மெலிதாக எழுந்து
ஒய்யாரமாய்த்
தன் இடையை
ஆட்டி ஆட்டி
வளைந்து
நெளிந்து
நெகிழ்ந்து
ஆடுகையில்
திடீரென
இரண்டு சுற்று
மெதுவாய்த்
தன்னைத் தானே
சுற்றி வந்து
கண் சிமிட்டி
மென்மையாய்க் கிசுகிசுத்துச்
மென்மையாய்க் கிசுகிசுத்துச்
சிரித்துக் கொண்டிருந்தாளவள்!
என்ன தேமேன்னு
எதையோ பார்த்து
உக்காந்துட்டு?
வெரசாக் குடிச்சிட்டு
டம்ளரைக் குடுங்க
அரட்டி விரட்டிய
மனைவியின் குரலில்
காணமற் போனது
என் சரசம் மட்டுமல்ல
அந்த ஆவியழகியும்தான்!!
நான் வேறு ஏதோ ஆவி என்று நினைத்து விட்டேன்...ஹா... ஹா...
ReplyDeleteஅருமை... நன்றி...
நானும் உண்மையிலேயே ஆவி அனுபவம் போலனு வந்தேன்.
ReplyDeleteVery nice! beautiful observation and well written!
ReplyDeleteநல்ல கவிதை....
ReplyDeleteகாபி கப் படம் போடாதிருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்!