எண்ணம்
சொல்
செயல்
இவை மூன்றும் கொண்டு
போற்ற வருகிறோம்
தமிழ்த்தாயே!
பால்ட்டிமோர் நகரில்
தமிழாலே நினை
ஆராதிப்பதெங்கனம்
என்பதெங்கள் எண்ணம்!
தமிழாலே
இணைந்திடுவோம்
செயலாலே
வென்றிடுவோம்
என்பதெங்கள் சொல்!
உனக்கான திருவமுது
வெள்ளிவிழா மலராக
தமிழ்த்தேனீ போட்டியாக
நயம்மிகு கவியரங்காக
பலவும் படைப்பது
என்பதெங்கள் செயல்!
எண்ணம்
சொல்
செயல்
இவை மூன்றும் கொண்டு
போற்ற வருகிறோம்
தமிழ்த்தாயே!!
எட்டுத்திக்கும்..எம் தமிழ்ஓசை ஒலிக்கிறது..
ReplyDeleteValka thamil
ReplyDelete