விநாயகனே வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே, ஞால முதல்வனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
நீர் கிழக்கு முகமாய், ஆற்றங்கரையோரம் அரசமர நிழலில் வீற்றிருப்பீர். அங்கு ஊர் மக்களும் வந்திருந்து,
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா!
என்று மனதார உருகிப்பாடி, எருக்கைப் பூச்சாத்தி, "தமிழின் சோதரனே! எம்தமிழை எமக்குத் தந்திடுவாய்!!" என்றும், "காத்திடுவாய்!" என்றும் வேண்டி தோப்புக்கரணம் இடுவார் நம்மக்கள். அந்த மக்களும், தமிழும் கூக்குரலிடும் ஓசை உமக்கு எட்டவில்லையா, ஞால முதல்வரே? இல்லை, எட்டியும் எட்டாதது போல் பாவிக்கிறீரா? சக்தி இல்லையேல், சிவம் இல்லை என்றார், உம் பெற்றோர் குறித்து! யாம் சொல்கின்றோம், பக்தன் இல்லையேல் முதல்வர் இல்லை. இந்தத் தொண்டர் இல்லையேல், தலைவரும் இல்லை. வேழ்முகத்து வேந்தே, போதும் உமது பொறுமை!
பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்
எம்மைக் காக்கும் பிள்ளையார்!
ஆற்றங்கரை மீதிலே
அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
நேரும் துன்பம் யாவையும்
நீக்கிவைக்கும் பிள்ளையார்
கூடிப்பாடும் தொண்டரின்
குறைகள் தீர்க்கும் பிள்ளையார்!
முதல்வா, முத்தமிழே, இந்த கடைக்கோடி பக்தனின் அறைகூவல் இதுதான் வேந்தே! வினைகள் தீர்த்து விடு, இனமான உணர்வு தளைக்க விட்டு, அமைதி எங்கும் பொங்க வழிவகை செய்து விடு!! இல்லாவிடில், வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த கதை என்பது, உமக்கு சொல்லித் தெரிவதில்லையன்றோ!?!
miga chariyaana pathivu...
ReplyDelete//BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
ReplyDeletemiga chariyaana pathivu...
//
நன்றிங்க!
நானும் ௬விக்கிறேன் உங்களோட சேர்ந்து
ReplyDeleteநானும் கூவிக்கிறேன்!
ReplyDeleteவேண்டுதலில் நானும் கலந்து கொள்கிறேன்!
ReplyDeleteதேவா..
நானும்....
ReplyDeleteநானும் முழுசாவே கூவிக்கிறேன்.... பெரிய்ய காது வெச்சுருக்காரு.. விழுதா பாப்போம்
ReplyDeleteதல நீங்க சீமாச்சு அண்ணா நன்பர்ன்னு தெரியும்! ஆனா இப்படி ஒரு சூப்பர் உள்குத்து பதிவு போடுவீங்கன்னு தெரியாது!
ReplyDeleteஉங்க புத்தாண்டு வாழ்த்தே ஒரு வித்யாசமா இருந்துச்சு! அப்பவே மைல்டா ஒரு டவுட்டு எனக்கு, இவரு பட்டைய கிளப்ப போரார்ன்னு:-))
தல நீங்க சீமாச்சு அண்ணா நன்பர்ன்னு தெரியும்! ஆனா இப்படி ஒரு சூப்பர் உள்குத்து பதிவு போடுவீங்கன்னு தெரியாது!//
ReplyDeleteமறுக்கா கூவிக்கறேன்
@@நசரேயன்
ReplyDelete@@Namakkal Shibi
@@ச்சின்னப் பையன்
@@Mahesh
@@அபி அப்பா
@@குடுகுடுப்பை
என்னோட கூவுதலோட, ஆதரவா உங்க கூவுதலையும் தெரிவிச்ச உங்க எல்லார்த்துக்கும் மனமார்ந்த நன்றி! அருள் கிடைக்க வேண்டுவோமாக!!
//thevanmayam said...
ReplyDeleteவேண்டுதலில் நானும் கலந்து கொள்கிறேன்!
தேவா..
//
நன்றிங்க ஐயா!
//அபி அப்பா said...
ReplyDeleteதல நீங்க சீமாச்சு அண்ணா நன்பர்ன்னு தெரியும்! ஆனா இப்படி ஒரு சூப்பர் உள்குத்து பதிவு போடுவீங்கன்னு தெரியாது!
உங்க புத்தாண்டு வாழ்த்தே ஒரு வித்யாசமா இருந்துச்சு! அப்பவே மைல்டா ஒரு டவுட்டு எனக்கு, இவரு பட்டைய கிளப்ப போரார்ன்னு:-))
//
அண்ணே, வாங்க, வணக்கம்! நம்ப சீமாச்சு அண்ணன் உங்களைப் பத்தி சொல்லி இருக்காரு. மிக்க மகிழ்ச்சிங்க!!
//பக்தன் இல்லையேல் முதல்வர் இல்லை. இந்தத் தொண்டர் இல்லையேல், தலைவரும் இல்லை. வேழ்முகத்து வேந்தே, போதும் உமது பொறுமை//
ReplyDeleteஎந்த முதல்வராலும் பாலும் தேனும் ஆறா ஓட வைக்கமுடியலை.
//"முதல்வருக்கு ஒரு அறைகூவல்!"//
ReplyDeleteஎன்னமோ இருக்குன்னு புரியுது...என்னான்னு தான் புரியலை!
உங்ககூட நானும் சேர்ந்துக்கிறேனுங்க...
ReplyDeleteஉங்கள் உணர்வு வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகின்றேன்!!!!!!!!!!!!
ReplyDeleteஈழத் தமிழன்
//
ReplyDeleteவிநாயகனே வினை தீர்ப்பவனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே, ஞால முதல்வனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
இந்தப் பாடல்தானே, எங்களுக்கு உயிர் மூச்சு. அதை நீர் மறந்து விட்டீரா?
//
நீங்க சொல்றது ரொம்பவும் உண்மை...முதல் பாட்டே விநாயகனே வினை தீர்ப்பவனே தான்...
@@சின்ன அம்மிணி
ReplyDelete@@மிஸஸ்.டவுட்
@@வேத்தியன்
@@Anonymous
@@அது சரி
எல்லார்த்துக்கும் மனமார்ந்த நன்றி! அருள் கிடைக்க வேண்டுவோமாக!!
unkalalaippunanru wish u well
ReplyDelete//karunanithy said...
ReplyDeleteunkalalaippunanru wish u well
//
Thank you buddy!
அப்படியே பரமசிவனுக்கு(பிரதமர்) வேண்டுகோள் கொடுங்க தம்பி.....
ReplyDeleteஅருமை.
ReplyDelete