2/03/2012

நின் வாழ்த்தால் வசமானேனே!!

அகமுடையான், அன்பன்
கணவன்,ஆம்பான், ஆமுடையான்
ஆமக்கன்,நாயகன்,தவன்
தற்கொண்டான், தாட்டான்
துணைவன், நயந்தோன்
நாதன், பாங்கன், புவான்
பூண்டான், பெண்ணான்
மகிணன், மணந்தோன்,
மணவாளன், மணாளன்,
மனைக்கிழவன், மாப்பிள்ளை
வயவன், வல்லபன்
விழைந்தோன், வீட்டுக்காரன்
வேட்டான், கண்வாளன்
கண்ணாளன், உயிரான்
எனத் தமிழாலே எனக்காய்
எல்லாமுமாய் ஆனவரே
நின் வாழ்த்தால் வசமானேனே!!

2 comments:

vasu balaji said...

ஐ. வெள்ளைக்கொடி ஏற்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது:))

MOHAN said...

Ungal muyarchickku nanry,ithu pondru melum pala thagaval kalai ediparkirom