12/30/2010

இசை தேவனின் இசைத் தாலாட்டு!

நான் கல்லூரியில் இருக்கும் போதுன்னு நினைக்கிறேன்... ஒரு முகப்புப் பாடல்... ‘ஆனி, ஆடி ஆவணிக்கு மாலை வரும்...” இப்படிப் போகும்... அது ஒரு நாடகத்தினுடைய முகப்புப் பாடல்ன்னு நினைக்கிறேன்... மிக நீண்ட நாட்களுக்கு, என்னுள் அதனோட பாதிப்பு இருந்திச்சி....அந்தப் பாடல் பற்றின கூடுதல் விப்ரம் தெரிஞ்சிருந்தா சொல்லிட்டுப் போங்க சித்த... புண்ணியமாப் போகும் உங்களுக்கு!

அதற்கு அடுத்தபடியாக.... நந்தலாலா படத்தின் பின்னணி இசை... படம் பார்த்து முடிச்சவுடனே, நம்ம பாலாண்ணனங்கிட்டக் கேட்டேன்... பின்னணி இசை மட்டும் எனக்கு வேணும்... கிடைக்குமான்னு... அவரும் சொன்னாரு, டோரண்ட் கோப்பிலிருந்து பிரிச்செடுக்கலாம்... முயற்சி செய்யுங்க பழமைன்னு...

அதுக்கப்புறம் பார்த்தா, எதோ ஒரு புண்ணியவான் அந்த வேலைய ஏற்கனவே செய்து வெச்சிருக்காரு...ஆனாலும் அவரு முழுப் படத்தையும் செய்யாம வுட்டுட்டாரு.... தினமும் இரவு நித்திரை கொள்ளுறதே இந்தப் பின்னணி இசையோடத்தான்.... நீங்களும் கேட்டுப் பாருங்க... இதமா இருக்கும்....



நம் பரிதவிப்பை முறியடித்த அன்புப்பதிவர் அருண்மொழிவர்மன் அவர்கட்கு உளமார்ந்த நன்றிகள்!!!

ஓ... ஓகோ ஓஓஓ ஓஃகொஃகோ.....

என் மனம் கரைபுரண்டுச் செல்ல
செல்லச் செல்ல கண்மணீ...
காமனை வசம்பிடித்த மண்ணோ
சின்ன சின்ன முத்தம் இட்டுப் பாடுநீ

ஆசையில் வானுலாப் போகலாம்
மோகமோ தாகமோ தீரலாம்...
கூடலாம்... வாழலாம்..
ஆடம்பரத்தில் ஆடலாம்.....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆனி ஆடி ஆவணிக்கு மாலை வரும்
மாலைவரும் மாலைவரும்
மணிக்கு மாலைவரும்
வேளைவரும்...
சேலைவரும்...
சோலைவரும்...
உனக்கு சேதி வரும்....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்...

ல்லூட்...டி பண்ணுதுங்கோ...
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

ல்லூ..ட்டி பண்ணுதுங்கோ
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

மன்னவன் கண்களில் சந்தேகம் இல்லை
வீராதி வீரனாக நீ...
கோடியில் ஒருத்தன் நீ.... பேரின்ப நாதா....
மாரோடு வந்துலாவு நீ....
தேவனே... சாதகம், தேவை இந்நாளில்...
எந்த மன்மதன் செய்கையும்.. உன்போல் வராது...
தேவனே... சாதகம், தேவை இந்நாளில்...
எந்த மன்மதன் செய்கையும்.. உன்போல் வராது சூரனே...

மெட்டுக்கட்டிப் பாடட்டுமா?
அத்துமீறிப் போகட்டுமா??
பச்சரிசிப் பல்லழகி...
உன்னைத்தொட்டு காணட்டுமா?
ஈரேழு லோகத்திலும்... யாரடி உன்போல்?
ஏழேழு ஜென்மத்திலும்... நீதானே இரம்பா...

ல்லூ..ட்டி பண்ணுதுங்கோ
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

என் மனம் கரைபுரண்டுச் செல்ல
செல்லச் செல்ல கண்மணீ...
காமனை வசம்பிடித்த மண்ணோ
சின்ன சின்ன முத்தம் இட்டுப் பாடுநீ

ஆசையில் வானுலாப் போகலாம்
மோகமோ தாகமோ தீரலாம்...
கூடலாம்... வாழலாம்..
ஆடம்பரத்தில் ஆடலாம்.....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்
மாலைவரும் மாலைவரும்
மணிக்கு மாலைவரும்
வேளைவரும்...
சேலைவரும்...
சோலைவரும்...
உனக்கு சேதி வரும்....

சேருவாரு சேர்ந்துப்புட்டா நந்தவனம்
அந்த... நெனப்புல வந்தணைக்கையில்
ஆடி ஆனி ஆவணிக்கு மாலை வரும்...

ல்லூ..ட்டி பண்ணுதுங்கோ
கும்பலோ மொத்தத்துல பம்முதுங்கோ
சோக்கா துள்ளுதுங்கோ
அய்யய்யோ பக்கத்துல பொங்குதுங்கோ...

12 comments:

பழமைபேசி said...

காசு குடுத்து வாங்கிக் கேட்க வேண்டியதுதானே நாதாரின்னு கேட்கலாம் நீங்க... காசு கொடுத்து வாங்கவும் நான் தயார்தான் மக்கா... ஊர்ல இருந்து வாங்கியாறச் சொல்லி இருக்கேன்... வர்ற வரைக்கும் இதை வெச்சி ஓட்டிகிடுறேன் செரியா?!

வல்லிசிம்ஹன் said...

அடடா இந்தப் பாடலைத் தானே நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இந்த நாள் இனிய நாள். இந்தப் பாடல் கிடைத்தால் மனதின் ரீங்காரம் நீடிக்கும் எந்தப் படத்தில் வந்தது என்றும் தெரியவில்லை.:(

உங்களுக்கு என் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் பா.

Anonymous said...

//
காசு குடுத்து வாங்கிக் கேட்க வேண்டியதுதானே நாதாரின்னு கேட்கலாம் நீங்க... காசு கொடுத்து வாங்கவும் நான் தயார்தான் மக்கா... ஊர்ல இருந்து வாங்கியாறச் சொல்லி இருக்கேன்... வர்ற வரைக்கும் இதை வெச்சி ஓட்டிகிடுறேன் செரியா?!

//
இப்படி எல்லாம் சொல்லுறது எங்கள மாதிரி ஆள்கள கேவல படுத்துறது மாதிரி இருக்கு...
இன்டர்நெட்'ல இருந்து பதிவிறக்கம் செய்யிறது எப்படி இலவசம் ஆகும் ?? நாமதான் இன்டர்நெட்டுக்கு காசு கட்டுரோம்ல... :)

அருண்மொழிவர்மன் said...

நீங்கள் கேட்ட ஆனி ஆடி ஆவணிக்கு மாலை வரும் பாடல், பார்வைகள் என்கிற இசைத்தொகுப்பில் வெளியானது, என் மனம் கரை புரண்டு செல்ல என்று தொடங்குகிற பாடல். படம் வெளியாகவில்லை என்றே நினைக்கிறேன். புஷ்பவனம் குப்புசாமி பாடியிருந்தார்

பழமைபேசி said...

@@அருண்மொழிவர்மன்

கோடானு கோடி நன்றிகள்; நெடுநாளைய பரிதவிப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள்!!

இப்போது நினைவுக்கு வருகிறது. ஆமாம், சிங்கப்பூரில் இருந்து எனது நண்பர் வாங்கி வந்த இசைத் தட்டில் அப்பாடல் இருந்தது. எனது பெற்றோரிடம் இன்னமும் அந்த இசைநாடா இருக்கும் என நினைக்கிறேன். நன்றியும் வாழ்த்துகளும்!!

@@வல்லிசிம்ஹன்

அம்மா விடை கிடைத்து விட்டது;மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்!!

@@நல்லவன் கருப்பு...

இஃகிஃகி!! வாழ்த்துகள்!!

ஈரோடு கதிர் said...

பகிர்வுக்கு நன்றிங்க மாப்பு!

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஐயா.

vasu balaji said...

அட இது நம்ம புஷ்பவனம் குப்புசாமி:) அருமையான பாட்டு. நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.

deen_uk said...

வாவ்...ஒரு காலத்தில் இந்த பாடலுக்கு நான் அடிமை! எனது காலேஜ் படிக்கும் காலத்தில் வேறு ஏதோ ஒரு படத்துடன் வந்த காம்பினேசன் சீடியில் வந்த பார்வைகள் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்..! சீடி வரும் முன்னரே இந்த பாடல் வெளியாகி,இது ஏ .ஆர் ரஹ்மான் (ரஹ்மான் வளர்ந்து வந்த காலம்! மேலும் ''கடவுளே இது ரஹ்மான் இசையாக இருக்க வேண்டும்''என கடவுளை வேண்டிகொண்டதும் உண்டு! அவ்ளோ பைத்தியம் அவர் இசை மேல்!) பாடல் என வதந்தியாக இருந்தது! காரணம் இது வித்யாசமாக அமைந்த FOLK SONG.! அன்றைய காலகட்டத்தில் மிக வித்யாசமான இசை...இன்றும் சலிக்காத பாடல்..படம் வெளிவரவில்லை என நினைக்கிறேன்..இந்த பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

சிநேகிதன் அக்பர் said...

புத்தாண்டு வாழ்த்துகள்ணா!

a said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

அருண்மொழிவர்மனுக்கு மனம் நிறைந்த நன்றி.நன்றி நன்றி.
அன்ன்பு மணிக்கும் நன்றி.

இந்தப் பாடல் 1995 வருடத்தில் கேட்டேன் என்று நினைக்கிறேன். அப்போது சன் மியூசிக் வந்த புதிது.
எங்கள் பெண்ணுக்கு திருமண சம்பந்தம்
பேசிக் கொண்டிருந்த போது இந்தப் பாடலை ஒரு நாள் கேட்க நேர்ந்தது.
அப்போதே அடிமையானேன் இந்தப் பாடலுக்கு. எதிர்கால நிகழ்ச்சியைச் சொல்லும் நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது. மனதில் பதிந்து விட்ட இந்தப் பாடலைப் பிறகு கேட்க முடியவில்லை.
உங்கள் உதவியில் இன்று மனம் நிறைந்தது.இணைய நட்புகளுக்கு வாழ்த்துகள் மா.