1/28/2012

எழுமணி

காற்றாகப் பறந்து சென்று கழனிகள் மடை திறந்து
மாற்றினார் வாய்க்கால்! மறித்தார் நன்றே வடிகால்!
தென்னாடு செழிக்கக் கூத்தாடினோம் வைகைவளம் கண்டு!
பிரிட்டிசு கோமானே நீர் கொண்ட செல்வமெலாம்
ஈந்து கட்டினாயே முல்லைப் பெரியாறு!
தமிழரெலாம் தழைத்தோங்க ஆனாய் நீயே வரலாறு!!
image.png 
தென்னகக் குலசாமி பென்னிகுக்
************************************************************

கண்டறிவாய்எழுந்திரு நீஇளந்தமிழாகண்விழிப்பாய்!
அமெரிக்க செல்வச் சிறப்புமிகு வாழ்வுதனை உதறினேனே நானும்
கூடங்குளம் அணு உலை கூற்றம் எம்மண்ணைச் சுற்றி வளைத்திடவே
நானும் பூண்டேன் அறப்போர்தனை!
இதோ அணிவகுத்தார் எம்மக்கள் என்னோடு எனக் களம் புகுந்த
உதயகுமாரா! சோதரா!! நன்றே செய்யும் நீ அயராதே!!!
அகலும் தமிழ்நாட்டின் அல்லெல்லாம்!
 நாம் கொள்வோம் அறம்! அறம்!! அறம்!!!
Kumar
முனைவர் சு.பா.உதயகுமார்
************************************************************

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் எங்கும் தமிழ் ஆளும்
தமிழ் கொண்டோம்! அரசியல் கற்றோம்!!
புகுந்த நாட்டு மக்கள் மனம் புகுந்தோம் நற்செயலாலே!!
அமரவைத்தார் கனடிய நாடாளும் சபைதனிலே!
பகர்ந்திட்டோம் நம்நிலையை செந்தமிழ்ச் சொல்லாலே!
இன்னலது எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
அறச்செயலது எதற்கும் துணிந்தால் எங்கும் தமிழ் ஆளும்!!
இராதிகா சித்சபை ஈசன்

குறிப்பு: மிசெளரி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்காகப் படைத்தது!

1 comment:

ஓலை said...

Pazhamai thayaraayittaarudoi !