1/03/2013

பின்னந்தி வேளையில்

நாளையிலிருந்து 
பள்ளிக்கூடம் இருக்கு
பேசாமப் படுங்க
மூனு பேரும்!

ஒளியற்ற வெளி
அரவமற்ற அறை
வெளியே புல்வெளியில்
வெடிக்கும் பனிக்குமிழிகளின்
மெல்லொலி மட்டும் 
கூர்மையாய்க் கேட்கிறது 
ஒன்றுக்கும் 
மற்றொன்றுக்குமான
கால இடைவெளியில்!!

கணினியை முடுக்கி
வலை மேய ஆசைதான்
ஆனாலும் அச்சம்
ஆம்
இன்னமும்
திறந்தபடியேதான் 
இருக்கின்றன 
அந்த ஆறு காதுகளும்!!

No comments: