7/03/2013

இராவெல்லாம்!!

இராவெல்லாம்!!

நேற்றைய மாலையின்
தெருச்சந்தையில்
சகாய விலைக்கு
படப்பிடிப்பான் ஒன்று
வாங்கி வந்தேன்!
அங்கிங்கெனாது சுற்றி வந்து
இடையறா இராவெல்லாம் 
எடுத்துத் தள்ளினேன்!
அந்த பூத்தடாகத்தில்
குளித்துக் கொண்டிருந்த
கானகத்து மங்கை!
இதழ்கள் நொந்துவிடாதபடிக்கு
அனுசரணையாய் அமர்ந்து
உண்டு மகிழ்ந்த பட்டாம்பூச்சி!
இந்த மலரின் மகரந்தம்
அந்த மலரின் சூலில்
துளிர்க்கும் அந்த மரவட்டை!
மூக்கும் மூக்கும் உரசி
மாமன் மகன்
அத்தை மகள்
விளையாட்டு விளையாடிய
அந்த இளந்தாரிச் சிட்டுகள் இரண்டு!!
விடிந்ததும் போய்
ஆவற்கண்களில் பார்க்கிறேன் 
அதில் ஒன்றுமேயில்லை!!