7/01/2011

2011 FeTNA விருந்தினர் மாலை - படங்கள்

மிகவும் இரம்யமானதொரு இயற்கைச் சூழல். மீனகம். கண்கவர் வண்ணங்களில், வகைவகையாய் மீன்கள். மீனகம் முற்றத்தில் வந்து நின்றாலோ, கடலைத் தழுவி வரும் இனிய மாலைக் காற்று நம்மையும் தழுவிச் செல்கிறது.

நீலக் கடல்வெளியில், இராட்சத கப்பல்கள் முதல் சிறு படகுகள் வரை வகை வகையாய் கலங்கள். அவற்றை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போதே, ஆங்காங்கே மேலெழும்பிச் செல்லும் டால்பின் வகைப் பெருமீன்கள். கண்ணுக்கு பார்வை கிடைக்குமளவுக்கு நீல்வண்ணம் நீண்டு கிடக்கும் பரவசக் காட்சி.

இவை நடுவே, தமிழ் உறவுகள் கதைத்துக் கதைத்து உற்சாகக் கடலில் மிதக்கும் காட்சி. மீனகமே இன்தமிழ் கேட்டுப் பூரித்தது.

முக்கிய விருந்தினர்கள் அனைவருக்கும் பேரவைத் தலைவர் முனைவர் பழனிசுந்தரம் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் தெண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்பு நல்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து, பனைநில தமிழ்ச்சங்கத்தினர் முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

நிறைய தமிழுறவினர் வந்து நலம் விசாரித்தனர். அகமலர்ச்சிக்கு எல்லையே இல்லை. பெருமகிழ்ச்சியுடன் பேரவை முன்னோடியினருடன் நானும் நலம் விசாரித்து, அளவளாவி மகிழ்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.

எனக்குப் பணி நிமித்தம் அறைக்கு வர வேண்டி இருந்தமையால், நிகழ்ச்சி நிறைவு பெறுவதற்கு முன்பே விடைபெற வேண்டியதாயிற்று. இயற்கைச் சூழலுடன், பலவகையான உண்டி மற்றும் பானங்களுடன், தேன்தமிழ் உறவுகளுடன் ஒரு இனிய மாலைப் பொழுதை அனுபவிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்த பனைநில தமிழ்ச்சங்கத்தாருக்கும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!

நிழல்படங்கள் உதவி: திரு.கண்ணன் மற்றும் திரு.சிவன் அவர்கள்

சுட்டியைச் சொடுக்கி, படங்களைப் பெரிய அளவில் கண்டு மகிழுங்கள்!!





--சார்ல்சுடன் கடற்கரை முற்றத்தில் இருந்து பழமைபேசி!!

3 comments:

அரசூரான் said...

வந்துட்டாங்கையா... வந்துட்டாங்க... வாங்க வாங்க.

பணி பணி என்று சொன்னது பதிவு போடுறதுதானே?

vasu balaji said...

அருமை. பகிர்வுக்கு நன்றி.

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.