் போயி, அவினாசி சாலையிலிருந்த Tiruppur Travelsல விண்ணப்பிச்சதும் ஏற்பட்ட குதூகலம் இருக்கே? சொல்லி மாளாது போங்க! வெளிநாட்டு வேலை கிடைச்சா, பழனி மலைக்கு பாதயாத்திரையா வாறன்னும், பத்து ரூபா காணிக்கை செலுத்துறேன்னும் ஆனைமலை மாசாணி அம்மன் கையில சிட்டு வெச்சு நேர்ந்துகிட்டதும் இன்னும் பசுமையா நினைவுல இருக்குங்க.

அந்த நல்ல நினைவினூடகவே, பழனிமலைய உள்ளடக்கின, கொங்குநாட்டின் ஒரு சிற்றரசான வையாபுரி நாட்டையும், கடவுச்சீட்டு பற்றின ஒரு விபரத்தையும் பார்க்கலாம் வாங்க. கூடுமான வரைக்கும் நண்பர்கள்கிட்டவும் விபரத்தைப் பகிர்ந்துக்குங்க, சரியா?


திருமிகும் பழனியூர் கோதைமங் கலமுடன்
செப்புகலையம் புதூரும்
சேரமா நூரிறைய மங்கல மடத்தூரு திகழ்கடத்
தூரினூடனே
அருமைமிகு கணியூர்கண் ணாடிப்புதூருடன்
அழகுமிகு கோட்டைத்துறை
ஆகுங்கொழுங் குண்டை மேல்கரைப் பட்டிலூ
ரமர்தேவாதா குடியுமே
மெருமைமிகு மாய்க்குடியி நோடமரர் பூண்டியும்
பிசகாமணிச்சிலம்பு
பீடுறுங் கொழுமம்வாழ் கரையோடீ ரொன்பதூர்
பிறங்குபுக ழோங்குநாடு
முரிமையுட னிரவலர்கள் மனநிலைமை யாய்ந்துள்
ளுவந்துதவு கின்றசெங்கை
உத்தமர்கள் மேவுதிரு வாவினன் குடியென்ன
வுயர்மிகு வளநாடரே வைகாவி நாடர்!

பழனியூர், கோதைமங்கலம், கலையம்புத்தூர், மானூர், இறையன்மங்கலம், மடத்தூர், கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கோட்டத்துறை, மேல்கரைப்பட்டிலூர், கொழுங்கொண்டான், தேவதாகுடி, ஆய்க்குடி, அமரர்பூண்டி, மணிச்சிலம்பு, கொழுமம், வாழ்கரை என ஆக மொத்தம் பதினெட்டு ஊர்கள் கொண்டதுதாங்க வைகாவி அல்லது வையாபுரி நாடு. மலைமேலுள்ள ஆலயம் பழம்நீ, இறக்கத்தில் உள்ளது திரு ஆவினன் குடி. மேலும் இந்த வையாபுரி நாடு பற்றிய இடுகையானது, அன்பர், கலையம்பத்தூர் மருத்துவர் சுரேஷ் அவர்களுக்காக இடப்படுகிறது!

இனி கடவுச்சீட்டு பற்றின விபரத்தைப் பார்க்கலாம் வாங்க. இது எனக்கு மின்னஞ்சல்ல வந்த விபரம். ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள், மின்னஞ்சலில் வந்த விபரத்தை ஆமோதித்ததின் பொருட்டு, விபரம் உங்கள் பார்வைக்காகவும்!


BE ALERT..!!!! Passport Tearing at Indian Airports....Read it Carefully.!!!

Be Careful at the Indian Airports, This is a well organized conspiracy by Indian Immigration, Police, Customs and Air India staff with networking at all the Indian International Airports.. Be careful when ever you give your passport to Immigration/ Customs/Air India staff. The pass port can be easily tampered and can create trouble to you. They have found easy way of making money from NRIs. This is the way it works:

At the time of the passenger's departure, if the passenger is not looking at the officer while he is stamping the exit, the officer very cleverly tears away one of the page from the passport. When the passenger leaves the immigration counter, the case is reported on his computer terminal with full details. Now all over India they have got full details of the passenger with Red Flag flashing on the Passport number entered by the departure immigration officer. They have made their money by doing above.

On arrival next time, he is interrogated.

Subject to the passenger's period of stay abroad, his income and standing etc., the price to get rid of the problem is settled by the Police and Immigration people. If someone argues, his future is spoiled because there are always some innocent fellows who think the honesty is the basis of getting justice in India ....

Please advise every passenger to be careful at the airport. Whenever they hand over the passport to the counters of Air India , or immigration or the customs, they must be vigilant, should not remove eyes from the passport even if the officer in front tries to divert their attention.

Also, please pass this information to all friends, media men and important politicians. Every month 20-30 cases are happening all over India to rob the NRIs the minute he lands. Similar case has happened with Aramco's Arifuddin. He was travelling with his family. They had six passports. They got the visa of America and decided to go via Hyderabad from Jeddah. They reached Hyderabad . Stayed abouta month and left for the States.

When they reached the States, the page of the American visa on his wife's passport was missing. At the time of departure from Hyderabad it was there, the whole family had to return to Hyderabad helplessly. On arrival at Bombay back, they were caught by the police and now it is over 2 months, they are running after the Police, Immigration officers and the Courts. On going in to details with him, he found out the following: One cannot imagine, neither can believe, that the Indian Immigration dept can play such a nasty game to harass the innocent passengers.

All the passengers travelling to & fro India via Bombay and Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases are taking place, at each mentioned airport, of holding the passengers in the crime of tearing away the passport pages.

On interviewing some of them, none of them was aware of what had happened. They don't know why, when and who tore away the page from the middle of the passport. One can imagine the sufferings of such people at the hands of the immigration, police and the court procedures in India after that. The number of cases is increasing in the last 2-3 years. People who are arriving at the immigration, they are questioned and their passports are being held and they have to go in interrogation. Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the results are coming. Some of the Air India counter staff too is involved in this conspiracy.

KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND ALSO REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS AND BEFORE LEAVING THE AIRPORT!

25 comments:

Anonymous said...

திருப்பூர் ட்ராவல்ஸ்லதான் இன்னைக்கும் போய் காசு மாத்தறது!!!!

போனவாட்டி நேரடியா கோவைக்கே போயாச்சு. கோவைல கொஞ்சம் இந்த தொந்தரவு இல்லை.

அது சரி(18185106603874041862) said...

//
வெளிநாட்டு வேலை கிடைச்சா, பழனி மலைக்கு பாதயாத்திரையா வாறன்னும், பத்து ரூபா காணிக்கை செலுத்துறேன்னு ஆனைமலை மாசாணி அம்மன் கையில சிட்டு வெச்சு நேர்ந்துகிட்டதும் இன்னும் பசுமையா நினைவுல இருக்குங்க.
//

உன் ஃப்ரண்டு ஒருத்தன் நமக்கு பத்து ரூவா தரணும்...நெம்ப நாளாச்சி....தரவே மாட்டேங்குறான்....நீயாவது என்னன்னு கேக்கப்படாதான்னு அம்மா என்கிட்ட நெம்பவே பொலம்புனாங்க....

அடப்பாவிங்களா...இங்கனயுமா கடன் வைப்பாங்க??? சீக்கிரம் அடைங்க பாஸூ...இல்லாட்டி நான் செலவு பண்ணி ஆட்டோ அனுப்ப வேண்டி வரும்...எப்படி வசதி?? :))))

அது சரி(18185106603874041862) said...

மத்தபடி அந்த பாஸ்போர்ட்...விஸா மேட்டர்....நிஜமாவே இவ்ளோ கீழவா போவாங்க...??? வாழ்க்கையில மனசாட்சின்னு ஒண்ணு கிடையவே கிடையாதா??

நல்லதொரு எச்சரிக்கை...அடுத்த தடவை போனா எத்தனை பக்கம் இருக்குன்னு எண்ணி பார்க்கணும்!

ஆ.ஞானசேகரன் said...

//நான் முதன்முதல் கடவுச்சீட்டு வாங்க, உக்கடம் - சோமனூர் வண்டி புடிச்சுப் போயி, அவினாசி சாலையிலிருந்த Tiruppur Travelsல விண்ணப்பிச்சதும் ஏற்பட்ட குதூகலம் இருக்கே? சொல்லி மாளாது போங்க! //

எனக்கு என்னானு தெரியாமலே! நண்பரின் வேண்டுகோளால் வாங்கியது.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி பழம....

பழமைபேசி said...

//அது சரி said...
//
வெளிநாட்டு வேலை கிடைச்சா, பழனி மலைக்கு பாதயாத்திரையா வாறன்னும், பத்து ரூபா காணிக்கை செலுத்துறேன்னு ஆனைமலை மாசாணி அம்மன் கையில சிட்டு வெச்சு நேர்ந்துகிட்டதும் இன்னும் பசுமையா நினைவுல இருக்குங்க.
//

உன் ஃப்ரண்டு ஒருத்தன் நமக்கு பத்து ரூவா தரணும்...நெம்ப நாளாச்சி....தரவே மாட்டேங்குறான்....நீயாவது என்னன்னு கேக்கப்படாதான்னு அம்மா என்கிட்ட நெம்பவே பொலம்புனாங்க....//

அடச் சே, எனக்கு இப்ப நெசமாலுமே கொஞ்சங் கொஞ்சமா மனசுல சந்தேகம் தலை தூக்குது.... செலுத்தினேனா, இல்லையான்னு ஒரே கொழப்பமா இருக்கு...

அடப் பாவி, அது சரி அண்ணாச்சி, இப்ப மகிழ்ச்சியா உங்களுக்கு?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்த மாதிரி பாட்டெல்லாம் எங்க தல புடிங்கறீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இறையன்மங்கலம்//

இந்த ஊரை கிராமத்து மக்கள் இறைமங்குளம் என்று அழைத்தும் ஆங்கிலத்தில் eravimangalam அதாவது ரவிமங்களம் என்றும் கூறி வருகிறார்கள். இங்கே பழைய நாகரீகச் சிதறல்களும், பெரிய வீடுகள், தெருக்கள் போன்றவை அகழ்வாராய்ச்சியில் கிடைத்துவருகின்றன. பக்கத்தில் உள்ள கிராமங்களில் பெரிய வடிவில் முதுமக்கள் தாழிகளும் கிடைத்துவருகின்றன..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//, கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர்,//

இதெல்லாம் கோவை மாவட்டத்துக்குச் சென்று இப்போது திருப்பூர் மாவட்டத்துக்குப் போய்விட்டனவே தலைவரே..,

குடுகுடுப்பை said...

மாசனியம்மன் கோவிலுக்கு நானும் ஒருமுறை போயிருக்கேன்.

Unknown said...

I don’t believe this, may someone trying to fooling all of us. We don’t hope other then passport control officers at that point.

<<<
Be careful when ever you give your passport to Immigration/ Customs/Air India staff.
>>>

vasu balaji said...

இவனுங்க அக்குறும்புக்கு அளவில்லாமப் போச்சு. தொகை பெரிசுன்னா எவங்கிட்ட போய் அழுறது? தினம் பத்துன்னு புடிபட்டாலும் திருந்த மாட்டங்குறாய்ங்களே. பாட்டழகுல மனச தேத்திக்கிட்டு வேலைக்கு போடா வானம்பாடி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இப்பத்தான் நம்மூரெல்லாம் வருது :)

இந்தப் பாடல் எழுதினப்ப கண்ணாடிப்புத்தூர், கணியூர், கடத்தூர், கலையமுத்தூர் எல்லாந்தான் பெரிய ஊருக. மடத்துக்குளம் வரவே இல்ல. இப்ப, மடத்துக்குளம் தாலுகா உருவாகுது. மாற்றம் எப்படி எல்லாம் நடக்குது பாருங்க.

ஆமாங் மருத்துவர் அண்ணே... நீங்க சொன்ன ஊரெல்லாம் திருப்பூர் மாவட்டத்துக்குள்ள போயிடுச்சு.

பழமையண்ணா, நீங்க கடவுச்சீட்டப் பத்தி சொன்னது அதிர்ச்சியா இருக்குங். இது நம்ம பசங்களுக்கு அனுப்ப, அவனுங்க வெளிநாட்டுப் பத்திரிக்கைகளுக்கு அனுப்புனா? எவன் நம்மூருக்கு வருவான்?

Unknown said...

பழமை பேசி அண்ணாச்சி, எங்க ஊரு - மதுரை விருதுநகர் பத்தியெல்லாம் விருத்தம் இல்லையா? அதையும் கொஞ்சம் போடுங்க.

பாஸ்போர்ட் விசா பத்தி நீங்க சொல்றத நினச்சா கவலையாத்தான் இருக்கு. சாக்கிரதையா இருக்கனும்போலயே

ரவி said...

this can not be true. I am not a fool to believe this. they have a big family and some of the kids may done this in the flight.

its not possible to tear a page when the person in front of us. these is N number fake emails coming every single day, and this must be one of them. I am seriously counting about the intention of the person who initiate this thread.

there are people around, who hate india, and wanted to spoil our name in every possible way. pazama, please be victim of them.

ரவி said...

it should be 'please dont be a victim of them.'

தமிழ் நாடன் said...

இந்த கடவு சீட்டு விடயம் பல வருடங்களுக்கு முன்னாடியே எனக்கு மின்னஞ்சலில் வந்தது அண்ணே! இன்னுமா நடக்குது இந்த அடூழியம்?

பழமைபேசி said...

@@செந்தழல் ரவி

ரவி அண்ணே, இப்பத்தான் தெரிஞ்சது, இது ஒரு அறதப் பழைய மின்னஞ்சல்த் தொடர்னு... உங்க யூகம் சரிதான் போலிருக்கு.... இருந்தாலும் கவனமாவே இருப்போம்!

பழைய மடலாடல்

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி
@@அது சரி
@@ ஆ.ஞானசேகரன்
@@SUREஷ் (பழனியிலிருந்து)
@@குடுகுடுப்பை
@@..:: Mãstän ::..
@@வானம்பாடிகள்
@@ ச.செந்தில்வேலன்(09021262991581433028)
@@முகிலன்
@@தமிழ் நாடன்
@@செந்தழல் ரவி

நன்றி மக்களே!

ராஜ நடராஜன் said...

கடவுச் சீட்டு செய்தி பழையது என்பதோடு இந்த நெட்வொர்க் எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.ஆனால் காலா காலம் தொன்று தொட்டு நிகழும் ஒன்று பொட்டி கனமா இருக்குதா(பொட்டி கனமா ஏனய்யா கொண்டு போகிறாய்ன்னு கைய ஆட்டிகிட்டு போனாலும் அதற்கும் தனி சிகிச்சை உண்டு சில சமயங்களில்.) ஸ்கிரீன் செய்பவர்(பச்சை உள்பட)செய்யும் சமிக்ஞையோ அல்லது அவர்களுக்கே புரிந்த மொழியில் பெட்டி இன்னொரு வெள்ளைச் சட்டைக் காரருக்கு மாறும்.நீ கணினி கொண்டு வந்துட்ட,காமிரா கொண்டு வந்துட்ட,தங்கம் கொண்டு வந்துட்டன்னு ஏதாவது ஒரு பொருளுக்கு சுங்க வரி இவ்வளவு என்று பேரம் எதிர்மறையா நிகழும்.அப்புராணியா சார் பார்த்து அனுப்பி விடுங்கன்னு கண்டுகிட்டேங்கன்னா வெள்ளை சட்டையிலிருந்து காக்கி சட்டை கான்ஸ்டபிளுக்கு மாறும்.கான்ஸடபிள் எங்கேயாவது மூலைக்கு தள்ளிட்டு போய் டாலரோ,ரியாலோ,டினாரோ,பவுண்டோ கறந்து விடுவார்.இந்தியாவைப் பற்றிய கனவுகளோடு வரும் நமக்கு அரசு செயல்படும் முதல் அடி விமான நிலையத்தில் துவங்கும்.

சுங்க பிரிவு சட்டம் இத்தனாவது பிரகாரம் இந்த சட்டம்ன்னு எடுத்து விட்டீங்கன்னு வையுங்க!மவனே சுங்கவரி ரூம்ல சங்குதான்.

போன தடவை சென்னை விமான நிலையத்துல அம்மணி பொட்டலம் பொட்டலாமா மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்ன்னு பொட்டி கடையே சூட்கேஸ்ல வச்சிட்டாங்க.இப்பதான் குண்டு வைக்கிறவன் எந்த ரூபத்தில எப்படி குண்டு கொண்டு வர்றான்னு சுங்க இலாகாவுக்கு தெரியாதே.அந்த பயத்துல பெட்டிய பிரிஞ்சு மேஞ்சுட்டாங்க:)இருந்தாலும் நான் கோப படாமல் எத்தனை குண்டுவெடிப்பு படிக்கிறோம்,பார்க்கிறோம்ன்னு அவர்கள் கடமையை செய்யட்டும் என்று மசாலாக்கள் படும் பாட்டை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்:)

(நான்:பொட்டலமெல்லாம் நீதானே கட்டிகிட்டு வந்தாய்.பெட்டியையும் நீயே கட்டு.

அம்மணி:திங்கறதுக்கு மட்டும் தினமும் ஒரு ருசி வேணும்.)

Nowfal said...

i put this matter in tamilish on august 2009, i got only 4 votes so it was not published, now happy to see the same matter get published thru your blog. Congrats.
My Blog add.
http://own-favourites.blogspot.com/2009/08/passport-alert-at-indian-airport.html
Nowfal

ரவி said...

இது கொஞ்சம் உண்மை...பெங்களூர் பழைய ஏர்ப்போர்ட் மேட்டர் இது. பெட்டி கனமாக இருந்தால் அதில் சாக்பீஸ் கொண்டு ஒரு க்ராஸ் மார்க் போட்டுவிட்டுடுவாங்க பெட்டியை கையாளும் வெள்ளுடுப்பு போட்ட சுங்கம் வெளியே கழுகு கண்களோடு குந்திக்கினிருக்கும். இந்த க்ராஸ் மார்க் வாங்கிய பெட்டி வந்தால், நிறுத்தி வெச்சு, எங்கிருந்து வர, எங்க போற, என்ன இருக்கு உள்ளாற என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கும் சுங்கம். அதில் நமது பதிலில் திருப்தி இல்லை என்றால் அடுத்து சுங்க இலாகா ரூம். அங்கே பஞ்சாயத்து. வைத்திருக்கும் பொருளுக்கு தகுந்தபடி ஆயிரம் இரண்டாயிரம் மொய். அடியேன் இரண்டு முறை இந்த மேட்டர்களை சந்திருத்து விட்டு, பெட்டியை எடுக்கும்போது அதில் க்ராஸ் மார்க் இருந்தால், அதனை , வேற வழியில்லாம, எச்சி தொட்டு அழித்துவிட்டு, கி கி, க்ரீன் சேனலில் செல்வேன்..

வல்லிசிம்ஹன் said...

:((((

குறும்பன் said...

ஆமாங்க பழமை இது அரத்த பழசான மின் அஞ்சல். செந்தழல் ரவி சொல்லுவது உண்மை. சென்னை விமான நிலையத்தில் இது நடந்திருக்கு. அதுவும் நிறைய மின்னனு பொருட்கள் இருக்குற பெட்டியில் பெருக்கல் குறி போட்டுவாங்க. அனேகமா இது பெட்டிய scan பண்ற ஆட்கள் பண்ணும் வேலைன்னு நினைக்கிறேன். எதுக்கு எல்லாத்துக்கிட்டயும் நச்சனும் பெருக்கல் குறி இருக்குற பெட்டி ஆளுங்க கிட்ட பேரம் பேசலாம் பாருங்க. என்னோட ஒரு பெட்டியில் அந்த மாதிரி பெருக்கல் குறி இருந்துச்சு (அதுல தான் நிறைய விளையாட்டு பொருட்கள் அதாவது மின்னனு பொருட்கள் இருந்தது) பெருக்கல் குறி இல்லாத மத்த பெட்டிய எடுத்து இது மேல போட்டு, பெருக்கல் குறி தெரியாம மறைச்சுட்டு எந்த சிக்கலும் இல்லாம வெளியே வந்தேன்.

குறும்பன் said...

\\மலைமேலுள்ள ஆலயம் பழம்நீ, இறக்கத்தில் உள்ளது திரு ஆவினன் குடி. \\

நிறைய பேரு மலை மீதுள்ள கோயில் தான் திரு ஆவினன் குடி அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அடிவாரத்துல இருக்குற குழந்தை வேலாயுதசாமி கோயில் தான் திரு ஆவினன் குடி அப்படின்னு தெரியமாட்டிக்குது. அதாவது அறுபடை வீடு மலைமேல் நிக்குற தண்டபாணி அல்ல அடிவாரத்துல இருக்குற குழந்தை வேலாயுதசாமி ஆகும்.