வன்புணர்வுக்கெதிரான
போராட்டக் களத்தில்
எவனோ
இடுப்பைக் கிள்ளிவிட்டான்!
இதை மற்றவரிடம்
சொல்வதா? வேண்டாமா??
ஆறுதல் கிடைக்குமா?
அவமானம் நேருமா??
சீற்றம் கொண்ட புயலே
சிக்குண்டது புயலில்!!
இதை எல்லாம் வீணாக
எதுக்கு பெரிசு பண்ணிட்டு?!
அரவமற்று அடங்கிப் போனது
களமாடிய ஆவேசப் பெருங்காற்று!!
No comments:
Post a Comment