9/28/2012

நம்பிக்கை



பறவையானது
மரத்தின் கிளையில்
அமர்ந்திருப்பது
கிளையின் மீதான
நம்பிக்கையில் அல்ல!
தன்னால் பறந்துவிட
முடியும் என்பதாலே!!
பறக்கும் விமானத்தில் 
அமர்ந்திருந்த நான்
எதன் மீது
நம்பிக்கை வைப்பது?
இருப்பினும்
எனக்கே தெரியாத 
எதோ ஒன்றின் மீது
ஊன்றிய என் நம்பிக்கையின்
விளைவாகப் பிறக்கிறது 
இக்கவிதை!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...?

நம்பிக்கை மீது நம்பிக்கை வைக்க வேண்டியது தான்...!