6/05/2011

அரசி நகரைவிட்டு மிசிசிபி நதிக்கரையோரமாய்....

பொருளாதார நெருக்கடி நம்மை மட்டுமல்லாது, அமெரிக்க ஆசிய ஐரோப்பிய நாடுகளனைத்தையும் நெருக்கிய காலமது. ஆனாலும், நம்மை வா வாவென அழைத்து, அரவணைத்துக் கொண்டது அரசி மாநகரம். ஆம், கடந்த எட்டு ஆண்டுகால, சார்லட் நகர வாழ்க்கை மேம்பட்ட வாழ்க்கை. மாநகர மக்கள் மிகவும் இனிமையானவர்கள். பண்பாட்டில் நிறைவு கொண்டவர்கள். நகரமோ, மென்மேலும் வளர்ந்து வரும் நகரம்.

அடுத்த ஆண்டு, அமெரிக்க அதிபராக இருக்கும் ஒபாமா அவர்கள் சார்ந்த கட்சியின் மாநாடு நடக்கப் போவது இந்நகரில்தான். கோலாகலக் கொண்டாட்டங்களும், உலகின் அரசியலைத் தீர்மானிக்கப் போகிற மாநாடும் நடக்கவிருப்பது இந்நகரில்தான். ஆனால் எமக்கு? மாற்றம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.

அமெரிக்காவின் நீள்நெடு நதியாம், மிசிசிபி நதிக்கரையோரம் நீயுந்தான் வாழ்ந்து பாரேன் என இயற்கை நம்மைப் பணித்து விட்டது போல உணர்கிறேன்.

ஈரேழு நாட்களாய், மிச்சிபி நதிக்கரையையும் அண்டியுள்ள பகுதிகளையும் இடவலம் வந்து கொண்டு இருக்கிறேன்.

எங்கும் பச்சைக் கம்பளம் விரித்தாற்ப் போன்றதொரு தோற்றம். கரைகள் இரண்டின் விளிம்புகளைத் தொட்டபடி, தளும்பித் தாவிப் பாய்ந்து கொண்டிருக்கிறது மிசிசிபி. அக்கரையோரத்தில் வாழும் மனிதர்களின் பூர்விகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னையதாம். செவ்விந்தியர் தலைவர் சொன்னார். பண்பாட்டுக் கூறுகளை எடுத்தியம்பினார். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

தமிழ்ச் சங்கம் இருக்கிறதா என வினவினேன். இங்கே தமிழ் மட்டுமல்ல. உலகின் அத்துனை தேசிய இனங்களும் உண்டு. அவற்றைப் பெரிதும் மதித்துச் செயல்படுகிறோம் எனச் சொல்லி, தமிழ், மலையாளம், தெலுகு, கன்னடம் உள்ளிட்ட பெரும்பாலான சங்கங்களின் பிரதிநிதிகளையும் எமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், செல்பி ஒன்றியத்தின் கல்வி இயக்குனர் மெலிசா ஓனிடாசு அவர்கள்.

பண்பாட்டைப் பறைசாற்றுவதில் நம்மவர்கள் அனைவருமே முனைப்பாய் இருக்கிறார்கள். ஆனாலும், இங்கு மலையாளிகளுக்கு நிகர் எவருமிலர். இருப்பவர் குறைவாக இருப்பினும், நிறைவாய் இருப்பதைக் காண முடிகிறது. மெம்ஃபிசு வாழ்க்கையைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இருப்பினும், இப்போதைக்கு இக்காணொலிகளை உங்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கால அவகாசம் வாய்க்கும் போது, தவறாது கண்டு களியுங்கள்!!
























இறுதியாக, செந்தமிழ் நாடு.... முதல் சில மணித் துளிகள் சிறு சலசலப்பு இருக்கும்... அதையும் கடந்து பாருங்கள்... வெகு அருமை!!


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

மெரிக்காவின் நீள்நெடு நதியாம், மிசிசிபி நதிக்கரையோரம் நீயுந்தான் வாழ்ந்து பாரேன் என இயற்கை நம்மைப் பணித்து விட்டது ///
அருமையான பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

a said...

பயணத்தினூடே இருந்தாலும் உங்களுக்கு இந்த (நிரந்தர) இட மாற்றம் கொஞ்சம் அதிர்வை உண்டாக்குவதில் ஆச்சரியமில்லை...

Anonymous said...

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika