6/24/2011

தமிழ்மணத் தேன் பருக வாரீர்! வாரீர்!!

தாமரை பூத்த
தடாகமடி...
தமிழ்மணத் தேன் பொங்கி
பாயுதடி...
தாமரை பூத்த
தடாகமடி...

பாமாலையால்
வற்றா
பொய்கையடி...

பாமாலையால்
வற்றா
பொய்கையடி... - தமிழ்ப்
பைங்கிளிகள் சுற்றி
பாடுதடி-செந்
தாமரை பூத்த
தடாகமடி...
தமிழ்மணத் தேன் பொங்கி,
பாயுதடி
தாமரை பூத்த
தடாகமடி....

காவியச்சோலை அதன்
கரை அழகே
கவிஞர்கள்
கற்பனைக்கோர்
தனிச்சுவையே...

ஆவிமகிழும்
தமிழ்த்
தென்றலதே இசை
அமுதினை
கொட்டுது பார் அதனருகே - செந்
தாமரை பூத்த
தடாகமடி...
தமிழ்மணத் தேன் பொங்கி,
பாயுதடி...
தாமரை பூத்த
தடாகமடி....

(காணொலியில் இசைத்தவர், தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்)

இசைத்துமகிழ் நல்யாழே
கரும்புதந்த தீஞ்சாறே
கனிதந்த நறுஞ்சுளையே
அரும்புதந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
என மனமுருகி
நெஞ்சு நிறைந்து
எங்கள் வாழ்வும்,
எங்கள் வளமும்,
மங்காத தமிழென்று
சங்கே முழங்கு
என உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறோம்? ஏன்?

சுகமோ
துக்கமோ
நெகிழ்ச்சியோ
புகழ்ச்சியோ
தாழ்ச்சியோ
வீழ்ச்சியோ
உவப்போ
கசப்போ

அவனவன்
அவனவன் தாய்மொழியில்
தன் இனத்தாரோடு
தன் இனம்
தன் மரபு
தன் மக்கள்
தன் பண்பாடு
எனத் தனக்கு வாய்த்தவற்றோடு

ஆறுதலைத் தேடுவதும்
அரவணைத்துக் கொள்வதும்
கூடிக் களிப்பதும்

புலம்பெயர்ந்த மண்ணில்
தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப்
போன்றதொரு உணர்வினைத்
தருவதில்லையா?
தாய்ப் பசுவைக் கண்டதொரு
கன்றைப் போன்றொதொரு
உணர்வினைத் தருவதில்லையா??

அடுத்த வாரம்,
ஜூலை 2,3 ஆம் தேதிகளில்
சனி, ஞாயிறு கிழமைகளில்
தென்கரோலைனா மாகாணம்
சார்ல்சுடன் எழில்மிகு நகரில்
நடக்க இருக்கும்
தமிழ்த் திருவிழாவில்
கலந்து கொள்வோம்!
நட்பு பாராட்டுவோம்!!
வாரீர்! வாரீர்!!

பெருமழைப் புலவர் பொ.வெ.சோமசுந்தரனார்
நூற்றாண்டு விழா

சூலை இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்கள்
சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில்
தென்கரோலைனா மாகாணம்
சார்ல்சுடன் நகரில்
 எழுச்சிமிகு தமிழ்த் திருவிழா

சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்

தமிழிளையோர் வழிகாட்டி இராதிகா சித்சபேசன் அவர்கள்

பன்முகக் கலைஞர் நடிகர் நாசர் அவர்கள்

கோடைமழை வித்யா அவர்களது நாட்டியம்

திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம்

புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை

நகைச்சுவை நடிகர் சார்லி அவர்கள்

இளந்தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

கவிஞர் நா,முத்துக்குமார் அவர்களது தலைமையில் கவியரங்கம்

அய்யா அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் பட்டிமண்டபம்

நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களது இலக்கிய விநாடி வினா

தமிழேந்தல் பொற்செழியன் அவர்களது தமிழ்த் தேனீ

ஆய்வாளர் முனைவர் S.பழனியப்பன் அவர்கள்

இன்னும் ஏராளமான 
உள்ளூர்த் தமிழர்களின் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள்

கண்கவர் மீனகம் மற்றும் எழில்மிகு கடற்கரைகள்

சார்ல்சுடன் நகரின் செறிவுமிகு வரலாற்றுத் தளங்கள்

கண்டு களிக்க ஏராளம்! ஏராளம்!!

அணி திரள்வோம்! அன்பு பாராட்டுவோம்!! 


குறிப்பு: வழமை போலவே, விழா அரங்கத்தில் இருந்து நிகழ்ச்சிகளை வலையுலகுக்கு உடனடியாகத் தொகுத்து அளிக்க இருப்பவர், பணிவுடன் பழமைபேசி.

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

தாமரை பூத்த
தடாகமடி...
தமிழ்மணத் தேன் பொங்கி
பாயுதடி...
தாமரை பூத்த
தடாகமடி... //

கண்களுக்கும் கருத்துக்கும்
விருந்து படைக்கும் அற்புத பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

சத்ரியன் said...

// பணிவுடன் பழமைபேசி.//


அண்ணே! அண்ணே!

தொகுப்பை எதிர்ப்பாத்துக்கிட்டிருக்கோம்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com///

வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.