9/08/2015

அனாதிகாரணம்

அனாதிகாரணம்

சத்தமின்றி வெடித்த 
பலூனைப் பார்த்து அழுது வெடிக்கிறாள்!
அக்கா, உள்ளிருந்த சத்தத்தை உடைச்சிட்டாப்பா!
அக்கா, உள்ளிருந்த சத்தத்தை உடைச்சிட்டாப்பா!!

கனவின் கனவு

நான் கனவு கண்டு கொண்டிருப்பதாக
நேற்று இரவு எனக்கு ஒரு கனவு!
அங்கென்ன செய்றீங்கயெனும்
குரலில் தகர்ந்து போகிறது
கனவும் கனவின் கனவும்!!

இன்று வருமா?

இன்னொரு நாளைக்கு
வாங்கித்தர்றதாச் சொன்ன நாளு
எப்ப வரும்?
இன்னிக்கு வருமாப்பா?
நாளுக்குள் நாள் வருவதும் சாத்தியமானது!
முப்பது வெள்ளி கொடுத்து வாங்கியவுடன்!!

-பழமைபேசி

No comments: