நாளையிலிருந்து 
பள்ளிக்கூடம் இருக்கு
பேசாமப் படுங்க
மூனு பேரும்!
ஒளியற்ற வெளி
அரவமற்ற அறை
வெளியே புல்வெளியில்
வெடிக்கும் பனிக்குமிழிகளின்
மெல்லொலி மட்டும் 
கூர்மையாய்க் கேட்கிறது 
ஒன்றுக்கும் 
மற்றொன்றுக்குமான
கால இடைவெளியில்!!
கணினியை முடுக்கி
வலை மேய ஆசைதான்
ஆனாலும் அச்சம்
ஆம்
இன்னமும்
திறந்தபடியேதான் 
இருக்கின்றன 
அந்த ஆறு காதுகளும்!!
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment