12/07/2011

இணையம்

வாசிப்பு

மாங்கு மாங்கென்று
வாசித்தேன் கவிதைகளை
ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
ஏதோ ஒன்றை
இவர்கள்
ஒளித்தே வைத்திருக்கிறார்கள்
இவர்கள் கவிஞர்களா?
கள்வர்களா??

தங்கமணி நிலவரம்

நாளொருமுறை
கேள்விக்கணைகள்
துளைத்தெடுத்தே
பழக்கப்பட்டவன்
இன்று நல்லதொரு
கேடயத்தோடே
அழைத்தேன்!
வ்ஞ்சிக்காரி
எப்படியோ
மோப்பம் பிடித்து
வீசினாள்
மலர்க்கணையை!!
பரவாயில்ல
வேணுங்றப்ப வாங்கிக்குங்க
கவிதாகிட்ட
தோசை மாவு!!!

4 comments:

vasu balaji said...

தோசை மாவுக்கே கேடயமா?:)))

பழமைபேசி said...

என்னுங்ணே செய்யுறது? ஊர்ல எவனோ எப்படியோ போறதுக்கு... நாம கெடந்து அல்லாட வேண்டியதாயிருக்கு!!

Suresh Subramanian said...

ivvalu simple....kavithai ezhutha mudiyuma... nice... www.rishvan.com

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
ஏதோ ஒன்றை
இவர்கள்
ஒளித்தே வைத்திருக்கிறார்கள்
இவர்கள் கவிஞர்களா?
கள்வர்களா??

அருமையான பகிர்வு..