1/05/2013

ஆமா, அப்பா சரியில்லை

நான்
சவாரி போகவேண்டும் என்றாள்!
முதுகில் வைத்து
நான்கு கால்களில்
நான்கு சுற்று சுற்றி வந்தேன்!!

இப்ப போயி
புல்லைத் தின்னு என்றாள்!
இலைக்கோசுத் தழையை
நாவால் துழாவித் தின்றேன்!!

நீ போயிட்டு
அப்பாவை வரச்சொல் என்றாள்!
நான்கு கால்களை
இரண்டாக்கி நிமிர்ந்து நின்றேன்!!

சொல்வதைச் சொன்னபடி
அந்த குதிரை செய்கிறது!
நீங்கள்தான் சொல்வதெதையும்
சொல்கிறபடி செய்வதே இல்லை!!
Bad Appa!!!

1 comment:

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு.