5/28/2025

கொசுவர்த்தி 🌀

கொசுவர்த்தி 🌀

ஏசுவடியான்ங்ற பெயர்ல ஒரு நண்பர், அந்தப்பக்கமா குடியிருந்தாரு. இணையத்துல ரவுசு செய்துகிட்டு செம பம்பலா இருப்பாரு. “அண்ணே, தம்பியண்ணன் போஸ்டன் வந்துருவாரு, அதுக்கப்புறம்...”னு இழுத்தன். ஒன்னியும் பிரச்சினையில்ல நாம் பார்த்துக்கிறன்னு சொல்லிட்டாரு. அப்படி அப்படி, ஒரு இருவது இருவத்தி அஞ்சி பேரு கூடிட்டாங்க. தம்பி அண்ணன் என்கின்ற, நாமஉ புதுகை அப்துல்லாவும் வந்து சேர்ந்திட்டாரு. யாரும் நகர்றமாரி இல்லை. என்னோட அறையிலயே, தரையில விரிச்சுப் படுத்துகிட்டாங்க. அப்துல்லா அண்ணனும் தரையிலயே படுத்துகிட்டு ஒவ்வொன்னா கொளுத்திப் போட்டுகினு இருந்தாரு. வெடிச்சிரிப்புதான். பேசறாங்க பேசறாங்க... பேசிகிட்டே இருக்காங்க. நான் காலையில ஒரு நாலு மணி வாக்குல, நான் அறியாமலே தூங்கிட்டன். மத்தவங்கள்ல நிறையப் பேர் தூங்கவே இல்லையாம். இப்படித்தான் 2010 பேரவை விழாவுல எங்க பொழுது போச்சு.

சென்ற ஆண்டும் கிட்டத்தட்ட அதே போலத்தான். ஒரு சிறு அறை. நாங்கள்லாம் தரையில ஒக்காந்துட்டம், ஒரு நேரத்துல கிட்டத்தட்ட 40 பேரு. ஏசியெல்லாம் வேலைக்கே ஆவலை. பால்கனி கதவு திறந்து விட்டாலும், ரூமுக்குள்ள வெக்கையோ வெக்க. காலையில மூணு, நாலுனு ரெண்டு நாளும். மூனாவது நாள் காய்ச்சலே வந்து போட்டுது. அன்பாலும் அக்கறையாலும் கழிந்த பொழுதுகள்.

இஃகிஃகி, இதோ வந்துவிட்டது அடுத்த ஆண்டு. ஜீன் 27ஆம் நாளே பொறப்புட்ருங்க. மிச்சிகன், கனடா, எங்கிருந்தாலும் சரி, மெதுவா வண்டிய உருட்டிகினு வந்தீங்கன்னா, சனிக்கிழமை, 28ஆம் நாள் சாய்ங்காலம் வந்து சேர்ந்திடலாம். நேரா, வில்மிங்ட்டன் பீச்சுக்கு வுட்ருங்க வண்டிய. அங்கனக்குள்ள ஏர்பிஎன்பியில ஒரு வீட்டப் புடிச்சி கும்பலா இருக்கலாம். சமச்சி சாப்டுகிட்டு, கடற்கரையில விளாடிகிட்டு, தாகசாந்தியும் பார்த்துகிட்டு, அங்கிருந்தேவும் பொட்டிதட்டிகினு நாலு நாள் இருந்தம்னா, புதங்கிழம வந்திரும். விடிஞ்சா விழா. பீச்சுக்கும் விழா வளாகத்துக்கும் ஒரு ரெண்டு மணி நேரம்தான். கூட்டிகழிச்சிப் பாருங்க. எல்லா செரி வரும்.

இந்தவாட்டி எல்லாமே உள்ளாரத்தான். தடுக்கி விழுந்தா தங்குமடத்துலதா தடுக்கி வுழோணும். சோத்துப் பந்திகளும் உள்ளாரயேதான். அந்தப் பக்கம் இருக்குற ஒரு நண்பர் வித்தியாசமானவர். அதாவது, வாழ்க்கய வாழ்றவரு. வெள்ளிக்கிழம சாய்ங்காலம் பொறப்பட்டு, பாண்ட் பார்க் குளத்துக்குப் போனவரு, திங்கக்கிழம காலையிலதான் வீட்டுக்கு வந்தாரு. என்னங்க இதூனு கேட்டன். ஆமா பழம, குளக்கரையிலயே கூரயக் கட்டி, தனிமையில ரெண்டு நாள் இருந்து போட்டு வந்தன்னு சொன்னாரு. அடிக்கொருக்கா, நடுநிசிப் படங்கள வேற டுவிட்டர்ல போட்டுகினு இருந்தாரு. அம்மணக்குளியல்னு அதிகால ரெண்டு மணிக்கு போட்டா வேற போட்டாரு. டுவிட்டரே அல்லோகலம் ஆகிடிச்சி. எதுக்கு சொல்றன்னா, அங்கனக்குள்ள அந்தமாரி குளங்கள், குளக்கரையில் தாவள வசதிகளும் இருக்கு.

இந்த ஒரு வாரப் போக்க வெச்சிப் பார்த்தா, சோல்ட் அவுட் ஆவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. டக்கு புக்குனு ஏற்பாடுகளைச் செய்து போடுங்க. தமிழாலயும் எணையுலா, கூடவே தண்ணியாலவும் எணையலாம், நான் கொளம், பீச்ச சொன்னனுங்க. வந்துருங்க அல்லாரும். வர்ட்டுமா!!

-பழமைபேசி.