11/21/2013

எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??

வட்ட மேசை!!
அனைவருக்குமான
பொதுப்புரிதல் வேண்டி
யாராவது பேசுபொருள் குறித்து
சுருக்கமாய்ச் சொல்லுங்கள்!!
ஒருமனதாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டது
ஏதுமறியாமல் வந்துவிட்ட
அலுவலக அம்மணியின் சமாளிபிகேசன்!!

சுகந்தம்
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்ளவில்லை!
கைகோத்தபடி
இருவருமாய்
ஒரு முறை சுற்றி வந்தார்கள்!
இதழ் பதித்து
தனித்தனி
கார்களில் புறப்பட்டுப் போனார்கள்!!
வெறுமையாகிப் போன
குளக்கரையெங்கும்
சிநேகித வாசம்!!


வாய் திறவாமல்...
சீக்கிரம்
வாய மூடிட்டு
சாப்பிடு!
மறுபக்கம் திரும்பி
மெளனமாய் வீசப்படும்
அந்தப் பார்வைக்குப் பொருள்
எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??


நேற்று நான்...
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்ன சொன்னாலும்
புரியப் போவதில்லை மனையாளுக்கு!
எனவேதான்
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
பற்றற்று இரு
உலகம் உய்விக்கும்
என்றான் புத்தன்!
பற்றுக் கொள்
சகல உயிரினங்களும்
உவப்பினுள் உய்விக்கும்
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்றோ வாழ்ந்த புத்தனுக்கு
தெரிந்திருக்க வேண்டுமென்பதில்
எந்தவொரு நியாயமுமில்லை
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!


தற்காப்பு
அடுக்களையில்
இலாகவமாய் ஒரு பேச்சு
அம்மா
இன்னிக்கி யாரையும்
திட்டக்கூடாது சரியா??


பிணக்கு
வரைபலகையும்
வண்ணக்கோல்களும்
கொடுத்துவிட்டால்
எதையாவது வரைந்து
வாழ்ந்து கொண்டிருப்பர்
வீட்டுக் குழந்தைகள்!
அப்படியான வாழ்வில்
இப்படியானதொரு பிணக்கு!!
நான் வரைஞ்ச வீட்டுல
அவ வந்து போறதுக்கு
கதவு திறந்து வெச்சிருந்தேன்!
அவ வரைஞ்ச வீட்டுல
கதவு மூடியே இருந்துச்சுன்னு
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!

3 comments:

Anonymous said...

வணக்கம்

பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே வாழ்த்துக்கள்

யசோதா.பத்மநாதன் said...

அழகு
மணிக் கோர்வைகள்!
மணியின் கோர்வைகள்!!

ஒரு கவிக்கண்களுக்குள் மட்டும் தான் சிக்கும் இத்தகைய புலப்படா புதுசுகள்.

வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்களும்!!